search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kovilpatti"

    • துறைத்தலைவர் கலைவாணி, செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் மற்றும் தொழில்நுட்ப போட்டிகள் குறித்து பேசினார்.
    • கருத்தரங்கில் மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த தலைப்புகளில் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் துறையின் தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது. 2-ம் ஆண்டு மாணவி ஷ்ரியா வரவேற்று பேசினார். துறை மன்றம் குறித்த தகவல்களை மாணவர் மலையரசு தொகுத்து வழங்கினார். கல்லூரி டீன் பரமசிவம் மற்றும் துறைத்தலைவர் வே.கலை வாணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் சென்னை, காக்னி சன்ட் நிறுவனத்தின் மேலாள ரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான சுந்தர ராஜ பெருமாள் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக மாணவர் முத்துகுமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப் படுத்தி பேசினார். துறைத் தலைவர் கலைவாணி, செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தையும் மற்றும் தொழில்நுட்ப போட்டிகள் குறித்த தகவல்கள் குறித்து பேசினார். இணையதள வடிவமைப்பாளருக்கான தகுதிகள் மற்றும் அந்த துறையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கான வழிமுறை கள் குறித்தும் சிறப்பு விருந்தினர் சுந்தர ராஜ பெருமாள் மாணவர்களுக்கு விளக்கினார். மேலும், மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்ப துறைகளிலும் தங்கள் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். முடிவில் மாணவி பூர்ணிமா நன்றி கூறினார்.

    கருத்தரங்கில் மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த தலைப்புகளில் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல் மற்றும் முதல்வர் கே.காளி தாச முருகவேல் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஒருங்கி ணைப்பாளர் ராம்பிரியா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு துர்க்கா அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • காலை 7 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், அம்பாள் மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு துர்க்கா அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு கணபதி பூஜை, சங்கல்பம், கும்ப பூஜை, கணபதி ஹோமம், அம்பாள் மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதை தொடர்ந்து 8.5 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு உற்சவர் அம்பாள் துர்க்கை அம்மனுக்கு 11 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், குங்குமம், வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் செய்தார். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், முருகன், நாகசரவணன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், பூமாலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.

    • போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 160-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 320 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட முதல் 8 பள்ளிகளின் மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில அளவிலான மாபெரும் வினாடி வினா போட்டி நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    தொடர்ந்து 9-வது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 160-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 320 மாணவ- மாணவிகள் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர்.

    கணிதத் துறை உதவி பேராசிரியை கீதா வரவேற்றார். இதில் கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் ேபசியதாவது:-

    கிராமப்புற மாணவர்க ளின் முன்னேற்றத்திற்காக கல்லூரி முன்னெடுக்கும் பல்வேறு முயற்சிகளை விளக்கி கல்வியின் அடிப்படை நன்மைகள் பற்றி எடுத்துரைத்தார். போட்டிதேர்வுகளின் போது கொடுக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் எவ்வாறு முழு திறன்களையும் வெளிப் படுத்துவது என்பதற்கு இது போன்ற வினாடி வினா போட்டிகள் உதவும் என விளக்கி பேசினார்.

    இப்போட்டியை பிரபல குவிஸ் மாஸ்டர் டாக்டர் சுமந்த்.சி.ராமன் தொகுத்து வழங்கினார்.

    தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட முதல் 8 பள்ளிகளின் மாண வர்கள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிச் சுற்றில் நடப்பு நிகழ்வுகள், தற்கால அரசியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது.

    கல்லூரி இயக்குனர் எஸ்.சண்முகவேல், கல்லூரியின் சீனியர் டீன்.எம்.ஏ. நீலகண்டன் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் பரிசு வழங்கினர். மதுரை விகாஷா ஹெரிட்டேஜ் காம்பசின் மாண வர்கள் முத்து சிவகாதிர் மற்றும் அஸ்வின் சிவா முதல்பரிசு ரூ.25 ஆயிரத்தை யும், நெல்லை புஷ்பலதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எம். நஷீஹா பாத்திமா மற்றும் வீ.பி.ஹரினி 2-ம் பரிசு ரூ.15 ஆயிரத்தையும், தென்காசி பாரத் வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பொன்செல்வ ஜெயந்த் மற்றும் ஜாய்சன் ராஜா ஆகியோர் 3-ம் பரிசு ரூ.10 ஆயிரத்தையும் தட்டி சென்றனர்.

    மேலும் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குநர், முதல்வர் மற்றும் துறைத் தலைவர் ஆகியோரது வழிகாட்டுதலின்படி, வினாடிவினா போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், எஸ்.சித்திரைக்குமார், எஸ். எஸ்.பாஷித்தா பர்வீன், எம்.அரவிந்த், எஸ்.என்.ஐ.சதீஷ் பாலகுமாரன், எஸ்.சிவபாலன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கோவில்பட்டியில் முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் டாக்டர் அனுராதா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் முன்னாள் முதல்- அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண் சிகிச்சை முகாம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழி லாளர் அணி, கோவில்பட்டி 14-வது வார்டு தி.மு.க., விருதுநகர் ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தினர்.

    கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலா ளர் அணி அமைப்பாளர் தவமணி முன்னிலை வகித் தார். அமைச்சர் கீதாஜீவன் முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர். அனுராதா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப் பட்டது. இதில் விருதுநகர் ரோட்டரி கிளப் வடிவேல், கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பஞ்சா யத்து துணைத்தலைவர் சந்திரசேகர், திமுக ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், மாவட்ட சிறு பான்மையினர் பிரிவு இணை அமைப்பாளர் அமலி. அந்தோணி பிரகாஷ், கவுன்சிலர்கள் ஜாஸ்மின் லூர்துமேரி, முத்து லட்சுமி பூல்பாண்டியன், முத்து பாண்டியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணியின் துணை அமைப் பாளர் சந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நகர்மன்ற உறுப்பினரும், பொறியாளரு மான தவமணி செய்திருந் தார்.

    • நவராத்திரி விழாவையொட்டி தினமும் காலை வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும்.
    • இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி தினமும் காலை வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். இதனையொட்டி நடைபெற்ற துர்கா பூஜையில் சிறப்பு அர்ச்சனையும், தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை சுப்பிரமணிய ஐயர் செய்தார். ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமனன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம், சுண்டல் வழங்கப்பட்டது.

    • கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 25-வது மாத அன்னதான நிகழ்ச்சி புது ரோடு சந்திப்பு சாலையில் உள்ள முச்சந்தி செல்வ விநாயகர் கோவிலில் நடைபெற்றது.
    • கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 25-வது மாத அன்னதான நிகழ்ச்சி புது ரோடு சந்திப்பு சாலையில் உள்ள முச்சந்தி செல்வ விநாயகர் கோவிலில் நடைபெற்றது. முன்னதாக செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டு நினைவு பரிசினை வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கு தொழிலதி பரும், நகர் மன்ற உறுப்பி னரு மான முத்துராஜன் தலைமை தாங்கினார். கோவில் தர்மகர்த்தா முருகன், முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் மந்திரசூடாமணி வரவேற்று பேசினார். தொழிலதிபர்கள் மாடசாமி, செல்லத்துரை, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் பொங்கல் பிரசாதத்தை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறு வனர் சீனிவாசன், தலை வர் ஜெயக்கொடி, செய லாளர் ஜோதி கா மாட்சி, பொருளாளர் கார்த்தி கேயன், செயற்குழு உறுப்பி னர்கள் நடராஜன், பாண்டி யன், மாரிமுத்து, லவ ராஜா, சுப்பிரமணியன், பால முருகன், கதி ரேசன், முருகன், சண்முக சுந்த ரம், தங்கராஜ், முத்து மாரி யம்மன், செல்வம் மற்றும் பெரியராஜ், செல்லத்துரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கவுன்சிலர் ஜேஸ்மின் லூர்து மேரி ஏற்பாட்டில் 100 பெண்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டம் அட்டை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பயனாளிகள் சென்ற வேனை கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி வழி அனுப்பி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 22-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ஜேஸ்மின் லூர்து மேரி ஏற்பாட்டில் 100 பெண்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான கலைஞர் காப்பீட்டு திட்டம் அட்டை வாங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    முன்னதாக மனுதாரர்கள் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார் மற்றும் தாசில்தார்களிடம் பரிந்துரை பெற்று மருத்துவ அட்டை வாங்க வீண் கால தாமதமும் அலைச்சலும் ஏற்படுவதால் கவுன்சிலர் ஜேஸ்மின் லூர்துமேரி அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் மனுதாரர்களை நேரில் அழைத்துச் சென்று உரிய விசாரணை நடத்தி மருத்துவ அட்டை பெற்றுத்தர உதவினார். இறுதி கட்டமாக தனது சொந்த செலவில் வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை மருத்துவ அட்டை பெற்று வர தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அழைத்து சென்றார்.

    பயனாளிகள் சென்ற வேனை கோவில்பட்டி நகராட்சி சேர்மன் கருணாநிதி வழி அனுப்பி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அமலி அந்தோணி பிரகாஷ் உட்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெற்று தர உதவியாக இருந்த தி.மு.க. கவுன்சிலருக்கும், நகராட்சி சேர்மன், அமைச்சர், மற்றும் தமிழக அரசுக்கும், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இதேபோல் அனைத்து கவுன்சிலர்களும் முன்னெடுத்தால் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பயனாளிகள் தெரிவித்தனர்.

    • நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • நிறைவு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட நில அளவை துறையின் சார்பில் நினைவு பரிசு வழங் கப்பட்டது.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4ன் கீழ் புதியதாக தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 153 நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு கடந்த ஜூலை 19-ந்தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரை 60 நாட்கள் நடைபெற்ற நில அளவை பயிற்சி முகாம் நிறைவு விழா கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    விழாவில், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. எல்.ஜேன் கிறிஸ்டி பாய் தலைமை தாங்கினார். மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் ஆர்.சீனிவாசகன் முன்னிலை வகித்தார். நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மேலும், இவ்விழாவில் கல்லூரி இயக்குனர்எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாஸ முருகவேல், கோவில்பட்டி தாசில்தார் கே.லெனின் மற்றும் மாவட்ட பராமரிப்பு ஆய்வாளர் எஸ்.சுடலைமுத்து உள்பட கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட நில அளவை துறையின் சார்பில் நினைவு பரிசு வழங் கப்பட்டது. மாவட்ட நில அளவைத்துறை கண்காணிப்பாளர் எஸ்.பரஞ்ஜோதி நன்றி கூறினார்.

    • கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
    • இதனையொட்டி வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய அய்யர் செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலார் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.

    • பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார்.
    • கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் கலந்து கொண்டு வகுப்பறை கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி, பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் 11 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினர் உலகராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியை உஷா ஜோஸ்பின் வரவேற்றார். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் கலந்து கொண்டு ரூ.2.33 கோடி மதிப்பிலான வகுப்பறை கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி, பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முத்து முருகன், கவுரி, ஒப்பந்தக்காரர் தங்கராசு, ஆசிரியர்கள் சீனிவாசன், மோகன்ராஜ், சென்னப்பன், சரவணசெல்வி உள்பட அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய அய்யர் செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்கி வருகிறது.
    • கடந்த 24-ந் தேதி முதல் நெல்லைக்கு வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கப்பட்டது

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ரெயில் நிலைய அதிகாரியிடம், நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:-

    உலக தர வசதிகளை கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இந்திய நகரங்களுக்கு இடையே பயணிக்கும் அதிவேக தொடர்வண்டி ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்கி வருகிறது.

    தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மையப் பகுதியாக கோவில்பட்டி நகரம் அமைந்துள்ளது. இந்த 3 மாவட்டங்களில் வசிக்கும் சுற்று வட்டார 40 கிலோமீட்டர் பகுதிகளை சேர்ந்த பல லட்சம் மக்களின் தொலைதூர பயணத்திற்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் மிக முக்கியமான போக்குவரத்து மைய பகுதியாக உள்ளது.

    கல்வி வேலை தொழில் ஆகிய காரணங்களுக்காக தொலைதூரம் செல்ல நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி ரெயில் நிலையமும் முதன்மை யானது.

    கடந்த 24-ந் தேதி முதல் நெல்லை- சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. ஆனால் இந்த ரெயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் தரப்படவில்லை.

    இதனால் கோவில்பட்டி பகுதி மக்கள் வந்தே பாரத் ரெயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே கோவில்பட்டி மக்களின் தொலைதூர பயணத் தேவைக்கான வந்தே பாரத் ரெயிலை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சியில் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் ராஜா என்ற விஜி, செயலாளர் அசோக், துணைச் செயலாளர் ராஜகுரு, பொருளாளர் சந்தனகுமார், துணைத் தலைவர் ஜெய பாஸ், அசோக் குமார், பாலசுந்தரம், ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், சந்தரக் கண்ணன் உள்ளிட்ட நுகர்பொருள் விநியோ கஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×