search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vandhe Bharath Train"

    • தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்கி வருகிறது.
    • கடந்த 24-ந் தேதி முதல் நெல்லைக்கு வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கப்பட்டது

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ரெயில் நிலைய அதிகாரியிடம், நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:-

    உலக தர வசதிகளை கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இந்திய நகரங்களுக்கு இடையே பயணிக்கும் அதிவேக தொடர்வண்டி ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி விளங்கி வருகிறது.

    தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் மையப் பகுதியாக கோவில்பட்டி நகரம் அமைந்துள்ளது. இந்த 3 மாவட்டங்களில் வசிக்கும் சுற்று வட்டார 40 கிலோமீட்டர் பகுதிகளை சேர்ந்த பல லட்சம் மக்களின் தொலைதூர பயணத்திற்கு கோவில்பட்டி ரெயில் நிலையம் மிக முக்கியமான போக்குவரத்து மைய பகுதியாக உள்ளது.

    கல்வி வேலை தொழில் ஆகிய காரணங்களுக்காக தொலைதூரம் செல்ல நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி ரெயில் நிலையமும் முதன்மை யானது.

    கடந்த 24-ந் தேதி முதல் நெல்லை- சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. ஆனால் இந்த ரெயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் தரப்படவில்லை.

    இதனால் கோவில்பட்டி பகுதி மக்கள் வந்தே பாரத் ரெயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே கோவில்பட்டி மக்களின் தொலைதூர பயணத் தேவைக்கான வந்தே பாரத் ரெயிலை கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சியில் நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் ராஜா என்ற விஜி, செயலாளர் அசோக், துணைச் செயலாளர் ராஜகுரு, பொருளாளர் சந்தனகுமார், துணைத் தலைவர் ஜெய பாஸ், அசோக் குமார், பாலசுந்தரம், ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், சந்தரக் கண்ணன் உள்ளிட்ட நுகர்பொருள் விநியோ கஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் இருந்து பயணிகளுடன் இயக்கப்பட்ட ரெயில் இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது.
    • நெல்லை சந்திப்பில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.

    நெல்லை:

    நெல்லை-சென்னை இடையே 'வந்தே பாரத்' ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

    நாளை முதல் இருமார்க்கத்திலும் இயங்கும்

    தொடக்க விழாவை யொட்டி சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டது. நேற்று மதியம் சென்னையில் இருந்து நெல்லைக்கு பயணி களுடன் இயக்கப்பட்ட இந்த ரெயில் இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது.

    செவ்வாய்க்கிழமைகளில் வந்தே பாரத் ரெயில் ஓடாது. அதன்படி இன்று இந்த ரெயில் இயக்கப்பட வில்லை. நாளை (புதன் கிழமை) முதல் இருமார்க் கத்திலும் இந்த ரெயில் சரியான கால அட்ட வணைப்படி இயங்குகிறது.

    தீபாவளி முன்பதிவு

    அதன்படி நெல்லை சந்திப்பில் இருந்து (வண்டி எண்- 20666) காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து (வண்டி எண்-20665) பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லையை இரவு 10.40 மணிக்கு வந்தடைகிறது.

    இந்த ரெயிலுக்கான முன்பதிவு வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை முடிந்து விட்டது. பலர் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இது தவிர தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வருவதற்கு இப்போதே முன்பதிவு செய்து விட்டதால், இருக்கை கள் நிரம்பி விட்டன. இதன்படி பொங்கலுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 12 மற்றும் 13-ந்தேதிகளில் இருக்கை கள் அனைத்தும் நிரம்பி விட்டது.

    அதேபோல் தீபாவளி, பொங்கல் விடுமுறை முடிந்து மறுநாள் நெல்லை யில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான டிக்கெட்டு களும் விற்று தீர்ந்தன.

    இந்த ரெயில் இன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய பிட்லைனில் நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    புதிய நுழைவுவாயில்

    நாளை முதல் இரு மார்க்கங்களிலும் இயக்கப் படும் நிலையில், காலை 6 மணிக்குள் வந்தே பாரத் எக்ஸ்பிரசில் ஏற வரும் போது புதிய நுழைவு வாயில் கட்டிடம் அருகே வருமாறு ரெயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    புதிய நுழைவு வாயில் பகுதியில் வந்தே பாரத் எக்ஸ்பிரசின் கடைசி பெட்டி நிற்கும் என்பதால், கடைசி நேரத்தில் வரு வோரும், கடைசி பெட்டியில் ஏற வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் புதிய கட்டிட நுழைவு வாயில் பகுதிக்கு வந்து ஏறிச் செல்ல ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    நாளை, முதல் நாள் பயணம் என்பதால் ரெயில்வே போலீசார் அங்கு கூடுதலாக நிறுத்தப் பட்டு பயணிகளுக்கான சந்தேகங்களை தீர்க்கவும், அவர்களை பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    ×