search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Loksabhaelection"

    தேனியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வாரிசு மற்றும் ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொண்டார். #PMModi #LoksabhaElections2019
    தேனி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டி விலக்கில் அதிமுக-பாஜக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:

    நாடும் நமதே, நாற்பதும் நமதே. முதலில் ஜாலியன் வாலாபாக் 100வது ஆண்டு நினைவுதினமான இன்று, உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன். நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக மக்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய இந்தியாவை நோக்கி நாம் சென்றுக் கொண்டிருக்கிறோம்.

    ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும், வளத்துடனும் வாழ்வதை உறுதி செய்யவே புதிய இந்தியா. காங்கிரசும் திமுகவும் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின்,  ராகுலை பிரதமர் என கூறுகிறார். மக்கள் யாரும் அதனால் மகிழ்ச்சி அடையவில்லை என்பதே உண்மை.  காங்கிரஸ்- திமுக கூட்டணியை  பொருத்தவரை சிறுபிள்ளை தனமாக செயல்படுகின்றனர்.



    ஆனால் உங்கள் காவலாளி உங்களுக்காக சேவை செய்ய காத்திருக்கிறேன். நான் எந்த தீமைக்கும் வழி விடமாட்டேன். தமிழகத்தை வளமான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் திமுக , காங்கிரசுக்கு முடிவு கட்ட வேண்டும். வாரிசு, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு திமுக- காங்கிரஸ்  கூட்டணி பாதிப்பானது.

    வீரமான தேனி மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் என்னைப் பற்றி தெரியும். காங்கிரஸ் நாட்டை கொள்ளையடிக்கிறது. பயங்கரவாதிகளுக்கு  எதிராக  நடத்தப்பட்ட ராணுவத்தினரின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து  காங்கிரஸ் கட்சியினர் கேள்வி கேட்கிறார்கள். தேசத்தின் அனைத்து பயங்கரவாதிகளையும் ஒழிக்க தொடர்ந்து போராடுவேன்.

    கடந்த 60 ஆண்டுகாலமாக நம் தேசத்திற்கு அநியாயம் செய்தவர்கள் தான் காங்கிரஸ் ஆட்சி.  தலித் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு காங்கிரஸ் நீதி தருமா? காங்கிரஸ் ஆட்சியில் போபால் பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த மக்களுக்கு நியாயம் தருமா?

    இவ்வாறு அவர் பேசினார்.  #PMModi #LoksabhaElections2019

     
    திருச்சியில் இன்று நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஏழைகளுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் என பாராட்டினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    திருச்சி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் உள்ள உழவர் சந்தையில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு,  திருச்சி தொகுதி பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து  பேசியதாவது:

    இந்த திருச்சி திமுகவின் எஃகு கோட்டை. திருச்சியில் தான் பல்வேறு சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்தியில் ஆளும் மோடியின் சர்வாதிகார ஆட்சியினையும், மாநிலத்தில் ஆளும் உதவாக்கரை எடப்பாடி ஆட்சியினையும் பற்றி ஒரு சில வரிகள் கூறவிரும்புகிறேன். அப்போதெல்லாம் வங்கியில் கொள்ளை அடிப்பார்கள்.  இப்போது வங்கியையே கொள்ளை அடிக்கிறார்கள். அப்போதெல்லாம் கோமாளிகள் சர்க்கஸில் இருப்பார்கள். இப்போது சர்காரிலேயே இருக்கிறார்கள்.



    அப்போதெல்லாம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்கள். தற்போது விவசாயத்தையே தள்ளுபடி செய்கிறார்கள் . அப்போதெல்லாம் மீனவர்கள் மீன்களை பிடித்தார்கள். தற்போது மீனவர்களையே பிடிக்கிறார்கள். அப்போது வேட்பாளர்களை விலைக்கு வாங்கினார்கள் இப்போது கட்சியையே விலைக்கு வாங்குகிறார்கள். நான் யாரை கூறுகிறேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

    மேலும் பாஜக தேர்தல் அறிக்கை முரண்பாட்டின் மொத்த உருவம். ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஏழை மக்களுக்கானது. விவசாய கடன் கட்ட முடியாதவர்கள் மீது குற்ற வழக்கு போடப்படாது.  பிரதமராக வரக்கூடிய ராகுல் காந்தி அவர்கள், ரபேல் ஊழலை சிறிதும் பயமின்றி முதலில் பேசினார். அதற்கான ஆதாரங்கள் புத்தகமாகவே வெளியிடப்பட்டது.  

    மாநிலத்தில் சுய ஆட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் கொள்கை. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப்போகிறது.  பாஜகவின் சேவகர்களாக அதிமுக உள்ளது. இவர்களுக்கு விடை கொடுக்க வேண்டும்.

    ராகுல் காந்தி  மன்னர் குடும்பம் என கூறுகிறீர்கள். ஆனால் ஆரம்பகால கட்டத்தில் ஏழையாக இருந்த நீங்கள் , ஏழைகள் பற்றி யோசித்தீர்களா? கார்ப்பரேட்களுக்கு தான் மோடி காவலாளி.  பணமதிப்பிழப்பை தன்னிச்சையாக அறிவித்த சர்வாதிகாரி மோடி.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019 
    சேலத்தில் இன்று நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், வெற்றி என்பது திமுக கூட்டணிக்கு உறுதி என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்தில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு,  திமுக, காங்கிரஸ் மற்றும் மதிமுக  வேட்பாளர்களை ஆதரித்து  பேசியதாவது:

    இங்கு வருகை தந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்கிறேன். ராகுல் காந்தியை இளம் தலைவர் என கூறுவதை விட வருங்கால பிரதமர் என கூறுவதே பொருத்தமாக இருக்கும்.



    மத்தியில் அமைந்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியும், மாநிலத்திலே ஆளும் அதிமுக அரசின் செயல்பாடுகளும் மக்களை எந்த அளவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை தினமும் பார்க்கிறேன். அவர்கள் ஆட்சியிலே செய்த சாதனையை கூறாமல் தொடர்ந்து எங்களையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

    ஏதேனும் நல்லது செய்திருந்தால் தானே சொல்லமுடியும்? மோடி தலைமையிலான பாசிச ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். இதற்காக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அதன்பின்னர் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.

    மோடி ஆட்சியினை அப்புறப்படுத்திய பின்னர், ஆளும் அதிமுகவின் ஆட்சியும் கலையும். நாட்டில் நல்ல ஆட்சி மலர மக்களாகிய நீங்கள் துணை நிற்க வேண்டும்.  எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சியையும், மோடியின் சர்வாதிகார ஆட்சியையும் நீங்கள் கவிழ்க்க தயாராகி விட்டீர்கள். வரும் 18ம் தேதி முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் நீங்கள், மறக்காமல் செய்து விடுங்கள்.

    மத்திய, மாநில ஆட்சியில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தல், இந்த தேர்தல் தான். பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஜீரோ. ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஹீரோவை போல் உள்ளது. மத்தியில் நாம் கை காட்டியவர்களுக்கு தான் ஆட்சி.  நாட்டில் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என நம்புகிறேன்.   

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019  
    புதுச்சேரியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு மு.க.ஸ்டாலின், 3டி யால் மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்படுகிறது என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    புதுச்சேரி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து  பேசியதாவது:



    இந்த புதுச்சேரிக்கு நான் புதிதானவன் அல்ல. புதுச்சேரியும் எனக்கு புதிதல்ல. நான் இங்கு வாக்கு கேட்க மட்டும் வரவில்லை. இந்த மாநிலத்தில் புரட்சி முதல்வராக இருக்கும், இங்கு வந்திருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி கூறவும் தான்  வந்தேன். கழக தலைவர் கலைஞர் மறைவிற்கு பின்னர், அவரை கவுரவிக்கும் வகையில் பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

    கலைஞருக்கு வெண்கல சிலை, காரைக்காலில் முக்கிய சாலைக்கு கலைஞர் பெயர், மற்றும் பட்டமேற்படிப்பு மையத்திற்கு கலைஞர் பெயர் என  கூறினார். எனவே அவருக்கு என் நன்றியை இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தின் முன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுவை மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர் கலைஞர்.  

    ஆனால், அதிமுக - பாஜக கூட்டணியால் புதுச்சேரி மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. பாஜக தேர்தல் அறிக்கை பொய்யானது. எனவே தான், பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மோடியை மோசடி என்றே கூப்பிடுங்கள் என கூறி வருகிறேன்.  வெளிநாடு பிரதமர் போல் மோடி செயல்படுகிறார். மக்கள் விருப்பப்படி நீங்கள் நடக்க விரும்புவதாக கூறுகிறீர்கள். அப்படி செய்யவேண்டுமென்றால்  ஆட்சியை விட்டு விலகுங்கள். அதுவே மக்கள் விருப்பம்.

    நாட்டுக்கு மோடி, தமிழகத்திற்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண் பேடி ஆகிய 3 ‘டி’ யினால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்  என்பதே உண்மை.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MKStalin #DMK #LoksabhaElections2019  
    குஜராத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாலக்கோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தானுக்கு எதிரானது. ஆனால் காங்கிரஸ் தான் பாதிப்புக்குள்ளானது என குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    ஜுனாகார்க்:

    குஜராத் மாநிலத்தில் ஏப்ரல் 23ம் தேதி  ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் குஜராத்  மாநிலத்தில் ஜுனாகார்க் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 4 நாட்களாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. ஏழைக் குழந்தைகளின் உணவுகளை பறித்து காங்கிரஸ்  தலைவர்களின் வயிற்றை நிரப்புகிறது. காங்கிரஸ் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.



    ஊழல் செய்து காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு அவபெயர்களை பெற்றுள்ளனர். ஆனால், நான் 5 ஆண்டுகளாக என்ன சாதனை செய்திருக்கிறேன் என்பதை கூறவே இங்கு வந்திருக்கிறேன்.  அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் என்ன செய்யவேண்டுமென்று கட்டளை இடுங்கள், செய்து முடிப்பேன்.

    உங்கள் மகன், இந்த காவலாளி செய்த செயல்கள் உங்களுக்கு பெருமையாக உள்ளதா? ஊழலே இல்லாமல் நான் நடத்திய 5 ஆண்டுகால ஆட்சி உங்களை பெருமை படுத்துகிறதா? . மேலும் உங்கள் மகனும், காவலாளியுமான என்னை அகராதியில் உள்ள அனைத்து அவதூறான வார்த்தைகளையும் கூறி காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர்.  

    பாலக்கோட்டில் நடத்திய தாக்குதல், பயங்கரவாதிகளை அழிக்கத்தான். ஆனால் அதனால் பாதிப்புக்குள்ளானது காங்கிரஸ் கட்சியினர் ஆவர். மேலும் ஜம்மு காஷ்மீரினை பிரித்து, அதற்கென தனி பிரதமரை உருவாக்கும் எண்ணத்துடனே தேசியவாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019   

    கலவரம், கொலைகள் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஞானஸ்நானம் பெற்றிருப்பதாக மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ராய்கஞ்ச்  பகுதியில்  திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    பிரதமர் மோடி கலவரம், கொலைகள் மூலம் அரசியல் ஞானஸ்நானம் பெற்றவர் ஆவார். உலகிலேயே மிகப்பெரிய சர்வாதிகாரியாக திகழ்ந்த ஹிட்லர் இன்று உயிருடன் இருந்திருந்தால், மோடியின் செயல்பாடுகளை கண்டு தற்கொலை செய்திருப்பார்.   மோடி பாசிசத்தின் ராஜா. காங்கிரஸ் தனித்து மத்தியில் ஆட்சி அமைக்க இயலாது. ஏனென்றால், பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போட்டியிடும் திறன் காங்கிரசுக்கு இல்லை.

    ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை வீழ்த்தவே கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. மோடி அதிகாரத்தை விட்டு வெளியேறிய பின்னர் எதிர்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்க செயல்படுவோம்.   

    இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #MamataBanerjee
    மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானதற்கு காங்கிரஸ் தான் பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    லத்தூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    முதன்முறையாக வாக்களிக்கப்போகும் வாக்காளர்களே, பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் மீது  பதிலடி தாக்குதல் நடத்தியவர்களுக்காக உங்கள் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.  சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டிருந்தால் பாகிஸ்தான் எனும் நாடே உருவாகியிருக்காது. நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவதே எனது குறிக்கோளாகும்.  

    ஜம்மு காஷ்மீரினை பிரித்து, அதற்கென தனி பிரதமரை உருவாக்கும் எண்ணத்துடனே தேசியவாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, பாகிஸ்தானின் குரலை பிரதிபலிப்பதாக உள்ளது.  ஆனால்,  நேற்று பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை, நாட்டின் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இத்தனை சாதனைகள் நிகழ்த்த காரணம் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையே ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
    திருநெல்வேலியில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், இந்து மதம் பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    திருநெல்வேலி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருநெல்வேலியின் பாளையங்கோட்டை பகுதியில் பெல் திடலில்  நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, பாராளுமன்ற தேர்தலின் திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து  பேசியதாவது:



    மத்தியில் அமைந்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியும், மாநிலத்திலே ஆளும் அதிமுக அரசின் செயல்பாடுகளும் மக்களுக்கு எந்த அளவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை தினமும் பார்க்கிறேன். அவர்கள் ஆட்சியிலே செய்த சாதனையை கூறாமல் தொடர்ந்து எங்களையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  ஏதேனும் நல்லது செய்திருந்தால் தானே சொல்லமுடியும்? மோடி தலைமையிலான பாசிச ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்.

    மத்தியில் ஆளும் பாஜக , திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.  இந்து மதம் என்பது பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. கலைஞர் ஆட்சியிலே எத்தனையோ வசதிகள், சலுகைகள், நலத்திட்டங்கள் அறநிலையத்துறைக்கும்,இந்து மதத்தினருக்கும் செய்யப்பட்டுள்ளது. பூசாரிகளுக்கு ஓய்வூதியம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என கூறியது, கோவில்களில் அதிக அளவில் குடமுழுக்கு நடத்தியது, கோவில்களில் இலவச திருமணங்கள் ஆகியன கழக ஆட்சியில் தான்.

    திமுக மீது அவதூறு பரப்புவதே பாஜகவின் செயல். திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல.  திமுக பாஜகவை எதிர்ப்பதால், இந்து மதத்தை எதிர்ப்பது என்பது ஆகாது. மோடி ஆட்சியினை அப்புறப்படுத்திய சில மணிநேரத்திலேயே, ஆளும் கட்சியின் ஆட்சி கலையும். நாட்டில் நல்ல ஆட்சி மலர மக்கள் துணை நிற்க வேண்டும்.  எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சியையும், மோடியின் சர்வாதிகார ஆட்சியையும் நீங்கள் கவிழ்க்க தயாராகி விட்டீர்கள். வரும் 18ம் தேதி முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் நீங்கள், மறக்காமல் செய்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019 
    பாராளுமன்ற தேர்தலையொட்டி, ஒடிசாவில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, நேர்மையான ஆட்சியா? அல்லது ஊழல் ஆட்சியா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என கூறியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    சுந்தர்கார்க்:

    ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கார்க் பகுதியில், பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    இந்த முறை ஒடிசாவில் தாமரை மலர்ந்தே தீரும். வெற்றியை பாஜக அள்ளிப்பருகும்.  ஒடிசா மாநிலத்தில் இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை மலரும் என்று நான் பெருமையுடம் சொல்லுவேன். அதேப்போல் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜக நாட்டின் வலிமையான மற்றும் தீர்க்கமான கட்சியாகும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாஜக செயல்படுகிறது. எனவே நேர்மையான ஆட்சி தேவையா? அல்லது  ஊழல் ஆட்சி தேவையா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

    நாட்டிற்கும், ஒடிசாவிற்கும் வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் நல்ல எதிர்காலத்தை உருவாக்கப்போகிறது.  தொண்டர்களின் கடுமையான உழைப்பிலும், வியர்வையிலும் உருவானது தான் இந்த பாஜகவே தவிர, பணத்தினாலோ அல்லது வாரிசு முறையிலோ உருவாக்கப்படவில்லை. தற்போதும் தொண்டர்களின் வியர்வையினால் தான் வளர்ந்து வருகிறது.  எனவே தான் இன்று நாட்டில், மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பாஜக  விளங்குகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
    விழுப்புரத்தில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க மக்கள் தயாராகி விட்டார்கள் என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    விழுப்புரம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரத்தில்  நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு,  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து  பேசியதாவது:

    இதுவரை ஏறக்குறைய 20 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு நாளும் இந்த ஆளும் அதிமுக மீதான மக்களின் வெறுப்பு தெரிகிறது.  இன்றும் விழுப்புரத்திலே இந்த வேகாத வெயிலில் நீங்கள் கூடியிருப்பதை வைத்தே உங்கள் மனதின் எண்ணத்தினை நான் அறிந்தேன். தன்னை விவசாயி என சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடி,  விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமான விஷவாயு ஆவார்.



    எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சியையும், மோடியின் சர்வாதிகார ஆட்சியையும் நீங்கள் கவிழ்க்க தயாராகி விட்டீர்கள். வரும் 18ம் தேதி முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் நீங்கள், மறக்காமல் செய்து விடுங்கள். இந்த விழுப்புரத்திலே தான்  முதன்முறையாக கழகத்தின் சார்பாக பொன்முடி நடத்திய மண்டல மாநாட்டினை தலைமையேற்று நடத்தினேன்.

    அன்றைக்கு கழக தொண்டர்கள் கணித்தது போல் இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகியுள்ளேன். இந்த தொகுதியில் நிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி  வேட்பாளர் ரவிக்குமார்,  நல்ல எழுத்தாளர், பேச்சாளர்  மற்றும் சிறந்த வழக்கறிஞர் ஆவார்.  சட்டமன்றத்திலே ஏற்கனவே என்னுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார். இவரது உரையை கலைஞர் அவர்களே பாராட்டி பேசியுள்ளார்.

    இந்த தொகுதிக்கும், திமுகவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. விழுப்புரத்தில் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவை கழக ஆட்சியில் தான் திறக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து, சிந்தித்து வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019 

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டணியில் இருந்த நிஷாத் கட்சி விலகியதையடுத்து, பதிலடி கொடுக்கும் வகையில் சமாஜ்வாடி கட்சி 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #NishadParty
    லக்னோ:

    உ.பி.யில் பாராளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் நிஷாத் கட்சியும் இணைந்தது. இந்த அறிவிப்பு வெளியான இரண்டு நாட்களில் கூட்டணி உடைந்தது. கூட்டணி கட்சிகள் தங்களை மதிக்கவில்லை என்று கூறிய நிஷாத் கட்சி, நேற்று கூட்டணியில் இருந்து வெளியேறியது.

    பின்னர், அக்கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத், நேற்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள நிஷாத் கட்சி வெளியேறியிருப்பது, சமாஜ்வாடி கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    கோரக்பூர் தொகுதியில் வெற்றிப் பெற்ற யோகி ஆதித்யநாத், 2017ல் எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு முதல்வராக பதவியேற்றார். பின்னர் இந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத்தின் மகன் பிரவீன் நிஷாத் வெற்றி பெற்றார்.

    தற்போது நிஷாத் கட்சி வெளியேறியதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் சமாஜ்வாடி கட்சி, இன்று காலை கோரக்பூர் மற்றும் கான்பூர் தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த 2 வேட்பாளர்களும் நிஷாத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவர். கோரக்பூர் தொகுதியில் ராம் பவுல் நிஷாத், கான்பூர் தொகுதியில் ராம் குமார் நிஷாத் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது.

    சமாஜ்வாடி அறிவித்த இரண்டு வேட்பாளர்களில், ராம் பால் நிஷாத், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.  சமீபத்தில் பாஜகவில் இருந்து சமாஜ்வாடியில் இணைந்தவர் ஆவார். மற்றொரு வேட்பாளர் ராம் குமார் நிஷாத்துக்கு இதுதான் முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே பாஜக கூட்டணியில் நிஷாத் கட்சி இன்று இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokSabhaElections2019 #NishadParty
    மத்தியில் தற்போது இருக்கும் மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் நேரம் வந்து விட்டது என சிவகங்கை பிரசாரப் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சிவகங்கை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கையில் உள்ள அரண்மனை வாசலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:

    இந்த சிவகங்கை தொகுதியில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடவிருக்கும் கார்த்தி சிதம்பரத்திற்கு வாரிசு அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படவில்லை, தகுதி  அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டார்.

    ஆளுங்கட்சியின் துணையோடு பாஜக சார்பில் நிற்கும் எச். ராஜாவை பற்றி நான் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை. தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலே இது போன்ற கடைந்தெடுத்தவரை பார்த்ததில்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் கூறுவது. பொய்களையே பேசுவது இது தான் ராஜாவின் பணி.  மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எச். ராஜா பாராளுமன்றத்திற்கு போனால் சிவகங்கை தொகுதிக்கே அவமானம். அவர் மோசமான அரசியல்வாதி.



    இதன் காரணமாகவே காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியிருக்கக்கூடிய கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறுகிறேன். பெரியார், அறிஞர் அண்ணா, மற்றும் திராவிட இயக்கத்தினை மிகவும் கொச்சைப்படுத்தி பேசுகிற ராஜாவை விடுத்து, நீங்கள் அனைவரும் கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    பிரதமர் மோடியின் இந்த ஆட்சியில்,  பாஜக கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்காத சலுகைகளே இல்லை. எனவே பாரதீய  ஜனதா என அழைக்காமல் கார்ப்பரேட் ஜனதா என்றே கூறுங்கள். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்திய மக்களின் பேரில் வங்கிகளில் வைப்புத் தொகையாக ரூ.15 லட்சம் போடுவேன் என கூறினார். யாருக்கேனும்  போட்டுள்ளாரா? அப்படி போட்டிருந்தால் சொல்லுங்கள் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

    பிரதமர் மோடி வாக்குறுதிகளை வாரி வாரி வழங்குவார். ஆனால் செயல் ஒன்றும் இருக்காது. பாஜகவிற்கு எதிராக யாரும் பேசினால் தேச துரோகி என கூறுகிறார்களே ,இது முறையா? 5 ஆண்டுகளுக்கு முன் மதச்சார்பற்ற இந்தியா உருவாகும் என கூறினார்களே, அப்படி செய்தார்களா? நாற்காலி தான் இவர்களது நோக்கம்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  #MKStalin #DMK #LoksabhaElections2019

     
    ×