search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலவரம், கொலைகள் மூலம் அரசியல் ஞானஸ்நானம் பெற்றவர் மோடி - மம்தா குற்றச்சாட்டு
    X

    கலவரம், கொலைகள் மூலம் அரசியல் ஞானஸ்நானம் பெற்றவர் மோடி - மம்தா குற்றச்சாட்டு

    கலவரம், கொலைகள் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஞானஸ்நானம் பெற்றிருப்பதாக மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ராய்கஞ்ச்  பகுதியில்  திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    பிரதமர் மோடி கலவரம், கொலைகள் மூலம் அரசியல் ஞானஸ்நானம் பெற்றவர் ஆவார். உலகிலேயே மிகப்பெரிய சர்வாதிகாரியாக திகழ்ந்த ஹிட்லர் இன்று உயிருடன் இருந்திருந்தால், மோடியின் செயல்பாடுகளை கண்டு தற்கொலை செய்திருப்பார்.   மோடி பாசிசத்தின் ராஜா. காங்கிரஸ் தனித்து மத்தியில் ஆட்சி அமைக்க இயலாது. ஏனென்றால், பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போட்டியிடும் திறன் காங்கிரசுக்கு இல்லை.

    ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை வீழ்த்தவே கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. மோடி அதிகாரத்தை விட்டு வெளியேறிய பின்னர் எதிர்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்க செயல்படுவோம்.   

    இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #MamataBanerjee
    Next Story
    ×