search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ragavendra seva trust"

    • கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 25-வது மாத அன்னதான நிகழ்ச்சி புது ரோடு சந்திப்பு சாலையில் உள்ள முச்சந்தி செல்வ விநாயகர் கோவிலில் நடைபெற்றது.
    • கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் 25-வது மாத அன்னதான நிகழ்ச்சி புது ரோடு சந்திப்பு சாலையில் உள்ள முச்சந்தி செல்வ விநாயகர் கோவிலில் நடைபெற்றது. முன்னதாக செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டு நினைவு பரிசினை வழங்கினர்.

    நிகழ்ச்சிக்கு தொழிலதி பரும், நகர் மன்ற உறுப்பி னரு மான முத்துராஜன் தலைமை தாங்கினார். கோவில் தர்மகர்த்தா முருகன், முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் மந்திரசூடாமணி வரவேற்று பேசினார். தொழிலதிபர்கள் மாடசாமி, செல்லத்துரை, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் பொங்கல் பிரசாதத்தை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறு வனர் சீனிவாசன், தலை வர் ஜெயக்கொடி, செய லாளர் ஜோதி கா மாட்சி, பொருளாளர் கார்த்தி கேயன், செயற்குழு உறுப்பி னர்கள் நடராஜன், பாண்டி யன், மாரிமுத்து, லவ ராஜா, சுப்பிரமணியன், பால முருகன், கதி ரேசன், முருகன், சண்முக சுந்த ரம், தங்கராஜ், முத்து மாரி யம்மன், செல்வம் மற்றும் பெரியராஜ், செல்லத்துரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 24-வது மாத அன்னதான நிகழ்ச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.
    • கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 24-வது மாத அன்னதான நிகழ்ச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். தொழில் அதிபர்கள் அசோக், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர்கள் கிருஷ்ணமூர்த்தி, கடம்பூர் மாரியம்மன் கோவில் அறங்காவலர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதன்மை சிறப்பு விருந்தினர்களாக நெல்லை முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இதில் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, உறுப்பினர்கள் நடராஜன், லவராஜா, கதிரேசன், தங்கராஜ், எஸ்.பி. பாண்டியன், சுப்பிரமணியன், முருகன், முத்துமாரியம்மன், மாரிமுத்து, காளிராஜ், செல்வம் மற்றும் ஆசிரியர்கள் ஜீவானந்தம், சக்திவேல், மாவட்ட கல்வி அலுவலக உதவியாளர் மூர்த்தி, மிலிட்டரி சந்திரசேகர், பஜ்ரங் நர்த்தனாலயா கணபதி, பசுமை இயக்க செந்தில், கோவில்பட்டி அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் சுகன்யா, கொல்லம் சேகர், அசோக் மாறன், காளிராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முடிவில் தொழில் அதிபர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

    • இலுப்பையூரணி அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்றது
    • கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக 14 -வது மாத அன்னதான நிகழ்ச்சி இலுப்பையூரணி அலமேலு மங்கா சமேத வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சண்முகவேல் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர கூட்டுறவு இயக்குநர் லவராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர் அரியமூர்த்தி, மற்றும் மந்திரசூடாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கி ெதாடங்கி வைத்தார்.

    அன்னதானத்தை அறக்கட்டளை நிறுவனரும் தொழிலதிபருமான சீனிவாசன் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், பாலமுருகன், சண்முகசுந்தரம், கதிரேசன், மாரிமுத்து, தங்கராஜ், செல்வம், சுப்பிரமணியன், முத்துமாரியம்மன், காளிராஜ், முருகன், உட்பட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் பாண்டியன் அறக்கட்டளை சார்பாக தமது நன்றி கூறினார்.

    ×