search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Festival Celebration"

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 3-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பின்னர் மாலை ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் இருந்து கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகள் கிருஷ்ணர் பக்தி பாடல் பாடிக்கொண்டு மேளதாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 3 ரோடு, கடைவீதி, நால்ரோடு, சத்தி ரோடு வழியாக ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலை அடைந்தனர்.

    இதனையடுத்து கிருஷ்ணருக்கு மகா மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட வேடம் அணிந்து வந்திருந்த குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சிவசக்தி தலைமையில், மாநில கோரக்க்ஷா இணை அமைப்பாளர் ரகுபதி முன்னிலையில் நடந்தது. விழாவில் வக்கீல் ராஜா தியானேஸ்வரன் வரவேற்றார்.

    கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, பா.ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி துணை தலைவி வித்யா ரமேஷ், பா.ஜனதா கட்சி ஓ.பி.சி அணியின் மாவட்ட தலைவர் சிவசக்திவேல், வக்கீல் பிரிவு மாவட்ட அமைப்பாளர் கோபி தர்மராஜ், 10-வது வார்டு கவுன்சிலர் பரமசிவம், பா.ம.க. ஈரோடு வடக்கு மாவட்ட இணை செயலாளர் ஆண்டவர், ஈரோடு மேற்கு மாவட்ட பஜ்ரங்தள் பொறுப்பாளர் ஜிம் முருகேஷ், தர்மபிரசாத், பஜ்ரங்தள் பவானி ஒன்றிய பொறுப்பாளர் க.முத்து, ஒன்றிய, செயலாளர் குமரவடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் துறவியர் ஆலய பாதுகாப்பு அமைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

    ×