என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kidnap"
- சிவகாசி அருகே பண தகராறில் வாலிபர் கடத்தப்பட்டார்.
- சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசியைச் சேர்ந்தவர் வைரமுத்து (வயது 45), தச்சு தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்நத பாண்டித்துரை என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் வைரமுத்துவின் மகன் முத்துக்குமார் (19) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் விஸ்வநத்தம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது முத்துக்குமாரை, பாண்டித்துரை, மாரி, அலர்ட் ஆறுமுகம், பெரியசாமி ஆகியோர் தாக்கியதுடன் அவரை கடத்திச் சென்று விட்டனர். இதுபற்றி கருப்பசாமி, வைரமுத்துவுக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தனது மகன் கடத்தப்பட்டது தொடர்பாக சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கடத்திச்சென்ற பாண்டித்துரை உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட வாலிபரை மீட்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண்ணை கட்டாய திருமணம் செய்ய முயன்ற சண்முகசுந்தரத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் அவருக்கு உதவியாக கெம்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்(43) என்பவரும் இருந்தது தெரியவந்தது.
கோவை:
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கரியாம்பாளையம் மசக்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண்.
இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (38). சண்முகசுந்தரம் அந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு அவர் தனது காதலை அந்த இளம்பெண்ணிடம் கூறியுள்ளார்.
அதற்கு அந்த இளம்பெண் விருப்பமிருந்தால் தனது பெற்றோரிடம் வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவர் அந்த இளம்பெண்ணின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் இளம்பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் சண்முகசுந்தரம் தான் திருமணம் செய்து கொண்டால் அந்த இளம்பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன் இல்லை என்றால் இறந்துவிடுவேன் என கூறி வந்துள்ளார்.
நேற்று அந்த இளம்பெண் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சண்முகசுந்தரம் தனது காரில் வழிமறித்து தனக்கு ஒரு முடிவு சொல்லுமாறு மிரட்டி உள்ளார். அதற்கு அந்த இளம்பெண் பேச மறுத்து அங்கிருந்து செல்ல முயற்சி செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகசுந்தரம் இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக தனது காரில் ஏற்றி பொன்னேகவுண்டன் புதூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவரிடம் இருந்து தப்பி அன்னூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் இளம்பெண்ணை கட்டாய திருமணம் செய்ய முயன்ற சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கு உதவியாக கெம்ப நாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார்(43) என்பவரும் இருந்தது தெரியவந்தது.
அவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜயகுமார் உதவியதும், இவர்கள் 2 பேரும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் திருச்செங்கோடு தாலுகா வையப்பமலை அருகே உள்ள செக்காரப்பட்டியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மனைவி சகுந்தலாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. சகுந்தலாவும், அவருடைய குழந்தையும் ஆஸ்பத்திரியில் தங்கி உள்ளனர்.
நேற்று மதியம் ஆஸ்பத்திரிக்கு வெளியில் சகுந்தலா, அவருடைய கணவர் கந்தசாமி மற்றும் உறவினர்கள் உட்கார்ந்து இருந்தனர். சகுந்தலாவின் மாமியார் மாரியம்மாள், குழந்தையை வைத்து கொண்டு உறவினர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் சகுந்தலா குடும்பத்தினரை பார்த்து, தள்ளி உட்காருங்கள் என்று கூறியுள்ளார். பின்னர் அந்த வாலிபர் சகுந்தலாவின் குழந்தையின் அருகில் உட்கார்ந்து கொண்டார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சகுந்தலா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
உடனே இதுபற்றி ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்த முயன்றாரா? என்பது பற்றி பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஆஸ்பத்திரி ஊழியர்கள், நோயாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக பாலக்காடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அவர் போலீசாருடன் வனவக்கோடு ரெயில் நிலையம் சென்றார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வட மாநிலத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு ரெயில் வந்தது.
ரெயில்வே போலீசார் உதவியுடன் அந்த ரெயிலில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் படியாக 5 பேர் இருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.
அவர்களது மேல் சட்டையில் சோதனை செய்த போது சட்டை போல் உள்ளே பனியன் அணிந்து இருந்தனர். அதில் ரூ. 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தது. ரூ. 2 கோடி பணத்தை அவர்கள் பனியனில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இது ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் கொல்லத்தை சேர்ந்த சுரேந்திரன், விவேக், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பதாம் சிங், பிரமோத், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரிய வந்தது.
இந்த பணத்தை கோவையில் இருந்து கொல்லத்துக்கு கடத்தி சென்றதாக கைதானவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் பல முறை இவர்கள் ஹவாலா பணத்தை கேரளாவுக்கு கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களிடம் எப்படி பழக்கம் ஏற்பட்டது? கோவையில் யாரிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #HawalaMoney
இந்தியாவை சேர்ந்தவர் அனுஷ் கோயல். இவர் உக்ரைன் நாட்டில் தங்கி பணிபுரிகிறார். சமீபத்தில் அங்கு இவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். எனவே அவரது உறவினர்கள் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு அவரை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தனர்.
பிரதமர் மோடியின் உதவியுடன் அனுப் கோயலை மீட்போம் என்று நேற்று முன்தினம் சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்து இருந்தார். அது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “உக்ரைனில் உள்ள இந்திய தூதருடன் பேசினேன். உக்ரைன் அரசுடன் தொடர்பு கொண்டு அவரை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டார். இத்தகவலை அனுஷ் கோயலின் சகோதரர் உறுதி செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கடத்தப்பட்ட எனது சகோதரர் அனுஷ் கோயல் உக்ரைனில் உள்ள வீட்டுக்கு பத்திரமாக திரும்பிவிட்டார். சுஷ்மா சுவராஜ் எடுத்த தீவிர நடவடிக்கையே காரணம். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என கூறப்பட்டுள்ளது. #sushmaswaraj #AnujGoel
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவரது மனைவி மும்தாஜ்பேகம். இவர்களுக்கு முன்தசீர் (வயது 19) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. முன்தசீர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சாகுல்ஹமீது வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் முன்தசீர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவனியாபுரத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை திருமங்கலகுடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக தாய் மும்தாஜ்பேகத்திடம் கூறி விட்டு முன்தசீர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். நள்ளிரவில் அவரது செல்போன் நம்பரில் இருந்து மும்தாஜ்பேகத்துக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவன் உயிரோடு வேண்டுமானால் எங்களுக்கு ரூ.5 லட்சம் கொடுங்கள் என்று மிரட்டி உள்ளார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201901051123319113_1_Murder._L_styvpf.jpg)
முன்தசீரின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்தசீரை கடத்தி கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் முன்தசீரின் நண்பர்களிடமும் அவருக்கு யாரேனும் விரோதிகள் இருக்கிறார்களா? என்று விசாரித்து வருகின்றனர். மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. #KumbakonamMurder #CollegeStudentMurder
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில், தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளால் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 பேரும், ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவரும் கடத்தப்பட்டனர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201811080657068940_1_cameroonmain._L_styvpf.jpg)
இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்கள் 78 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஓட்டுனரும் விடுவிக்கப்பட்டார். ஆனால் கடத்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை விடுதலை செய்யாமல் இன்னும் பயங்கரவாதிகள் தங்கள் பிடியிலேயே வைத்துள்ளனர்.
அவர்களை கடத்தியதற்கான காரணம் மற்றும் பயங்கரவாதிகளின் கோரிக்கை குறித்து எந்த வித தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது. #StudentsKidnap #CameroonKidnap
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோம்பூர் வனப்பகுதியில் காற்றில் சாய்ந்த 4 மரங்களை வெட்ட டெண்டர் எடுத்தவர் 121 மரங்களை வெட்டி கடத்தியது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் கற்பகவடிவு, பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஊர் கவுண்டரும், மரங்களை வெட்ட டெண்டர் எடுத்த காண்டிராக்டருமான கோம்பூரை சேர்ந்த ஆண்டி (வயது 64), மணிவண்ணன் (50) ஆகிய 2 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
திண்டுக்கல் அருகே உள்ள சிலுவத்தூர் ஆலம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் கரந்தி (வயது 16). செங்குறிச்சியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரை திருமணம் செய்யும் நோக்கத்தில் மாமரத்துப் பட்டியைச் சேர்ந்த ராமன் (22) தனது மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றார். இது குறித்து அவரது தாய் மீனாட்சி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே உள்ள சுக்காம்பட்டி பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் தீபா (18). பிளஸ்-2 மாணவி இவரை திருமணம் செய்யும் நோக்கத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (20) என்பவர் கடத்திச் சென்றுள்ளார்.
அய்யலூர் அருகே உள்ள சம்பக்காட்டு பள்ளம் பகுதியைச் சேர்ந்த பழனி மகள் மஞ்சுளா (21). இவரை செங்குறிச்சி மாமரத்துப் பட்டியைச் சேர்ந்த சவுந்தரம் (24) என்பவர் கடத்திச் சென்றார்.
அய்யலூர் அருகே உள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் தேக்கமலை (20). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி மகள் காயத்திரி (19) என்பவரை கடத்திச் சென்றார். இது குறித்து அவர்களது பெற்றோர்கள் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள காதல் ஜோடிகள் மாயமாவதும் வெளியூரில் திருமணம் செய்து கொண்டு பின்னர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது முகூர்த்த நாள் இன்று வருவதை மனதில் வைத்து நேற்றே 4 பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் திருமணம் செய்து கொண்டு போலீசில் விரைவில் தஞ்சமடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் மாணவிகள் உள்பட 4 இளம்பெண்கள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
சென்னையை அடுத்த அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த 21 வயது மாணவி, பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று பல்லாவரத்தில் இருந்து கிண்டிக்கு மின்சார ரெயிலில் வந்த அவர், அங்கிருந்து அய்யப்பன்தாங்கலுக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.
ஆனால் ஷேர்ஆட்டோ அய்யப்பன்தாங்கல் செல்லாமல் போரூரில் இருந்து மாங்காடு நோக்கி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, தன்னை கடத்த முயல்வதை அறிந்து ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார்.
இது பற்றி கிண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் அடையாறு துணை கமிஷனர் ரோகித்நாதன் மேற்பார்வையில் கிண்டி உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் இது தொடர்பாக கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டி வரும் டிரைவர் கொசப்பேட்டையை சேர்ந்த ஜனார்த்தனன்(27) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் தனது நண்பரான கோவூரை சேர்ந்த பவீன்(25) என்பவருடன் சேர்ந்து கல்லூரி மாணவியை ஷேர் ஆட்டோவில் கடத்திச்செல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான ஜனார்த்தனனிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். அதில், அந்த கல்லூரி மாணவி பல்லாவரத்தில் இருந்து ரெயிலில் கிண்டி வந்து, அங்கிருந்து தினமும் ஆட்டோவில்தான் அவரது வீட்டுக்கு செல்வார். அப்போது அனைவரிடமும் அவர் சகஜமாக பேசி பழகியதால் அவருடன் உல்லாசமாக இருக்க திட்டமிட்ட ஜனார்த்தனன், சம்பவத்தன்று தனது நண்பர் பவீனுடன் சேர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதற்காக ஷேர்ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்றதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
கல்லூரி செல்லும் இளம்பெண்கள், வெளி நபர்களுடன் வெகுளித்தனமாக பேசி பழகுவதை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)