search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்
    X

    கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

    • கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 25-வது மாத அன்னதான நிகழ்ச்சி புது ரோடு சந்திப்பு சாலையில் உள்ள முச்சந்தி செல்வ விநாயகர் கோவிலில் நடைபெற்றது.
    • கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 25-வது மாத அன்னதான நிகழ்ச்சி புது ரோடு சந்திப்பு சாலையில் உள்ள முச்சந்தி செல்வ விநாயகர் கோவிலில் நடைபெற்றது. முன்னதாக செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டு நினைவு பரிசினை வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கு தொழிலதி பரும், நகர் மன்ற உறுப்பி னரு மான முத்துராஜன் தலைமை தாங்கினார். கோவில் தர்மகர்த்தா முருகன், முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் மந்திரசூடாமணி வரவேற்று பேசினார். தொழிலதிபர்கள் மாடசாமி, செல்லத்துரை, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் பொங்கல் பிரசாதத்தை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறு வனர் சீனிவாசன், தலை வர் ஜெயக்கொடி, செய லாளர் ஜோதி கா மாட்சி, பொருளாளர் கார்த்தி கேயன், செயற்குழு உறுப்பி னர்கள் நடராஜன், பாண்டி யன், மாரிமுத்து, லவ ராஜா, சுப்பிரமணியன், பால முருகன், கதி ரேசன், முருகன், சண்முக சுந்த ரம், தங்கராஜ், முத்து மாரி யம்மன், செல்வம் மற்றும் பெரியராஜ், செல்லத்துரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×