என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெற்றி என்பது திமுக கூட்டணிக்கு உறுதி - மு.க. ஸ்டாலின் பிரசாரம்
Byமாலை மலர்12 April 2019 9:29 AM GMT (Updated: 12 April 2019 10:43 AM GMT)
சேலத்தில் இன்று நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், வெற்றி என்பது திமுக கூட்டணிக்கு உறுதி என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
சேலம்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்தில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, திமுக, காங்கிரஸ் மற்றும் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:
மோடி ஆட்சியினை அப்புறப்படுத்திய பின்னர், ஆளும் அதிமுகவின் ஆட்சியும் கலையும். நாட்டில் நல்ல ஆட்சி மலர மக்களாகிய நீங்கள் துணை நிற்க வேண்டும். எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சியையும், மோடியின் சர்வாதிகார ஆட்சியையும் நீங்கள் கவிழ்க்க தயாராகி விட்டீர்கள். வரும் 18ம் தேதி முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் நீங்கள், மறக்காமல் செய்து விடுங்கள்.
மத்திய, மாநில ஆட்சியில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தல், இந்த தேர்தல் தான். பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஜீரோ. ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஹீரோவை போல் உள்ளது. மத்தியில் நாம் கை காட்டியவர்களுக்கு தான் ஆட்சி. நாட்டில் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சேலத்தில் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, திமுக, காங்கிரஸ் மற்றும் மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:
இங்கு வருகை தந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்கிறேன். ராகுல் காந்தியை இளம் தலைவர் என கூறுவதை விட வருங்கால பிரதமர் என கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
மத்தியில் அமைந்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியும், மாநிலத்திலே ஆளும் அதிமுக அரசின் செயல்பாடுகளும் மக்களை எந்த அளவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதை தினமும் பார்க்கிறேன். அவர்கள் ஆட்சியிலே செய்த சாதனையை கூறாமல் தொடர்ந்து எங்களையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏதேனும் நல்லது செய்திருந்தால் தானே சொல்லமுடியும்? மோடி தலைமையிலான பாசிச ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். இதற்காக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அதன்பின்னர் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.
மோடி ஆட்சியினை அப்புறப்படுத்திய பின்னர், ஆளும் அதிமுகவின் ஆட்சியும் கலையும். நாட்டில் நல்ல ஆட்சி மலர மக்களாகிய நீங்கள் துணை நிற்க வேண்டும். எடப்பாடியின் உதவாக்கரை ஆட்சியையும், மோடியின் சர்வாதிகார ஆட்சியையும் நீங்கள் கவிழ்க்க தயாராகி விட்டீர்கள். வரும் 18ம் தேதி முக்கிய பங்கு ஆற்றவிருக்கும் நீங்கள், மறக்காமல் செய்து விடுங்கள்.
மத்திய, மாநில ஆட்சியில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தல், இந்த தேர்தல் தான். பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஜீரோ. ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஹீரோவை போல் உள்ளது. மத்தியில் நாம் கை காட்டியவர்களுக்கு தான் ஆட்சி. நாட்டில் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X