என் மலர்
உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே முன் விரோத தகராறில் 8 பேர் மீது வழக்கு
- குமார் (வயது 48). இவருக்கும் மணிவேல் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
- இந்நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பி னரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டனர்
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 48). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சன்னியாசி மகன் மணிவேல் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று 2 தரப்பி னரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த குமார் மற்றும் மணிவேல் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி மகன்கள் செல்வம், மணிவேல், ஏழுமலை, முத்துப்பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதே போல் மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் விஜி, குமார், பூங்கொடி, பவுன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஏழுமலை என்பவரை கைது செய்தனர்.