search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உக்ரைனில் கடத்தப்பட்ட இந்தியர் மீட்பு - சுஷ்மாசுவராஜ் முயற்சியில் பத்திரமாக வீடு திரும்பினார்
    X

    உக்ரைனில் கடத்தப்பட்ட இந்தியர் மீட்பு - சுஷ்மாசுவராஜ் முயற்சியில் பத்திரமாக வீடு திரும்பினார்

    வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக உக்ரைனில் கடத்தப்பட்ட இந்தியர் பத்திரமாக மீட்கப்பட்டார். #sushmaswaraj #AnujGoel
    புதுடெல்லி:

    இந்தியாவை சேர்ந்தவர் அனுஷ் கோயல். இவர் உக்ரைன் நாட்டில் தங்கி பணிபுரிகிறார். சமீபத்தில் அங்கு இவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். எனவே அவரது உறவினர்கள் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு அவரை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

    பிரதமர் மோடியின் உதவியுடன் அனுப் கோயலை மீட்போம் என்று நேற்று முன்தினம் சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்து இருந்தார். அது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “உக்ரைனில் உள்ள இந்திய தூதருடன் பேசினேன். உக்ரைன் அரசுடன் தொடர்பு கொண்டு அவரை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அவர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டார். இத்தகவலை அனுஷ் கோயலின் சகோதரர் உறுதி செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கடத்தப்பட்ட எனது சகோதரர் அனுஷ் கோயல் உக்ரைனில் உள்ள வீட்டுக்கு பத்திரமாக திரும்பிவிட்டார். சுஷ்மா சுவராஜ் எடுத்த தீவிர நடவடிக்கையே காரணம். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என கூறப்பட்டுள்ளது. #sushmaswaraj #AnujGoel
    Next Story
    ×