search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை அவதூறாக பேசிய கணவர்-கள்ளக்காதலி மீது வழக்கு
    X

    பெண்ணை அவதூறாக பேசிய கணவர்-கள்ளக்காதலி மீது வழக்கு

    • ராஜபாளையம் அருகே பெண்ணை அவதூறாக பேசிய கணவர்-கள்ளக்காதலி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கண்மாய்பட்டியை சேர்ந்தவர் பிரியா (வயது 27). இவரது கணவர் பிரவீன் (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 3 வருடங்களாக கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரவின் அதே பகுதியைச் சேர்ந்த தங்கப்பிரியா என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது தெரிய வந்ததை தொடர்ந்து ராஜ பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் கணவர் மீது பிரியா புகார் கொடுத்தார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்தி ரேட் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

    இந்தநிலையில் பிரியா தென்காசி ரோட்டில் நடந்து சென்றதாக போது சொக்கர் கோவில் அருகே பிரவீ னும், தங்கப்பி ரியாவும் அவரை வழிமறித்து தகாத வார்த்தை களால் திட்டி அவதூறாக பேசியதாக கூறப்படு கிறது.

    இது குறித்து ராஜபாளை யம் தெற்கு போலீஸ் நிலை யத்தில் பிரியா புகார் செய்தா ர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×