search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "litigation"

    • ராஜபாளையம் அருகே பெண்ணை அவதூறாக பேசிய கணவர்-கள்ளக்காதலி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கண்மாய்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 27). இவரது கணவர் பிரவீன் (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 வருடங்களாக கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரவின் அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பிரியா என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது தெரிய வந்ததை தொடர்ந்து ராஜ பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் கணவர் மீது பிரியா புகார் கொடுத்தார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்தி ரேட் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தநிலையில் பிரியா தென்காசி ரோட்டில் நடந்து சென்றதாக போது சொக்கர் கோவில் அருகே பிரவீ னும், தங்கப்பி ரியாவும் அவரை வழிமறித்து தகாத வார்த்தை களால் திட்டி அவதூறாக பேசியதாக கூறப்படு கிறது.

    இது குறித்து ராஜபாளை யம் தெற்கு போலீஸ் நிலை யத்தில் பிரியா புகார் செய்தா ர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் வெண்கொடை திருவிழா விவகாரத்தில் மறியலில் ஈடுபட்ட 55 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • 15 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் கலந்துகொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் சித்திரை வெண்குடை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 5 தெருக்களில் வசிக்கும் ஒரு சமூகத்தினர் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான திருவிழாவை நடத்துவது தொடர்பாக தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடப்பட வில்லை எனக்கூறி நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு தெருவைச் சேர்ந்தவர்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் 15 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் கலந்துகொண்டனர். ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார்.

    இந்த நிலையில் அவர்கள் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டது குறித்து கிராம நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணின் காதல் விவகாரத்தில் மிரட்டல் விடுத்த மைத்துனர், மருமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • ஆனந்த் மிரட்டியதை குறித்து அவரது தந்தை ராமச்சந்திரனிடம், சுப்பிரமணியன் புகார் கூறியுள்ளார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது53). இவரது மகளும், தங்கை மகன் ஆனந்த்தும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனந்த்தின் நடவடிக்கைகள் சரியில்லாததால் ஆனந்த்துடன் பழகுவதை சுப்பிரமணியனின் மகள் நிறுத்திவிட்டார்.

    இந்தநிலையில் சுப்பிரமணியன், தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்தார். இதையறிந்த ஆனந்த் ஆபாச போட்டோக்களை அனுப்பி தன்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த பெண்ணிடம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆனந்த் மிரட்டியதை குறித்து அவரது தந்தை ராமச்சந்திரனிடம், சுப்பிரமணியன் புகார் கூறியுள்ளார். ஆனால் அவரும் ஆனந்த்துக்குதான் சுப்பிரமணியனின் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டினாராம்.

    இதுகுறித்து சுப்பிரமணியன் தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் -புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடி கருமாச்சிபாளையத்தில் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கடலூர் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்

    கடலூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மைய ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடி கருமாச்சிபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கடலூர் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நகர செயலாளர் அம்பேத் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, பாலமுருகன், வீரபாபு, வரதராஜன், சேகர், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜான்சன், முரளி, சுந்தர், கௌசல்யா, நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஏப்ரல் 14-ந்தேதி கடலூரில் நடைபெறும் ஜனநாயகம் காப்போம் பேரணியில் பெருந்திரளாக பங்கேற்பது குறிஞ்சிப்பாடி பகுதியில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது 110-ன் கீழ் வழக்குபதிவு செய்வதை போலீசார் நிறுத்த வேண்டும். சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கீதா. சம்பவத்தன்று இவர் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
    • அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் பார்த்துக்கொண்டு சிரித்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த பி. என்.பாளையத்தை சேர்ந்தவர் கீதா. சம்பவத்தன்று இவர் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் பார்த்துக்கொண்டு சிரித்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கீதா கேட்டபோது முத்துக்குமரன் மனைவி மங்கைக்கும், கீதா தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் மங்கை மற்றும் கீதா ஆகியோர் காயமடைந்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் மங்கை கொடுத்த புகாரின் பேரில் கீதா, ராஜா, அசலாம்பாள், ராதா ஆகியோர் மீதும், கீதா கொடுத்த புகாரின் பேரில் மங்கை மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குமார் (வயது 48). இவருக்கும் மணிவேல் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • இந்நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பி னரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 48). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சன்னியாசி மகன் மணிவேல் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பி னரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த குமார் மற்றும் மணிவேல் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி மகன்கள் செல்வம், மணிவேல், ஏழுமலை, முத்துப்பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல் மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் விஜி, குமார், பூங்கொடி, பவுன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஏழுமலை என்பவரை கைது செய்தனர்.

    • மின்சாரம் பாய்ந்து குணசேகரன் தூக்கி வீசப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கோரிக்குளம் புது தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45 ) விவசாயி. இவர் புதிய வீடு ஒன்று கட்டி வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டின் கட்டுமான பணிக்காக கீழ் தளத்தில் கடப்பாரையால் பள்ளம் தோண்டி கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த மின்சார வயர் மீது கடப்பாரை பட்டது.

    இதில் மின்சாரம் பாய்ந்து குணசேகரன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் இறந்தார். இது குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

    • ராமநாதபுரத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; மாமனார்-மாமியார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயனுக்கும் திருமணம் நடைபெற்றது. கார்த்திகேயன் அபுதாபியில் வேலைக்கு சென்ற நிலை யில் மனைவியை பெற்றோர் வீட்டில் இருக்குமாறு தெரி வித்துள்ளார்.

    இதனையடுத்து வைத்தீஸ்வரி தாய் வீட்டில் இருந்து வந்ததுள்ளார். மாமனார் தியாகராஜன், மாமியார் வளர்மதி ஆகி யோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா சென்றுள்ளனர். இதன் பின்னர் தீபாவளிக்கு வந்துள்ளனர்.

    அப்போது வைத்தீஸ்வரி கணவர் வீட்டுக்கு வந்து தனக்கு தேவையான பொருட்களை எடுக்க சென்றுள்ளார். அதற்கு மாமனார்-மாமி யார் அனுமதிக்கவில்லை. அவரை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம். அந்த பணத்தை வரதட்சணை யாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் விவாக ரத்து செய்து விடுவோம் என மிரட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வைத்தீஸ்வரி ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. இதனை தொடர்ந்து அவர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் அடிப்படை யில் அனைத்து மகளிர் போலீசார் மாமனார், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
    • இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம்  பண்ருட்டி அடுத்த மணம் தவழ்ந்தபுத்தூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் என்பவர் ஏன் வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ராமதாசுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் மோதலில் ஈடுபட்டு பகத்சிங்கை தாக்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமான நிலை அங்கு உருவானது. இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    • கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் முத்துமாரியம்மன் கோவிலுக்கு வரி வசூல் செய்து சாமி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிறிய தெருவாக இருந்து வந்ததால் சாமி ஊர்வலம் செல்லவில்லை.
    • இதில் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது‌.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில் கோவிலுக்கு வரி வசூல் செய்து சாமி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிறிய தெருவாக இருந்து வந்ததால் சாமி ஊர்வலம் செல்லவில்லை. இது குறித்து மணி உள்ளிட்ட நான்கு பேர் கோவில் நிர்வாகி மோகனை கேட்டனர். இதில் மணி தரப்பினருக்கும், மோகன் தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில்கோவில் நிர்வாகி மோகன், ராமசாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.                                                                                                                                                                                                                                                                                                                     இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த மணி, மோகன்தாஸ், பரசுராமன், ராஜ் ஆகியோர் மீதும், ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் இளையராஜா, ரமேஷ், முருகன், பாலகிருஷ்ணன் ஆகிய 8 பேர் மீது தனித்தனியாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பா.ம.க. ஒன்றிய செயலாளர் மணிவாசகம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
    • வாட்ஸ் அப்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் மீது அவதூறாக பேசி வருகிறார்.

    கடலூர்:

    பா.ம.க. ஒன்றிய செயலாளர் மணிவாசகம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரில், குறிஞ்சிப்பாடி சின்ன காட்டுசாகை சேர்ந்தவர் சங்கர். வாட்ஸ் அப்பில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் மீது அவதூறாக தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் பொது அமைதி பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்படி குள்ளஞ்சாவடி போலீசார் சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது.
    • கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில் துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன்கள் மைக்கேல் மற்றும் ஞானவேல். இவர்களுக்கிடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஞானவேல், இவரது மனைவி செல்வி ஆகிய 2 பேரும் சேர்ந்து மைக்கேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கணவன், மனைவி 2 பேர் மீதும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    ×