search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelery"

    • அந்தோணிராஜா மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
    • விசாரணையில்,பாலசுந்தர் தங்க செயினை திருடியது தெரியவந்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி மகன் அந்தோணிராஜா (வயது21). இவர் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார். இவரது தம்பி சுரேசுக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வள்ளகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 17-ந்தேதி அந்தோணிராஜா மற்றும் உறவினர்கள் புதிய ஆடைகள் வாங்க சென்று விட்டு திரும்பி வந்து வீட்டில் தங்கினர். பெண்ணின் சகோதரர் பாலசுந்தரும் (21) அவர்களுடன் தங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் எடையுள்ள தங்கசெயின் மாயமாகியிருந்தது.

    இதுகுறித்து அந்தோணி ராஜா நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.ராஜூ, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் பாலசுந்தர் தான் தங்க செயினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க செயின் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சிகாமணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா்.
    • போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த சேவூா் அருகே சாலையோரம் நின்றிருந்த மூதாட்டியிடம் கவரிங் சங்கலி பறித்த இருவரை போலீசார் கைது செய்தனா். சேவூா் அருகே உள்ள தாசராபாளையம் நடுத்தோட்டத்தைச் சோ்ந்தவா் சிகாமணி (64). இவா் தாசராபாளையம் சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் சிகாமணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா். பார்த்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர்.

    தகவல் கிடைத்தது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேவூர் போலீசார் இரண்டு வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள்

    கோவை சித்தாபுதூா் சரோஜினி நகரைச் சோ்ந்த சின்னமருது (24), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (27) என்பது தெரியவந்தது. மேலும் மூதாட்டியிடம் பறித்தது கவரிங் நகை என்பதும் தெரிய வந்தது. இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டது.
    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக டி.ஜி.பி. சைலேந் திரபாபு ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

    ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கள் தங்கதுரை (ராமநாதபுரம்), செல்வராஜ் (சிவகங்கை) உள்ளிட்ட போலீஸ் அதிகா ரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள 146 பவுன் நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.

    முன்னதாக ராமநாத புரம் வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, போலீஸ் சூப்பிரண்டுகள் ெ தங்கதுரை, செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்ட சைலேந்திரபாபு சிறப்பாக பணியாற்றிய 30 போலீசாருக்கு சான்றிதழ் களை வழங்கினார்.

    தொடர்ந்து டி.ஜி.பி. நிருபர்களிடம் கூறியதா வது:-

    ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் திருடுபோன ரூ.46 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதே போல் கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் திருடுபோன ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பிற மாநிலத்தவர் தாக்கப்படுவது போல் பொய்யான தகவலை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இவ்வாறு 2 வீடியோக்களை முகம்மது ரஸ்பி என்பவர் பதிவிட்டுள்ளார். இவர் வெளியிட்ட வீடியோவில் ஒன்று பிற மாநிலத்தவர் அவர்களுக்குள் மோதிக்கொண்ட சம்பவம், மற்றொன்று கோவையில் உள்ளூர்காரர்கள் மோதிக்கொண்டது. இதுபோன்ற தவறான வீடியோ வெளியிட்ட முகம்மது ரஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதே போன்று தவறான செய்திகள் வெளியிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள் போலீஸ் அதிகாரிகளை தாக்கினால் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும் கைது செய்ய தயங்கமாட்டார்கள். ராமநாதபுரத்தில் 1200 போலீசார் பணியாற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் விரைவில் வரவுள்ளது.

    காவல்நிலைய துன்பு றுத்தல்கள் இந்தாண்டு ஏதும் நடைபெறவில்லை. சென்ற ஆண்டு 4 நிகழ்வுகள் நடைபெற்றன. தற்போது பொதுமக்களிடம் போலீசார் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளிடம் அறிவியல் பூர்வமாக விசாரணை மேற்கொள்ளப்படுவதால் துன்புறுத்தல்களுக்கு வேலை இல்லை. 18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனங்கள் ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயிலில் மறந்து வைத்துச் சென்ற ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை ரெயில்வே போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
    • போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு ரெயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் அலங்கானூர் ஊராட்சி பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு என்ற ராமச்சந்திரன் (வயது 70).இவர் பெரம்பலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் மனைவி முத்துலட்சுமியுடன் (60) நேற்று இரவு சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயிலில் பயணம் செய்தார். இன்று காலை 6 மணிக்கு ரெயில் பரமக்குடி வந்ததும் மனைவியுடன் இறங்கி விட்டார். ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் கைப்பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பரமக்குடி ரெயில் நிலைய அதிகாரி யிடம் தகவல் தெரிவித்தார். அவர் ராமநாதபுரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ராமநாதபுரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ், போலீஸ்காரர் ஜலாலுதீன் ஆகியோர் குறிப்பிட்ட ரெயில் பெட்டியில் ஏறி பார்த்தபோது கைப்பை அங்கு இருந்தது. அதை திறந்து பார்த்த போது ரூ. 4.65 லட்சம் மதிப்புள்ள 11 பவுன் நகை, பணம், செல்போன் ஆகியவையும் பத்திரமாக இருந்தன.

    இது குறித்து ராமநாதபுரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பரமக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ராமு மனைவியுடன் ராமநாத புரம் வந்தார். ெரயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் மோகன் ராஜ், போலீஸ்காரர் ஜலாலு தீன் ஆகியோரிடம் நன்றி தெரிவித்து கைப்பையை பெற்று சென்றனர்.

    போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கைக்கு ரெயில் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • அரசு பெண் அலுவலரிடம் நகை பறித்தவரை சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் போலீசார் பிடித்தனர்.
    • இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் முத்துமாரி (32). இவர் தமுக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கணக்காள ராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 15-ந்தேதி மொபட்டில் முத்துமாரி தத்தனேரி பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் முத்துமாரி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.

    இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் போலீசார் நடத்தி விசா ரணையில், முத்துமாரியிடம் நகையை பறித்தது நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி (37) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வீட்டிற்கு சென்று கொள்ளையனை கைது செய்தனர்.

    மூதாட்டியிடம் கைவரிசை

    மதுரை தனக்கன் குளத்தை சேர்ந்தவர் ரங்க ராஜ் மனைவி ராதாபாய் (62). இவர் சம்பவத்தன்று அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் பெரியார் பஸ் நிலையம் வந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராதாபாய் வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர் அபேஸ் செய்து விட்டார்.

    இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டின் கதவை உடைத்து ரூ.1 லட்சம் நகை-பணம் திருட்டு போனது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுலோன் காலனியை சேர்ந்தவர் ராசய்யா (வயது 73). குடும்பத்துடன் மதுரைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் வெளி கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ராசய்யா உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவர் காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேருந்தில் தவறவிட்ட 15 பவுன் நகைகளை ஒப்படைத்த ஒட்டுநர், நடத்துனரை பொதுமக்கள் பாராட்டினர்.
    • நாகர்கோவில் வங்கி அதிகாரி

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் அந்தோணி ராஜ்(வயது 42), இவர் நாகர்கோவிலில் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 7-ந் தேதியன்று அறந்தாங்கியிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்தில் காரைக்குடிக்கு பயணம் செய்துள்ளார். காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்ல வேண்டிய டேவிட்அந்தோணிராஜ், காரைக்குடி நிறுத்தம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கி வேறொரு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது தாம் கொண்டு வந்த பை மற்றும் உடமைகளை அந்த பேருந்திலேயே தவறவிட்டுவிட்டோம் என உணர்ந்து அதிர்ச்சியடைத்துள்ளார்.

    உடனடியாக சம்பவம் குறித்து காவல்த்துறையினருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், மதுரைக்கு சென்ற பேருந்து இரவு அறந்தாங்கி திரும்பியதும், பயணிகள் இருக்கைக்கு மேல் லக்கேஜ் வைக்கும் இடத்தில் பை ஒன்று உள்ளதை நடத்துனர் முத்துக்குமார், ஓட்டுனர் ரவி ஆகியோர் பார்த்துள்ளனர். அதனை எடுத்து பார்த்ததில் அதில் நகைகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளதைக் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக போக்குவரத்து மண்டல மேலாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அறந்தாங்கி காவல் நிலையத்தில் நகை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்துள்ளனர். பொருட்களை வாங்கி விசாரணை மேற்கொண்ட காவல்த்துறையினர் சம்மந்தப்பட்ட வங்கி மேலாளர் டேவிட் அந்தோணிராஜை அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர் தவறவிட்ட சுமார் 15 சவரன் நகை லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை அவரிடமே ஒப்படைத்தனர். ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை உரியவரிடம் சேர உதவிய அரசுப் பேருந்து நடத்துனர், ஓட்னருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • நகைக்கடை அதிபரிடம் 87 பவுன் நகை திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    தேனி நகர் ஜெகநாதன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். வியாபார நிமித்தமாக செந்தில்குமார் 87 பவுன் நகையுடன் காரில் மதுரைக்கு வந்தார். அரசரடி பகுதியில் காரை நிறுத்திவிட்டு அங்குள்ள ஓட்டலில் செந்தில்குமார் சாப்பிட சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர் கார் கதவை திறந்து அதில் இருந்த 87 பவுன் நகையை நைசாக திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பினான். சிறிது நேரத்தில் ஓட்டலில் இருந்து வந்த செந்தில்குமார் கார் கதவு திறந்து கிடப்பதையும், நகை திருடு போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். அதில், காரில் இருந்த 87 பவுன் நகையை எனது கடையில் வேலை பார்க்கும் மேலாளர், டிரைவர் திருடியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே அம்மன் கோவிலில் தங்கம்-வெள்ளி நகைகள் திருட்டு போனது.
    • இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி கிராமத்தில் ஆயிரம் கண்ணுடையாள் அம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் 41 அடி உயர பிரம்மாண்ட அம்மன் சிலை உள்ளது. மேலும் வாராகி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் இருக்கின்றன.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் கோவில் நடை பூட்டப்பட்டது. நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்த போது கோவில் நடை திறந்து கிடந்தது.

    மேலும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி கிரிடம் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன. இது குறித்து கோவில் நிர்வாகி செந்தில்குமார் திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கிரிடம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.

    யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றிரு ப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிய கோவிலில் இருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி இருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம நபர்கள் கம்பி வேலியை வெட்டி அதன் வழியாக கோவிலுக்குள் புகுந்து நகைகளை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

    அதன் அடிப்படையில் கோவில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் டி.கல்லுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பேராசிரியர் வீட்டில் 56 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியா பகுதியைச் சேர்ந்தவர் பிராங்கிளின் ரூபன் ஜெபராஜ் (வயது 52). இவர் மதுரை கோரிப்பா ளையத்தில் செயல்படும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விக்டோரியா ராணி. இவரும் பேராசி ரியராக உள்ளார்.

    இந்த நிலையில் பிராங்கி ளின் ரூபன் ஜெபராஜ் மற்றும் விக்டோரியா ராணி ஆகிய 2 பேரும் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்ட னர். இதனை நேட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 56 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் பிராங்கி ளின் ரூபன் ஜெபராஜ் மற்றும் விக்டோரியா ராணி ஆகிய 2 பேரும் நேற்று மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. உடனே பிராங்கிளின் லாக்கரை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த 56 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். இதுதொடர்பாக போலீசார் மேல்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் சூரக்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதற்கிடையே மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது தெருமுனை வரை ஓடியது. மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் ரேகைகளை தடயவியல் சேகரித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.

    இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜு, வெள்ளத்துரை தலைமை யில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி, அவற்றில் இடம் பெற்றுள்ள காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் பேராசிரியர் வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணைைய முடுக்கி விட்டுள்ளனர்.

    • புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி நாளை திறக்கப்பட உள்ளது.
    • ‘தங்கமாங்கல்யம்’ பெயரில் திருமண நகைகள் அறிமுகம் செய்யப்படும்.

    மதுரை

    மதுரை நேதாஜி ரோட்டில் புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தங்க மாங்கல்யம் என்ற பெயரில் திருமண நகை கலெக்‌ஷன்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    மதுரையில் தங்க நகை வணிகத்தில், மக்களின் பேரன்பு பெற்று தங்கமயில் ஜூவல்லரி ஜொலித்து வருகிறது.

    தங்கமயில் ஜூவல்லரி கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்து உள்ளது. இன்று 25 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழகம் முழுவதும் கிளைகளை பரப்பி இந்த மண்ணின் மனம் கவர்ந்த ஒரு ஜூவல்லரியாக உயர்ந்து நிற்கிறது.

    இந்த நிலையில் மதுரை நேதாஜி ரோட்டில் புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜூவல்லரி திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. விழாவின் முக்கிய அம்சமாக மிகப்பெரிய பிரைடல் ஸ்டோர் தொடங்கப்படுகிறது.

    மேலும் தமிழகத்தில் முதன்முறையாக தங்க மாங்கல்யம் என்னும் தனித்துவமான பிரைடல் கலெக்ஷன்களை அறிமுகப்படுத்துகிறது.

    இதில் மணமகளுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், ரத்தின கற்களில் அமைந்த நகைகள், வெள்ளி நகைகள் என வித, விதமான திருமண நகை கலெக்‌ஷன்கள், டிசைன்கள், பிரைடல் செட் என்று தங்கமயில் ஜூவல்லரி தனித்துவமான மற்றும் மிக பிரமாண்டமான தங்க மாங்கல்யம் கலெக்‌ஷன்களை வடிவமைத்து இருப்பது கவனிக்கத்தக்க ஒன்று.

    இதுகுறித்து தங்கமயில் ஜூவல்லரி நிர்வாகிகள் கூறும்போது, மதுரை தான் எங்களின் ஆரம்பம். மதுரை மக்கள் எப்போதும் எங்களுக்கு மிக நெருக்கமானவர்கள். 30 ஆண்டு கால பயணத்தில் அவர்கள் தந்த பேராதரவினால் தான் இன்று தமிழகத்தின் முன்னணி ஜூவல்லரியாக உயர்ந்து நிற்கிறோம்.

    இன்று பங்கு சந்தையிலும் தடம்பதித்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று இருக்கிறோம். நாளை நடைபெறும் தொடக்க விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறோம் என்றனர்.

    • பஸ்-ஆட்டோவில் சென்ற பெண்களிடம் 5 பவுன் நகை திருட்டப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த பெண்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ரெங்கம்மாள் (வயது 65). இவர் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ராஜபாளையத்தில் இருந்து மம்சாபுரம் செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்று விட்டான். இதுபற்றி ரெங்கம்மாள் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருேக மடவார் வளாகம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (76). இவர் பஸ்சில் இருந்து இறங்கியதும், 3 பெண்கள் ஆட்டோவில் அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து முத்தம்மாள் அவர்களுடன் ஆட்டோவில் சென்றுள்ளார். பின்னர் அவரை இறக்கி விட்டு விட்டு சென்று விட்டனர். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துச் சென்று விட்டது தெரியவந்தது. இதுபற்றி அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த பெண்களை தேடி வருகின்றனர்.

    ×