search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; மாமனார்-மாமியார் மீது வழக்கு
    X

    பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; மாமனார்-மாமியார் மீது வழக்கு

    • ராமநாதபுரத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; மாமனார்-மாமியார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயனுக்கும் திருமணம் நடைபெற்றது. கார்த்திகேயன் அபுதாபியில் வேலைக்கு சென்ற நிலை யில் மனைவியை பெற்றோர் வீட்டில் இருக்குமாறு தெரி வித்துள்ளார்.

    இதனையடுத்து வைத்தீஸ்வரி தாய் வீட்டில் இருந்து வந்ததுள்ளார். மாமனார் தியாகராஜன், மாமியார் வளர்மதி ஆகி யோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா சென்றுள்ளனர். இதன் பின்னர் தீபாவளிக்கு வந்துள்ளனர்.

    அப்போது வைத்தீஸ்வரி கணவர் வீட்டுக்கு வந்து தனக்கு தேவையான பொருட்களை எடுக்க சென்றுள்ளார். அதற்கு மாமனார்-மாமி யார் அனுமதிக்கவில்லை. அவரை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம். அந்த பணத்தை வரதட்சணை யாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் விவாக ரத்து செய்து விடுவோம் என மிரட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வைத்தீஸ்வரி ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. இதனை தொடர்ந்து அவர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் அடிப்படை யில் அனைத்து மகளிர் போலீசார் மாமனார், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×