search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishna Jayanti"

    • அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.
    • வெல்லத்தை இளம் பாகாக்கி கீழே இறக்கி அரிசி மாவு, தேங்காய், எள்ளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி மாவு - 1 ஆழாக்கு

    உளுந்து மாவு - 2 ஸ்பூன்

    தேங்காய் - 1 துண்டு

    வெல்லம் - 1 கப்

    எள் - 1/2 ஸ்பூன்

    எண்ணெய் (தேவையான அளவு)

    செய்முறை:

    * அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.

    * பிறகு எள்ளையும் வறுக்கவும்.

    * தேங்காயை சிறு சிறு பல்லாக வெட்டி நெய்யில் வறுக்கவும்.

    * வெல்லத்தை இளம் பாகாக்கி கீழே இறக்கி அரிசி மாவு, தேங்காய், எள்ளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    * எண்ணெய் காய வைத்து வெல்லமாவை சிறு உருண்டையாக (முழு நெல்லிக்காய் அளவு) உருட்டி பொரித்து எடுக்கவும்.

    • பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.
    • கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளைச் சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

    நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாச்சாரம், பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையும் சமர்ப்பிக்கின்றனர்.

    அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார். பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான்.

    கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல் பகவத் கீதையாகும்.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம். அன்று பல கோவில்களில் உறியடித் திருவிழா நடைபெறும்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து, மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், அவல், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபடுவர். அந்த நீல வண்ணக் கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்.

    கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை வீட்டில் குழந்தைகளுடன் கொண்டாடும் போது கிருஷ்ணரின் கதைகளைச் சொல்லி வழிபட்டால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ராஜதந்திரம் அதிகரிக்கும், அரசியல் சாணக்கியத் தன்மை அதிகரிக்கும். பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். எளிமையாகவும், சுருக்கமாகவும், புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும்.

    குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், புதுமணத் தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சற்புத்திர பாக்யத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சற்புத்திர பாக்கியத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.

    நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் கண்ணனை அழைத்து வழிபட்டு ஏராளமான பலன்களைப் பெற்றிடுவோம்.

    • ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வழக்கமான வீட்டு வேலைகள் கூட சிக்கலானதாக தோன்றும்.
    • மருத்துவ சேவைகள் போன்ற விஷயங்களில் மிகுந்த அக்கறையும் முயற்சியும் எடுக்கப்படுகிறது.

    வடவள்ளி 

    கோவை தாளியூரில் அனன்யா ஷெல்டர்ஸ், அனன்யாவின் நானா நானி ஹோம்ஸ் மூலம் 50 வயதுக்கு மேற்பட்ட பணி ஓய்வு பெற்றவர்களுக்கான மன மகிழ்வையும், தன்னிறைவையும் தரும் வகையில் சிறந்த நவீன வசதிகளுடன் கூடிய அபிமானமான குடியிருப்பு திட்டங்களை வழங்கி வருகிறது.

    இது அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தங்களை போக்குகிறது, ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு வழக்கமான வீட்டு வேலைகள் கூட சிக்கலானதாக தோன்றும். சிறு விஷயங்கள் கூட குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மனதில் வைத்து, வீட்டு பராமரிப்பின் சுமையை குறைக்கக்கூடிய நம்பகமான குடியிருப்பு சேவைகள் வழங்கப்ப டுகின்றன.

    நகர்ப்புற மற்றும் கிராமப்புற தன்மைகள் இரண்டும் உள்ள இடங்களில் இந்த குடியிருப்பு திட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உணவு, உடற்பயிற்சி மற்றும் மருத்துவ சேவைகள் போன்ற விஷயங்களில் மிகுந்த அக்கறையும் முயற்சியும் எடுக்கப்படுகிறது. ஏடிஎம்கள், மருந்தகம், மருத்துவமனை/ஆய்வகங்கள் போன்ற அடிக்கடிச் செல்லும் வசதிகள் குடியி ருப்புக்குள் அமைக்கப்ப ட்டிருக்கின்றன, இதனால் குடியிருப்பாளர்கள் அவற்றைத் தேடி நீண்ட தூரம் செல்ல வேண்டியதில்லை. அனன்யாவின் நானா நானி ஹோம்ஸின் முக்கிய நோக்கம், செயல்பாடுகள் அற்று ஓய்வு இல்லமாக செயல்படுவதை விட, சுறுசுறுப்பான ஓய்வுக்கால வாழ்க்கையை வளர்ப்பதாகும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பும் வகையில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள், நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன, இது அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் சிறந்த உள்ளத்தையும் வளர்ப்பது மட்டுமல்லாமல், சமூகத்தின் ஒட்டுமொத்த மகிழ்வையும் அதிகரிக்கும்.

    நானா நானியில், கிருஷ்ண ஜெயந்தி மிகுந்த வண்ணமய–மாகவும், சிறப்புக்களுடனும் கொண்டாடப்பட்டது. ஹோம்ஸ் வளாகத்தில் உள்ள ராதே கிருஷ்ணா கோவிலில் பல்வேறு சமூகத்தினர் பல நிகழ்ச்சி சளுடன் கிருஷ்ண ஜெ யந்தியை கொண்டாடினர். உறியடி திருவிழா அனைத்து வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியுடன் நடத்தப்பட்டது. மேலும் கோவிலில் விஸ்வரூப தரிசனம், சங்கல்பம், கலச பூஜை, விக்னேஷ்வர பூஜை நடந்தது. கோவிலின் வளாகத்தில் உள்ள கோவிலில் கோ பூஜை, ஸ்ரீ விஷ்ணு தர்முத்தர புராணோக்தம், ஸ்ரீ கிருஷ்ண சஹஸ்ரநாம ஹோமம், நவகலச திருமஞ்சனம், அலங்காரம் & விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், மகா தீபாராதனை ஆகியவையும் நடந்தன. இறுதியாக வளாகம் முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணரின் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. அனன்யாவின் நானா நானிஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் அனைத்து குடியிருப்பாளர்களும், எம்டி யுவராஜ் மற்றும் ஜேஎம்டி, திருமதி உமா மகேஸ்வரி யுவராஜ் ஆகியோர் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 3-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பின்னர் மாலை ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் இருந்து கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகள் கிருஷ்ணர் பக்தி பாடல் பாடிக்கொண்டு மேளதாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 3 ரோடு, கடைவீதி, நால்ரோடு, சத்தி ரோடு வழியாக ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலை அடைந்தனர்.

    இதனையடுத்து கிருஷ்ணருக்கு மகா மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட வேடம் அணிந்து வந்திருந்த குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சிவசக்தி தலைமையில், மாநில கோரக்க்ஷா இணை அமைப்பாளர் ரகுபதி முன்னிலையில் நடந்தது. விழாவில் வக்கீல் ராஜா தியானேஸ்வரன் வரவேற்றார்.

    கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, பா.ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி துணை தலைவி வித்யா ரமேஷ், பா.ஜனதா கட்சி ஓ.பி.சி அணியின் மாவட்ட தலைவர் சிவசக்திவேல், வக்கீல் பிரிவு மாவட்ட அமைப்பாளர் கோபி தர்மராஜ், 10-வது வார்டு கவுன்சிலர் பரமசிவம், பா.ம.க. ஈரோடு வடக்கு மாவட்ட இணை செயலாளர் ஆண்டவர், ஈரோடு மேற்கு மாவட்ட பஜ்ரங்தள் பொறுப்பாளர் ஜிம் முருகேஷ், தர்மபிரசாத், பஜ்ரங்தள் பவானி ஒன்றிய பொறுப்பாளர் க.முத்து, ஒன்றிய, செயலாளர் குமரவடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் துறவியர் ஆலய பாதுகாப்பு அமைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    • கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
    • சிறுவர்கள் அதில் இருந்த வெண்ணையை போட்டி போட்டு எடுத்து ரசித்து ருசித்தனர்.

    கவுண்டம்பாளையம்

    கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நாடு முழுவதும் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கிராமத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலை கணபதி ஹோமத்து டன் விழா தொட ங்கியது. அபிஷேக பூஜை, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாலை நடைபெற்ற உரியடி நிகழ்ச்சியில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் பங்கேற்றனர். உரியடிப்பவர்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி உரியை அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டனர்.

    வெண்ணை நிரப்பட்ட உரி பானையை அடித்து உடைத்த சிறுவர்கள் அதில் இருந்த வெண்ணையை போட்டி போட்டு எடுத்து ரசித்து ருசித்தனர். மேலும் உரிய அடித்த சிறுவர் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் விழா குழுவினர் சார்பாக வழங்கினர்.

    தொடர்ந்து 40 அடி உயரம் கொண்ட வழுக்கு மரம் தயார் செய்யப்பட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடைபெற்றது. எண்ணை, கடுகு, அரப்பு, கற்றாளை உள்ளிட்டவைகளைக் கொண்டு வழுக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மரத்தில் சிறுவர்கள், இளை ஞர்கள் போட்டி போட்டு ஏறினர். இறுதியில் ஒரு இளைஞர் 40 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறி உச்சியில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருட்களை எடுத்தார். இதை சுற்று வட்டாரங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்தனர்.தொடர்ந்து அலங்கரிக்க ப்பட்ட வாகனத்தில் கிருஷ்ணர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணர் கோவில் இறைவழிபாடு விழாகுழுவினர் செய்திருந்தனர்.

    • மானாமதுரை சுந்தரவிநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
    • குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாப்பட்டது. இதில் தவழும் கிருஷ்ணர் அலங்கரித்து வெண்ணெய் வைத்து வழிபாடு, பூஜை நடந்தது.

    அதைதொடர்ந்து சுந்தரவிநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் அந்த பகுதியில் உள்ள சுமார் 150 குழந்தைகள் ராதை- கிருஷ்ணர் வேடங்களில் வந்து வழிபாடு செய்தனர்.

    ராதை-கிருஷ்ணர் வேடங்களில் கோவிலுக்கு வந்த குழந்தைகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. இரவு கோவில் முன்பு கோலாட்டம் நடந்தது.

    இதேபோல் மானாமதுரை அருகே உள்ள பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவில், ெரயில்வே காலனி, கொன்னக்குளம், புலிக்குளம், வன்னிக்குடி, தெ.புதுக்கோட்டை, வேம்பத்தூர், வேதியேரேந்தல், செய்களத்தூர், சிப்காட், மாங்குளம் ஆகிய கிராம பகுதிகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.

    • தேவதானப்பட்டி ெமயின்ரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது.
    • கிருஷ்ண ஜெயந்தியையொட்டி 3 நாட்கள் திருவிழா நடை பெற்றது.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி ெமயின்ரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி 3 நாட்கள் திருவிழா நடை பெற்றது. பல்வேறு சமூக த்தினர் பால்குடம் எடுத்து சிறப்பு அபிஷேகம் செய்த னர்.

    மேலும் சாமி பூப்பல்ல க்கில் ஊர்வலமாக வந்தார். அதன்பின்னர் உறியடி, வழுக்கு மரம் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சி கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தேவதானப்பட்டி இன்ஸ்பெ க்டர் சங்கர் தலைைமயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணா சேகர் மற்றும் விழா கமிட்டி யினர் செய்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அரசியல் கட்சியினர் தஹி ஹண்டி கொண்டாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர்.
    • ஆண்களுக்கு நிகராக இளம்பெண்களும் பல அடுக்கு பிரமிடுகளை அமைத்து தயிர் பானையை உடைத்தது அசத்தினர்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் குறிப்பாக தலைநகர் மும்பையில் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது.

    விநாயகர் சதுர்த்தி, தஹி ஹண்டி என பல்வேறு திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெறும் தஹி ஹண்டி என அழைக்கப்படும் தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தஹி ஹண்டி கொண்டாட்டம் பெரிய அளவில் நடைபெறவில்லை. எனவே 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து நேற்று நகரில் தஹி ஹண்டி கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடந்தது. மும்பை, தானேயில் நேற்று அரசியல் கட்சிகள், அமைப்பினர், பொது மக்கள் சார்பிலும் பல்வேறு இடங்களில் தஹி ஹண்டி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    குறிப்பாக மும்பை மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் கட்சியினர் தஹி ஹண்டி கொண்டாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினர். அவர்கள் கோவிந்தாக்களுக்கு (தயிர்பானை உடைக்கும் குழுவினர்) பரிசுகளை அள்ளி கொடுத்தனர். எனவே வண்ண சீருடை அணிந்த கோவிந்தா குழுக்கள் நேற்று காலை முதலே வாகனங்களில் மும்பை, தானே பகுதிகளை சுற்றி வந்தனர்.

    அவர்கள் தஹி ஹண்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தயிர் பானைகளை உடைத்து அசத்தினர். மேலும் பரிசுகளை அள்ளி சென்றனர். இதன் காரணமாக நேற்று மும்பை நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. ஆண்களுக்கு நிகராக இளம்பெண்களும் பல அடுக்கு பிரமிடுகளை அமைத்து தயிர் பானையை உடைத்தது அசத்தினர்.

    தானே டெம்பி நாக்காவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சார்பில் பிரமாண்டமான தஹி ஹண்டி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கோவிந்தாக்கள் கலந்து கொண்டு மனித பிரமிடு அமைத்து அசத்தினர். குறிப்பாக கோவிந்தாக்கன் 9 அடுக்கு வரை பிரமிடு அமைத்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். மேலும் அவர்கள் பிரமிடை கலைக்க சீட்டு கட்டுபோல ஒரே நேரத்தில் சரிந்து விழும் காட்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.

    ஏக்நாத் ஷிண்டே ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் நடிகை ஷரத்தா கபூர் கலந்து கொண்டு கோவிந்தாக்களை உற்சாகப்படுத்தினார்.

    இதுதவிர தானேயில் பல்வேறு இடங்களில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்களால் பிரமாண்ட தஹி ஹண்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதேபோல ஒர்லியில் மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் ஏற்பாட்டில் நடந்த தஹி ஹண்டி நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். இதேபோல தாதர் சிவாஜி பார்க்கில் சேனா பவன் முன், சிவசேனா சார்பில் விசுவாச தஹி ஹண்டி நிகழ்ச்சிகள் நடந்தன. ஒர்லியில் சிவசேனா சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார்.

    இதேபோல மும்பை, தானேயின் பல்வேறு பகுதிகளில் தஹி ஹண்டி கொண்டாட்டங்கள் நடந்தன. ஒரு சில இடங்களில் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கோவிந்தாக்களை உற்சாகப்படுத்தினர்.

    மும்பை, தானே மட்டுமின்றி மாநிலம் முழுவதும் மக்கள் வெள்ளத்தில் தஹி ஹண்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கலாசார திருவிழாவாக மக்கள் கொண்டாடினர். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவிழா என்பதால், இதில் மக்கள் கூடுதல் உற்சாகத்தை காட்டினர்.

    முன்னதாக தஹி ஹண்டிக்கு மனித பிரமிடு அமைத்து தயிர் பானை உடைக்கும் நிகழ்வை சாகச விளையாட்டில் மாநில அரசுக்கு சேர்க்கும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து இருந்தார். இதன் மூலம் கோவிந்தாக்கள் விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலையில் சேர முடியும். மேலும் உயிரிழப்பு, காயம் ஏற்பட்டால் அரசின் நிவாரணமும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிருஷ்ண பகவான் அவதரித்த நாளான ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி மற்றும் ரோகினி நட்சத்திரம் இணைந்த நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா தேவ கிருஷ்ண கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி அதிரசம், சீடை, அல்வா உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டன. மேலும் 10 ஆயிரம் லட்டுகள், 8 ஆயிரம் பானைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    கிருஷ்ண பகவான் அவதரித்த நாளான ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி மற்றும் ரோகினி நட்சத்திரம் இணைந்த நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா தேவ கிருஷ்ண கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி அதிரசம், சீடை, அல்வா உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டன. மேலும் 10 ஆயிரம் லட்டுகள், 8 ஆயிரம் பானைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

    இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதனை தொடர்ந்து வாசனை மலர்களான மல்லி, பிச்சி உள்ளிட்ட பூக்களை கொண்டு கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதன்பின்னர் விஸ்வரூப ஆரத்தி நடைபெற்றது. பின்னர் அங்கு அமைந்துள்ள கோசாலையில் சிறப்பு கோ பூஜை வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கோவிலில் வம்சவிருத்தி ஹோமம், மகா அபிஷேகம் உள்ளிட்டவைகள் நடந்தது. பூரி ஜெகநாதர் உள்ளிட்ட ஆலயங்களில் சுவாமிக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படும் சப்பான் போக் எனப்படும் சிறப்பு நெய்வேத்தியம் இந்த ஆண்டு மகாதேவ கிருஷ்ணருக்கு நடைபெற உள்ளது.

    தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் காலை முதலே காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாலையில் மண் பானையில் லட்டு, வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை உள்ளிட்டவை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் மகா சிறப்பு ஆரத்தி நடக்கிறது.

    இதேபோல் பாளை ராஜாக்கள் தெருவில் உள்ள பஜனை மடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடக்கிறது. டவுன் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    • இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
    • இன்று கிருஷ்ணருக்கு பூஜை செய்யும் போது இவற்றை மறக்கக்கூடாது.

    பூஜைக்குரிய இலை : துளசி பத்ரம்

    பூஜைக்குரிய மலர்கள் : மல்லிகை.

    நிவேதனப் பொருட்கள் : பால், வெண்ணை,

    தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன.

    படிக்க வேண்டிய நூல் : கிருஷ்ண அஷ்டோத்ர நாமாவளி, கிருஷ்ணாஷ்டக ஸ்தோத்திரம், ஆண்டாள் அருளிய அஷ்டோத்ர நாமாவளி, ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதக் கதைகள், கீதையின் நன்நெறிகள் வசீகரிப்பவன்

    • கண்ணன் கோபியர் ஆடைகளை எடுத்து மறைத்து வைத்து கொள்வான்.
    • கண்ணன் வெண்ணெய் திருடி ஆசை தீர உண்பார்.

    ஆயர்பாடியில் உள்ள கோபியர் கண்ணபிரானிடம் கொண்ட வேட்கை மிகுதியால் அவன் தம்மைக் காதலிக்க வேண்டி நோன்பு நோற்றனர். முடிவில் யமுனையில் நீராடச் சென்றனர். அங்கே அவர்கள் சேலைகளைக் கரையில் வைத்து விட்டு நீராடினர்.

    கண்ணன் அந்த ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். சிறிது நேரம் அவர்களை அலைக்கழித்தான். பின்பு அவர்கள் கைகூப்பி வணங்கிக் கேட்க, ஆடைகளைத் திருப்பி கொடுத்தான்.

    ஸ்ரீகிருஷ்ணர், கோபிகைகளின் மேல் வைத்திருந்த தீராத அன்பின் காரணமாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று வெண்ணெயை திருடி ஆசை தீர உண்பார். ஆனால் அவர் உண்மையிலேயே திருடியது தனது பக்தர்களின் மனங்களில் உள்ள கெட்ட குணங்களைத் தான். பின்னர் அம்மனங்களைத் தனது தெய்வீகச் சக்தியால் நிரப்பி விடுவார்.

    அதன் பயனாக அவர்கள் உவகை மறந்து ஸ்ரீகிருஷ்ணரிடமே அதிதீவிர பக்தி பூண்டு, அவரது பாதாரவிந்தத்தையே நினைத்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் எல்லையற்ற பேரானந்தத்தை அடைந்தனர்.

    ஸ்ரீகிருஷ்ணரின் தனிப்பட்ட ஆத்மா, உலக உயிர்களிலெல்லாம் வாசம் செய்கின்றது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.

    • கிருஷ்ணனின் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரையெல்லாம் வசீகரித்தது.
    • கண்ணனை கவுரவிக்க விரும்பினார்கள் ஆயர்பாடி சிறுவர்கள்.

    கிருஷ்ணன் தலையை மயிலிறகு அழகு செய்கிறது. இந்த அலங்காரம் அவனுக்கு எப்படி ஏற்பட்டது தெரியுமா?

    கம்சனின் கொடுமை காரணமாக கிருஷ்ணருடைய பெற்றோர் சிறையில் வாடநேரிடுகிறது. தங்கத்தொட்டிலில் இட்டு சீராட்டப்பட வேண்டிய ராஜ குழந்தை மூங்கில் கூடையில் கிடத்தப்பட்டு கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறான். இதனால் ஆயர்பாடி புழுதியில் விளையாட வேண்டியவனாகிறான். ஆனால் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரையெல்லாம் வசீகரித்தது.

    அவன் புதுப்புது உத்திகளைக் கையாண்டு சின்னச்சின்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டான். இதனால் கண்ணனை கவுரவிக்க விரும்பினார்கள் ஆயர்பாடி சிறுவர்கள். உடனே அங்கே சுற்றித்திரிந்த மயிலைப்பிடித்தார்கள். அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள். அன்று முதல் கிருஷ்ணனின் திருமுடியில் மயிலிறகு நீங்காத இடம் பிடித்தது.

    ×