search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "La Ganesan"

    முதமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட கருணாஸ் எம்எல்ஏ இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். #Karunas #HighCourt
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் காமெடி நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 16-ந்தேதி நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசிய கருணாஸ், நாடார் சமுதாயத்தினர் பற்றியும் பிரிவினையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

    இதனை தொடர்ந்து கடந்த 20-ந்தேதி கருணாஸ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து கருணாஸ் தப்பி ஓடியதாக தகவல் பரவியது. ஆனால் அவரோ தனது வீட்டில் வைத்து ஹாயாக பேட்டி அளித்தார். நான் எங்கும் ஓடவில்லை. தப்பி ஓடிவிட்டதாக போலீஸ் அவதூறு பரப்புகிறது என்று சாடினார்.

    இதையடுத்து கருணாசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. கருணாசின் பேச்சுக்கள் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் இருந்த போதிலும் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவது போல் காணப்பட்டதால் கடும் விமர்சனங்களும் எழுந்தன.

    இந்த நிலையில் 3 நாட்களாக அமைதி காத்த போலீசார் கடந்த 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்களது அதிரடியை காட்டினர். சாலிகிராமத்தில் உள்ள கருணாசின் வீட்டுக்குள் அதிகாலை 5.30 மணி அளவில் புகுந்த உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    கருணாசின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்ததால் அதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்காக எழும்பூர் கோர்ட்டில் நுங்கம்பாக்கம் போலீசார் மனுதாக்கல் செய்தனர். அதில் கருணாசை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

    அப்போது கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. அத்துடன் அவரது ஜாமீன் மனுவுடன், காவல்துறையின் மனுவும் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.



    அதன்படி கருணாசை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக. வேலூர் சிறையில் இருந்து காலை 9 மணி அளவில் அவரை அழைத்துக் கொண்டு போலீசார் சென்னை புறப்பட்டனர். மதியம் 12.30 மணியளவில் கருணாசை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, கருணாசின் ஜாமீன் மனுவுடன், போலீசாரின் மனுவும் சேர்த்து விசாரிக்கப்பட்டது.

    அப்போது கருணாசை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

    முக்குலத்தோர் புலிப்படையினர் கொலை செய்யவும் தயங்கக் கூடாது. பிக்னிக் செல்வது போல ஜெயிலுக்கு சென்று வரவேண்டும். வழக்கு செலவை நான் பார்த்துக் கொள்வேன் என்று கூறினார். தினமும் மதுவுக்காக மட்டும் ரூ.1 லட்சம் செலவு செய்கிறேன் என்று கருணாஸ் கூறி இருந்தார். இது தொடர்பாக கருணாசிடம் உரிய விசாரணை நடத்தப்பட உள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடியை மிரட்டும் வகையில் கருணாஸ் பேசியதன் பின்னணியில் யாரும் உள்ளனரா? துணை கமி‌ஷனர் அரவிந்தனை பார்த்து சட்டையை கழட்டி விட்டு என்னோடு நேருக்கு நேர் மோதுவதற்கு தயாரா? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு அவரோடு என்ன பிரச்சினை? என்பது பற்றியும் கருணாசிடம் விசாரணை நடைபெற உள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் திடீரென அரசியல் பிரவேசம் செய்த கருணாஸ், ஜெயலலிதாவின் தயவால், திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. கருணாசின் நடவடிக்கைகளும் தமிழக அரசுக்கு எதிராக இருந்தன. அதன் காரணமாகவே கருணாசின் பேச்சுக்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

    இதனால் கருணாசின் பேச்சின் பின்னணியில் அரசியல் சதி திட்டம் ஏதும் உள்ளதா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. யாரோ ஒருவர் கருணாசை இயக்குவதாகவும் கூறப்படுகிறது. அவர் யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்படுகிறது.

    கருணாசை காவலில் எடுத்து நடத்தப்படும் விசாரணையை வாக்கு மூலமாக பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். போலீஸ் காவலில் அவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடரவும் போலீசார் திட்டமிட் டுள்ளனர். எனவே கருணாசின் போலீஸ் காவல் முடியும் போது, அவரது பின்னணியில் செயல்படுபவர்கள் யார்-யார்? என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தாமோதர கிருஷ்ணனையும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. தாமோதர கிருஷ்ணன் இருக்கும் இடம் கருணாசுக்கு எப்படியும் தெரியும் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே கருணாசை வைத்து அவரை பிடிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    போலீசாரின் இது போன்ற தீவிர நடவடிக்கைகளால் கருணாஸ் ஆதரவாளர்கள் மீதான பிடி மேலும் இறுகியுள்ளது. #Karunas #HighCourt
    கருணாஸ் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசு எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? என்று சீமான் நிருபர்களிடம் அளித்து பேட்டியில் கூறியுள்ளார். #Seeman #Karunas

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் நடைபெற்றது.

    அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையை அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் பனை விதைகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர்களின் அடையாளமான பனை மரத்தை இன்று 50, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலை உள்ளது. பனை மரத்தின் அருமை தெரியாமல் இளைய தலைமுறையினர் உள்ளனர். ஒரு கிணற்றை சுற்றி பனைமரங்கள் இருந்தால் தண்ணீர் வற்றாது என்று நம்மாழ்வார் கூறி இருக்கிறார்.


    இதனை உணர்த்தும் வகையிலேயே பசுமை திட்டமான இதனை நாம் தமிழர் கட்சி கையில் எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து 5 ஆயிரம் பனை விதைகளையும் வாங்கி வந்துள்ளோம். இதனையும் நட்டுள்ளோம். புளி, வேம்பு, பூவரசு, புங்கை மரக் கன்றுகளையும் நட்டுள்ளோம்.

    கருணாஸ் சாதி உணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்றால், எச்.ராஜா மத உணர்வை தூண்டும் வகையில் பேசவில்லையா? போலீஸ் அதிகாரியை தரக்குறைவாக பேசியதாக கருணாஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எச். ராஜாவும் அப்படித்தான் பேசினார். கருணாசை கைது செய்தது போல எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் தேசிய செயலாளர் என்பதால் தமிழக அரசு கைவைக்க தயங்குகிறது.

    இவ்வாறு சீமான் கூறினார். #Seeman #Karunas

    கருணாஸ் பேச்சு ஒருதுளி கூட ஏற்புடையதல்ல என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #Karunas #PonRadhakrishnan

    விருதுநகர்:

    பா.ஜனதா கட்சியின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜபாளையத்தில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் கருணாஸ் பேச்சு ஒரு துளி கூட ஏற்புடையதல்ல. அவரது பேச்சு அவரை சார்ந்தவர்களின் உணர்வை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்துமானால் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டவர்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும்.

    சாதி, இனம், மதம், மொழி ஆகிய உணர்வுகளை தூண்டி விடும் வகையில், பேசும் நிலைமாற வேண்டும். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்ததை வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வரம்பு மீறி யார் பேசினாலும் தவறுதான். கருணாஸ் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #Karunas #TamilisaiSoundararajan

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    பா.ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில் சிலை திருட்டு அதிகமாக நடைபெறுவதால் போலியான சிலையை வழிபடுகிறோமோ என பக்தர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

    முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை யார் வரம்பு மீறி பேசினாலும் அது தவறுதான். கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா, தனது மீதான புகாரை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வார்.

    விநாயகர் சிலையை வைத்து அரசியல் செய்கிறார்கள். தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இன்று தொடங்கும் பிரதமரின் மக்களுக்கான காப்பீடு திட்டத்தில் தமிழக அரசும் இணைந்ததற்கு நன்றி.


    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜபாளையத்தில் நேற்று இரவு நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் நாம் செயல்படுகிறோம். தமிழகத்தில் கூட்டணியும் கிடையாது. யாருடைய துணையும் கிடையாது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக சுற்றுபயணம் செய்யவில்லையென்றால் தமிழகத்தில் பா.ஜனதாவை எப்படி வளர்க்க முடியும்?

    வருங்காலத்தில் பா.ஜனதா இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலமையை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். வாக்குச்சாவடி தோறும் இளைஞர்களை நியமிக்க வேண்டும்.

    நமக்கு கொடுத்த பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் பா.ஜனதா பலம் பெறும். இப்போதே நம்மை நோக்கி தமிழக அரசு நகர்ந்து வருகிறது. மோடி ஆட்சியை அகற்றுவோம் என தி.மு.க. கூறி வருகிறது.

    இந்தியாவில் 21 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி செய்கிறது. மோடி கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்றால் போதும். தமிழகத்தில் மிகப் பலம் வாய்ந்த கட்சியாக பா.ஜனதாவை மாற்றுவோம். சட்டமன்ற பொறுப்பாளர்கள் முழுமையாக பணியாற்ற வேண்டும்.

    இதுவரை 35 சதவீதம் தான் பணியாற்றி உள்ளோம். மாவட்ட நிர்வாகிகள் அங்கீகாரத்தை பெற வேண்டும். திராவிட கட்சிக்கு எதிராக பணியாற்ற வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.வை அசைக்கக் கூட முடியவில்லை. பிறகு எப்படி மோடியை அசைக்க முடியும்?

    எனக்கு செல்போனில் பல வகையில் மிரட்டல் வருகிறது. பா.ஜனதாவை தமிழகத்தில் அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Karunas #TamilisaiSoundararajan

    நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டது சட்டப்படி சரியான நடவடிக்கை என்று பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #LaGanesan #Karunas

    ராஜபாளையம்:

    பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் ராஜபாளையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. இந்த தகவலை சபாநாயகருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

    தமிழகத்தில் சாதி வெறி மங்கி வருகிறது. இந்த நிலையில் இப்படி கருணாஸ் பேசி இருப்பது ஏற்புடையதல்ல.


    நீதிமன்றங்கள் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளது அவரது பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #LaGanesan #Karunas

    வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு வருத்தத்தை அளிக்கிறது என்று தூத்துக்குடியில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். #PetrolPriceHike #BJP #LaGanesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு எங்களுக்கும் வருத்தத்தை அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் விலை உயர்த்தப்பட்டது. உலக அளவில் கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் டாலரின் மதிப்பு உயர்வு காரணமாக தற்போது விலை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஒரு குழு அமைத்துள்ளார். அந்த குழு வருகிற 15-ந்தேதி விசாரணை நடத்துகிறது. ஒரு சில பொருட்களுக்கு மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் 25 சதவீத விலை குறையும். இதுகுறித்து மத்திய அரசு சில மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்டால் பெட்ரோல் விலை ஜி.எஸ்.டி. க்குள் கொண்டு வரப்படும்.


    பெட்ரோல், டீசல் விலை உயர்வு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று கேட்கிறார்கள். தேர்தலுக்குள் பெட்ரோல், டீசல் விலை குறையும் என நம்புகிறோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும். விரைவில் கச்சா எண்ணை விலை குறையும் பொழுது பெட்ரோல், டீசல் விலையும் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PetrolPriceHike #BJP #LaGanesan
    தி.மு.க.வின் புதிய தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் பக்குவம் இல்லை என்று இல. கணேசன் குற்றம் சாட்டி உள்ளார். #BJP #LaGanesan #DMK #MKStalin
    மதுரை:

    மதுரை மாவட்ட பா.ஜனதா நிர்வாகி திருமண விழாவில் பங்கேற்பதற்காக தமிழக பா.ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் இன்று மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

    நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பா.ஜனதா தொடங்கி விட்டது. எனக்கு மட்டும் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அந்த தொகுதிகளில் நான் சுற்றுபயணம் செய்து வருகிறேன்,

    தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற தமிழிசையிடம் அந்த பெண் அநாகரீகமாக நடந்து கொண்டது பண்பாடற்ற செயல் என்றால், இதற்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்களும் கண்டனத்துக்கு உரியவர்களே.

    பா.ஜனதாவை பொருத்தவரை எங்களுக்கு எதிர் கட்சிகள் தேவை, அவர்களின் விமர்சனமும் தேவை. அப்போது தான் எங்கள் கட்சி சரியாக செயல்பட முடியும்.


    தி.மு.கவின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பக்குவம் இல்லை. முதல் நாளில் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துவிட்டு, அடுத்த நாளே மற்ற கட்சிகளை விமர்சனம் செய்கிறார்.

    50 ஆண்டுகால அரசியலில் சாதனையாளராக வலம் வந்த கலைஞருடன் அரசியல் செய்து கொண்டு இப்படி பக்குவமற்ற முறையில் பேசுகிறார். இது அவருக்கு நல்லதல்ல, இன்னும் அவர் பண்படவேண்டும்

    தூத்துக்குடி விமானத்தில் நடந்த சம்பவத்தை பொருத்தவரை அந்த பெண் செய்தது திட்டமிட்ட செயல். அவருக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் தான் அதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது.

    தமிழகத்தை பொருத்த வரை இதுவரை எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பற்றி தெரிவிக்கவில்லை, உரிய காலம் வரும் போது முடிவெடுப்போம். கட்சியை பலப்படுத்துவது தான் எங்களின் இன்றைய குறிக்கோள்.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்போது தேர்தல் கூட்டணி தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார்.

    பா.ஜனதாவை பொருத்த வரை கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களின் அகில இந்திய தலைவர் அமித்ஷா, ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்’ என்று ஏற்கனவே கூறியுள்ளார்.

    அதேநேரத்தில் பா. ஜனதா எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை’ என்று தெரிவித்தார்.

    இவ்வாறு இல.கணேசன் கூறினார். #BJP #LaGanesan #DMK #MKStalin
    கல்லணைக்கு பிறகு கட்டிய அணைகள் மீது நம்பிக்கை இல்லை என்று இல.கணேசன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #LaGanesan #Dam

    கும்பகோணம்:

    பாரதிய ஜனதா தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் இல.கணேசன் கும்பகோணத்தில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு காவிரி நீருக்காக அதிக அளவில் கூக்குரல் கொடுத்துள்ளது. சாதாரண கட்டத்தில் அணைகள் எந்த நிலையில் இருக்கிறது என்று சோதித்து பார்த்திருக்க வேண்டும். அப்படி சோதித்து பார்த்திருந்தால் முக்கொம்பு கீழணையில் உடைப்பு ஏற்பட்டு இருக்காது.

    வறட்சி என்பது ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம். இந்த காலங்களில் ஏரி, குளங்களை தூர்வார ஆண்டவன் நமக்கு கொடுத்த வாய்ப்பு. அதை ஆட்சியில் உள்ளவர்கள் செய்ய தவறி விட்டார்கள். தற்போது அதை பற்றி குறை சொல்லி எந்த பயனும் இல்லை. ஆட்சியாளர்கள் இனியாவது விழித்து கொண்டு ஏரி, குளங்களை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

    கரிகாலன் கட்டிய கல்லணை மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதன் பின்னர் கட்டிய அணைகள் மீது தான் நம்பிக்கை இல்லை.


    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக ஐக்கிய அரபு நாடு ரூ.700 கோடி தருவதாக கூறியது. இந்த நிதியை மத்திய அரசு தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதைவிட அதிகமாகவே மத்திய அரசு தர தயாராக இருக்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான், எந்த மாநிலத்திலாவது பாதிப்பு ஏற்பட்டு அதற்காக அந்நிய நாட்டு நிதியை பெற்றால் தேசிய கொள்கைக்கு இழுக்கு என்று தடை போட்டார்.

    அந்நிய நாடுகள் அவ்வாறு பணம் தர வேண்டும் என்றால் முறையாக மத்திய அரசிடம் கேட்டு தர வேண்டும். அவ்வாறு கேட்காமல் கொடுக்கும் பட்சத்தில் தனி அமைப்புகள் தவறாக பயன்படுத்தி கொள்ள நேரிடும்.

    கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருகிறார் என்று தகவல் வருகிறது. ஆனால் அது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. தி.மு.கவில் நடப்பது உள்கட்சி சண்டை இல்லை. உள் குடும்ப சண்டை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வருவது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், அந்த தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படாமல் கடலில் கலப்பது வேதனை அளிப்பதாக இல.கணேசன் கூறினார். #BJP #LaGanesan
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ‘ஒரே நாடு, வெள்ளி விழா ஆண்டு’ என்ற பிரசார ஊர்தி பிரசாரத்தை பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பாரத நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதலீடு செய்ய தகுதியுடைய நாடுகளின் பட்டியலில் 146-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 100-வது இடத்துக்கு வந்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்துவிடும்.

    மோடி ஆட்சியில் லஞ்ச லாவண்யங்கள் குறைந்துள்ளன. ப.சிதம்பரம் போன்றோர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே ப.சிதம்பரம் போன்று பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இந்த ஆட்சி குறித்த பாராட்டுக்களை எதிர்பார்க்க முடியாது.


    ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்படும் போது சில மாநிலங்கள் அமுல்படுத்த மறுப்பு தெரிவித்தன. அதனால் டாஸ்மாக், பெட்ரோலிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து பெட்ரோல், டீசல் விலை விரைவில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டு வரப்படும்.

    கர்நாடகத்தில் ஆண்டவனின் கருணையால் பெய்து வரும் மழையால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு வருவது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், அந்த தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படாமல் கடலில் கலப்பது வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கோவி.சேதுராமன், மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில்.பாலு, நகர தலைவர் மோடி.கண்ணன், சங்கரன் ஆகியோர் உடன் இருந்தனர். #CauveryWater #BJP #LaGanesan
    ஆர்.கே.நகரைப் போன்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஹவாலா வேலை ஈடுபடாது என்று இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். #BJP #LaGanesan
    அலங்காநல்லூர்:

    பாலமேட்டில் பா.ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சோழவந்தான் தொகுதி அமைப்பாளார் கோவிந்த மூர்த்தி தலைமை தாங்கினார். பொறுப்பாளர் சந்திரபோஸ் , நகர் தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயாலளர் சீனிவாசன்,மாவட்ட தலைவர் சுசீந்திரன், தேனி பாராளுமன்ற பொறுப்பாளர்கள் ராஜபாண்டியன், கர்னல்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழி முறைகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட இல. கணேசன் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது தமிழ்நாட்டில் நிலவிவரும் விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல்,டீசல் விலை மட்டுமே காரணம் இல்லை. மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் எரிபொருள் விற்பனையை கொண்டு வந்தால் 25 சதவீதம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது.

    வரவுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்றம் இடைத்தேர்தலில் ஆர்.கே. நகரில் ஒரு கட்சி வெற்றி பெற்றது. அதைபோல் இங்கும் அவர்களது ஹவாலா வேலை எடுபடாது.

    பாரதிய ஜனதாவின் கூட்டணி வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். பா.ஜ.க. சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு வகையில் நலதிட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan
    கோவில்களில் கோடிக்கணக்கில் ஊழல், சிலை கடத்தல் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #LaGanesan #idolsmuggling
    சென்னை:

    இந்து அறநிலையத்துறையில் ஆன்லைன் மூலம் பக்தர்கள் கோவில்களுக்கு வழங்கிய காணிக்கையில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து இல.கணேசன் எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ரூ.500 கோடிதான் ஊழல் நடந்திருப்பதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் நடந்தது இன்னும் எவ்வளவோ? அறநிலையத்துறையில் ஊழல் நடப்பது புதிது அல்ல. கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.

    அறநிலைய துறையில் பொறுப்புக்கு வருபவர்களுக்கு தெய்வ நம்பிக்கை கட்டாயம் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளுக்கு அளிக்கும் காணிக்கைகள் உரிய முறையில் செலவிடப்படுவது இல்லை. வருமானத்தில் 20 சதவீதம் மட்டுமே கோவில்களுக்கு செலவிடப்படுகிறது. மீதம் உள்ள 80 சதவீதம் நிர்வாக செலவுகளுக்காக எடுக்கப்படுகிறது.

    ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை வலுவடைந்து வருகிறது. கோவிலையும் அதன் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களே அதை சூறையாடி வருவது வேதனைக்குரியது.


    திருட்டு போன சிலைகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், உண்மையான உணர்வோடு கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு அறநிலையத்துறையின் முக்கிய நிர்வாகிகளே ஒத்துழைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்பது தெய்வத்துக்குத் தான் வெளிச்சம்.

    காணாமல் போன சிலைகள் மீட்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆண்டவன் தண்டனை ஒரு புறம் இருக்கட்டும், குற்றவாளிகளை கோர்ட்டு மூலம், ஆள்பவர்கள் தண்டிக்க வேண்டும்.

    இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும். தெய்வ நம்பிக்கை கொண்டவர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு இல.கணேசன் எம்.பி. கூறினார். #BJP #LaGanesan #idolsmuggling
    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். #Karunanidhi #KarunanidhiHealth
    சென்னை:

    பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார். மு.க.ஸ்டாலின் மற்றும் அங்கிருந்த டாக்டர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரித்தார்.

    பின்னர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கட்சி வேறுபாடற்று அரசியல் களத்தில் இருக்கக் கூடிய அத்தனை பேருக்கும் ஒரு மூத்த தலைவராக விளங்குபவர் கலைஞர். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்.

    அவருக்கு உடல் நலம் குன்றியபோது கனிமொழியை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது கலைஞருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவது உண்மை. ஆனால் ஆபத்தான நிலையில் இல்லை என்று தெரிவித்தார்.

    எனவே எனது சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இன்று காலையில் தான் வந்தேன். உடனே காவேரி மருத்துவமனைக்கு சென்று மு.க.ஸ்டாலின் மற்றும் டாக்டரிடம் கலைஞரின் உடல்நலம் பற்றி கேட்டறிந்தேன். அப்போது கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் அருகில் இருந்தனர்.

    கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இல்லை என்றும், உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தெரிவித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Karunanidhi #KarunanidhiHealth
    ×