search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ipl cricket"

    ஐதராபாத் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் போராடி தோல்வி அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.#IPL2018 #KKR #DineshKarthik
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்னில் ஐதராபாத்திடம் தோற்று இறுதி ஆட்டத்துக்கான வாய்ப்பை இழந்தது.

    இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டனும், சென்னையை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    இந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக ஆடினோம். இந்தப் போட்டியில் தோற்றது சிறப்பானதாக இல்லை. ரன் இலக்கை தொடங்கும் போது எங்கள் பக்கமே ஆட்டம் இருந்தது. ஆனால் சில மோசமான ஷாட்களும் ஒரு ரன் அவுட்டும் எங்களிடம் இருந்து போட்டியை மாற்றி விட்டது.

    நான், ராபின் உத்தப்பா ஆகியோர் நன்றாக ஆடி ஆட்டத்தை முடித்து இருக்க வேண்டும். ஆனால் எனது தவறின் மூலம் வெற்றியை நோக்கி செல்ல முடியவில்லை. கிறிஸ் லின் சிறப்பாக ஆடினார்.



    இந்த தொடரில் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர். இது அணிக்கு சிறப்பாக அமையும்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.#IPL2018 #KKR #DineshKarthik
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் நாளை மோதுகின்றனர்.#IPL2018 #CSKvSRH #CSK #SRH
    மும்பை:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கியது.

    இதில் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

    கடந்த 20-ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. இதன் முதலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    ‘பிளேஆப்’ சுற்று கடந்த 22-ந் தேதி தொடங்கியது. ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 25 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. இதனால் ராஜஸ்தான் வெறியேறியது.

    ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் ஐதராபாத் அணி 14 ரன்னில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா அணி வெளியேற்றப்பட்டது.

    இன்று ஓய்வு நாளாகும். இறுதிப் போட்டி நாளை (27-ந்தேதி) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    2 ஆண்டு தடைக்கு பிறகு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டித் தொடரில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. ‘லீக்‘ போட்டியில் 5 ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. 9 போட்டியில் வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் ஐதராபாத்தை 3 தடவை வீழ்த்தி இருந்தது. 2 ‘லீக்‘ ஆட்டத்திலும், ‘குவாலிபையர்1’ ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் சென்னை அணி வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

    ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி கோப்பையை வென்று இருந்தது.

    ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை நோக்கி சென்றே வெற்றி பெற்றது. டுபெலிசிஸ் மற்றும் பின்வரிசை வீரர்களான தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்கள். இதனால் இறுதிப் போட்டியில் கவனமுடன் விளையாட வேண்டும்.

    மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டியில் 4 முறை (2008, 2012, 2013, 2015) தோற்று இருந்தது. இதனால் ஐதராபாத்துக்கு எதிரான நாளைய இறுதிப்போட்டியில் மிகவும் கவனத்துடன் ஆட வேண்டும்.

    பேட்டிங்கில் அம்பதி ராயுடு (585 ரன்), கேப்டன் டோனி (455ரன்), வாட்சன் (438 ரன்), ரெய்னா (413 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல் ஜடேஜா, பிராவோ மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பந்து வீச்சில் வேகப்பந்து வீரர் நிகிடி நன்றாக செயல்படுகிறார்.

    மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையும், கடைசி கட்ட பந்து வீச்சும் சிறப்பாக அமைந்தால் கோப்பையை வெல்லலாம். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

    ஐதராபாத் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமபலத்துடன் இருக்கிறது. அந்த அணி சென்னைக்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு அந்த அணி கோப்பையை வென்று இருந்தது.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன் (688 ரன்), தவான் (471 ரன்), மனீஷ் பாண்டே (286 ரன்), யூசுப்பதான் (215 ரன்), சகிப் அல்-ஹசன் (216 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் ரஹீத்கான் (21 விக்கெட்), சித்தார்த் கவுல் (21 விக்கெட்), புவனேஷ்வர் குமார், சந்திப் சர்மா ஆகி யோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.#IPL2018 #CSKvSRH #CSK #SRH
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 2 ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மோதுகின்றன.#IPL2018 #KKRvSRH #KKR #SRH
    கொல்கத்தா:

    11-வது ஐ.பி.எல். போட்டி தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டமே எஞ்சி இருக்கிறது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது என்பது இன்று தெரியும்.

    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடை பெறும். ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐதராபாத் அணி 2-வது முறையாகவும், கொல்கத்தா அணி 3-வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன.

    குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் அதை வைத்து தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் சவால் தொடுக்கும் திறமையான அணி ஐதராபாத் ஆகும். உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலமே.

    இந்தப் போட்டித் தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக வில்லியம்சன் உள்ளார். அவர் 8 அரை சதம் உள்பட 685 ரன்கள் குவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு அவர் மிகப்பெரிய சவாலாக விளங்குவார்.

    இது தவிர தவான் (437 ரன்), மனீஷ் பாண்டே (284 ரன்), யூசுப் பதான் (212 ரன்), சகீப்-அல்- ஹசன் (183 ரன், 13 விக்கெட்), ரஷீத்கான் (18 விக்கெட்), சித்தார்த் கபூல் (19 விக்கெட்), புவனேஸ்வர் குமார் (9 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கொல்கத்தா அணியில் அதிக ரன் எடுத்த வீரர் கேப்டன் தினேஷ் கார்த்திக். அவர் 2 அரை சதம் உள்பட 490 ரன் எடுத்துள்ளார். இது தவிர கிறிஸ்லன் (443 ரன்), ராபின் உத்தப்பா (349 ரன்), சுனில்நரீன் (331 ரன், 16 விக்கெட்), ஆந்தரே ரஸ்சல் (313 ரன், 13 விக்கெட்), குல்தீப் யாதவ் (15 விக்கெட்), பியூஸ் சாவ்லா (13 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இந்த தொடரில் இரு அணிகளும் மோதிய 2 போட்டியில் தலா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் இதுவரை ஐ.பி.எல்.லில் 14 போட்டியில் மோதியுள்ளன.

    இதில் கொல்கத்தா-9, ஐதராபாத்-5ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரு அணியிலும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் வருமாறு:-

    ஐதராபாத்: வில்லியம்சன் (கேப்டன்), தவான், கோஸ்சுவாமி, மனீஷ் பாண்டே, சகீப்-அல்-ஹசன், யூசுப்பதான், பிராத் வெயிட், ரஷீத்கான், புவனேஷ் வர்குமார், சித்தார்த்கவூல், சந்தீப் சர்மா.

    கொல்கத்தா: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரீன், உத்தப்பா, நிதிஷ்ரானா, ஆந்தரே ரஸ்சல், சுப்மன் ஹில், சீயர்லெஸ், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, கிருஷ்ணா.#IPL2018 #KKRvSRH #KKR #SRH
    கிரிக்இன்போ ஐபிஎல் கனவு அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி மற்றும் ராயுடு இடம்பிடித்துள்ளனர். #IPL2018
    11-வது ஐ.பி.எல். போட்டியில் ‘லீக்’ ஆட்டம் முடிந்து ‘பிளேஆப்’ சுற்று இன்று தொடங்குகிறது.

    கிரிக்கெட் இணைய தளமான கிரிக்இன்போ ஐ.பி.எல். கனவு அணியை வெளியிட்டு உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, அம்புதி ராயுடு இடம் பெற்றுள்ளனர். ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கனவு அணிக்கு கேப்டனாக இருக்கிறார். ஆல் ரவுண்டர்களான குர்னல் பாண்ட்யா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு இந்த அணியில் இடமில்லை.

    கிரிக்கெட் இன்போவின் ஐ.பி.எல். கனவு அணி வருமாறு:-

    லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), சுனில் நரேன் (கொல்கத்தா), வில்லியம்சன் (கேப்டன், ஐதராபாத்), அம்புதி ராயுடு (சென்னை), ரி‌ஷப்பண்ட் (டெல்லி), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா), டோனி (விக்கெட் கீப்பர், சென்னை), ரஹித்கான் (ஐதராபாத்), ஆண்ட்ரூ டை (பஞ்சாப்), உமேஷ் யாதவ் (பெங்களூர்), பும்ரா (மும்பை).#IPL2018
    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன் என்பதற்கு கேப்டன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.#IPL2018 #kxip #Ashwin
    புனே:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனேயில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் (0), லோகேஷ் ராகுல் (7 ரன்) சோபிக்காத நிலையில் கருண் நாயர் அரைசதம் அடித்து (54 ரன், 3 பவுண்டரி, 5 சிக்சர்) சரிவில் இருந்து காப்பாற்றினார். பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 9-வது வெற்றியை ருசித்தது. துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 61 ரன்களுடனும், கேப்டன் டோனி 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியை 100 ரன்களுக்குள் மடக்கினால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் பஞ்சாப் அணி தோல்வியுடன் (மொத்தம் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளி) பரிதாபமாக வெளியேறியது.

    தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தில் எங்களது பேட்டிங் சரியில்லை. ‘பவர்-பிளே’யிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. கருண் நாயர் நன்றாக ஆடினாலும் 20 முதல் 30 ரன்கள் குறைவாகவே எடுத்து விட்டோம். ஏப்ரல் மாதத்தில் நாங்கள் ஓரளவு சிறப்பாக விளையாடினோம். ஆனால் மே மாதம் (கடைசி 7 ஆட்டங்களில் 6-ல் தோல்வி) மோசமாக அமைந்து விட்டது.

    இந்த தொடரை எடுத்துக் கொண்டால் தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் அபாரமாக ஆடினோம். ஆனால் பிற்பகுதியில் ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாமல் போய் விட்டது. தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் மட்டுமே அணியில் கணிசமான ரன்களை குவித்து இருக்கிறார்கள். மிடில் வரிசை பேட்டிங் எதிர்பார்த்தபடி ‘கிளிக்’ ஆகவில்லை. அது தான் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

    இதே போல் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட மோசமான தோல்வி (88 ரன்னில் சுருண்டது) எங்களது முன்னேற்றத்தை கெடுத்து விட்டது என்று சொல்லலாம். அந்த தோல்வியால் ரன்ரேட் குறைந்ததோடு, வீரர்களின் மனஉறுதியும் வெகுவாக சீர்குலைந்து போனது.

    இவ்வாறு அஸ்வின் கூறினார். #IPL2018 #kxip #Ashwin
    ஐபி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.#IPL2018 #SRH #CSK
    மும்பை:

    11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பெற்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (16 புள்ளி), ராஜஸ்தான் ராயல்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகள் வெளியேற்றப்பட்டன.

    இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை வகிக்கும் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு (செவ்வாய்க்கிழமை) கோதாவில் இறங்குகின்றன.

    இந்த சீசனில் 7 எதிரணிகளையும் குறைந்தது ஒருமுறையாவது வீழ்த்திய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இரண்டு ஆண்டு தடை காலத்துக்கு பிறகு திரும்பிய சென்னை அணியில் 30 வயதுக்கு மேல் அதிக வீரர்கள் இடம் பெற்றிருந்ததால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ஆனால் வயதுக்கும், திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை சென்னை வீரர்கள் நிரூபித்து காட்டிவிட்டனர்.

    அம்பத்தி ராயுடு (586 ரன்), கேப்டன் டோனி (446 ரன்), ஷேன் வாட்சன் (438 ரன்), சுரேஷ் ரெய்னா (4 அரைசதத்துடன் 391 ரன்) ஆகியோர் சென்னை அணியின் பேட்டிங் தூண்களாக திகழ்கிறார்கள். இதில் டோனி 9 முறை ‘நாட்-அவுட்’ ஆக இருந்தது கவனிக்கத்தக்க அம்சமாகும். இவர்களில் யாராவது ஒருவர் நீண்ட நேரம் பேட்டை சுழட்டினாலே சென்னை அணி கணிசமான ஸ்கோரை குவித்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

    பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் (14 விக்கெட்), நிகிடி (9 விக்கெட்), தீபக் சாஹர் (9 விக்கெட்) ஆகியோர் கைகொடுக்கிறார்கள். ஆல்- ரவுண்டர் வெய்ன் பிராவோ 11 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தாலும் ஓவருக்கு சராசரியாக 10.15 ரன்களை விட்டுக்கொடுத்து வள்ளலாகவும் பார்க்கப்படுகிறார்.

    பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டதால், இந்த முறை ஐதராபாத் அணி தாக்குப்பிடிப்பது கடினம் என்று கூறப்பட்ட நிலையில், கனே வில்லியம்சன் தலைமையில் அந்த அணி எழுச்சி பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து பிரமாதப்படுத்தியது. பேட்டிங்கில் ஐதராபாத் அணியின் ஆணிவேராக விளங்கும் வில்லியம்சன் 8 அரைசதத்துடன் 661 ரன் சேர்த்து முத்திரை பதித்துள்ளார். அவருக்கு ஷிகர் தவான் (4 அரைசதத்துடன் 437 ரன்), மனிஷ் பாண்டே (276 ரன்) பக்கபலமாக இருக்கிறார்கள். இவர்களைத் தான் அந்த அணி முழுமையாக நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் சித்தார்த் கவுல் (17 விக்கெட்), ரஷித்கான் (16 விக்கெட்), சந்தீப் ஷர்மா (9 விக்கெட்), புவனேஷ்வர்குமார் (8 விக்கெட்) முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆனால் தொடக்க ஆட்டங்களில் பந்து வீச்சில் அச்சுறுத்திய ஐதராபாத் பவுலர்கள், கடைசி 4 ஆட்டங்களில் ரன்களை வாரி வழங்கி விட்டனர். இதனால் ஐதராபாத் அணி பந்து வீச்சை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தும்.

    மேலும் கடைசி மூன்று லீக்கில் வரிசையாக தோல்வி கண்ட அந்த அணி மீண்டும் முழு உத்வேகத்துக்கு திரும்புவதற்கு எல்லா வகையிலும் ஆயத்தமாகி வருகிறது.

    இரு அணிகளும் சரிசமபலத்துடன் இருப்பது போல் தெரிந்தாலும், இந்த ஆண்டில் ஐதராபாத்துக்கு எதிராக சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. லீக் சுற்றில் இரண்டு ஆட்டங்களிலும் முறையே 4 ரன் மற்றும் 8 விக்கெட் வித்தியாசங்களில் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தியது. இதனால் சென்னை அணியினர் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். 7-வது முறையாக சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்குமா? அல்லது முந்தைய தோல்விக்கு ஐதராபாத் அணி பழிதீர்க்குமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

    இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதிச்சுற்றை எட்டும் அதே வேளையில், தோல்வி அடையும் அணி வெளியேறாது. அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், நிகிடி.

    ஐதராபாத்: அலெக்ஸ் ஹாலெஸ், ஷிகர் தவான், வில்லியம்சன் (கேப்டன்), மனிஷ் பாண்டே, யூசுப் பதான் அல்லது தீபக் ஹூடா, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, ஷகிப் அல்-ஹசன், புவனேஷ்வர்குமார், ரஷித்கான், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா.

    இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. #IPL2018 #SRH #CSK
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றனர்.#IPL2018 #CSK #SRH
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ஐதராபாத் சன் ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    23-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் 3 மற்றும் 4-வது இடங்களை பெற்ற கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் சந்திக்கும். இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் 25-ந்தேதி மோதும். இறுதிப்போட்டி 27-ந்தேதி நடைபெறும். எஞ்சிய 4 ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும். #IPL2018 #CSK #SRH
    ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்களை தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்த கொல்கத்தா அணியின் பவுலர்களை ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் வெகுவாக பாராட்டினார்.#IPL2018 #KaneWilliamson
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்து 8-வது வெற்றியுடன் (16 புள்ளி) 6-வது முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

    இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டுவது போல் சென்ற ஐதராபாத் அணியின் ரன்வேகம், கடைசி 5 ஓவர்களில் 31 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் தளர்ந்து போனது. இந்த இலக்கை கொல்கத்தா அணி கிறிஸ் லின் (55 ரன், 4 பவுண்டரி, 3 சிக்சர்), ராபின் உத்தப்பா (45 ரன்), சுனில் நரின் (29 ரன்) ஆகியோரின் அதிரடியின் துணையுடன் 19.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் 6-வது முறையாக ‘சேசிங்’கில் தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    வெற்றிக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘டாப்-4 அணிகளில் ஒன்றாக போராடி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் சரியான நேரத்தில் உச்சத்திற்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்’என்றார்.

    ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘ஆடுகளம் பேட்டிங்குக்கு நன்றாகவே இருந்தது. 200 ரன்களோ அதற்கு சற்று அதிகமாகவே எட்ட வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தோம். அந்த ஸ்கோரை நாங்கள் அடைந்திருக்க வேண்டும். ஆனால் கொல்கத்தா பவுலர்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். எல்லா பெருமையும் அவர்களையே சாரும். இதுவரை நடந்தது பற்றி கவலையில்லை. ‘பிளே-ஆப்’ சுற்றில் வீரர்கள் சுதந்திரமாக, எங்களது பலத்துக்கு தகுந்தபடி விளையாட வேண்டியது அவசியமாகும். அதற்கு முன்பாக ஒரு சில விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. ஒவ்வொரு வீரர்களும் அடுத்த சுற்றை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்’ என்றார். #IPL2018 #KaneWilliamson
    பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் ராஜஸ்தான்- பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ஐதராபாத்துடன் மோதுகிறது. #IPL2018
    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டம் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (16 புள்ளி), ஆகிய 2 அணிகள் மட்டுமே ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 2 அணி எவை எவை என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (14 புள்ளி) மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தலா 12 புள்ளி) ஆகிய 5 அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன. டெல்லி டேர்டெவில்ஸ் (8 புள்ளி) ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.

    இன்னும் 4 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. அதாவது 8 அணிக்கும் ஒரு ஆட்டமே உள்ளன. இன்றைய போட்டியின் முடிவில் ஒரு அணி வெளியேற்றப்படும்.

    நாளையுடன் ‘லீக்‘ ஆட்டம் முடிகிறது. 43-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்கும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் இரு அணியும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    ரன்ரேட் முக்கிய பங்கு வகிப்பதால் வெற்றி பெறும் அணி நிகர ரன்ரேட்டையும் உயர்த்துவது அவசியமாகும். பெங்களூர் அணியின் ரன்ரேட் +0.26 ஆக உள்ளது. ராஜஸ்தான் நிகர ரன்ரேட் -0.39 ஆகும்.

    பட்லா, பென்ஸ்டோர் ஆகியோர் இங்கிலாந்துக்கு திரும்பியது ராஜஸ்தான் அணிக்கு பாதிப்பே. உள்ளூரில் விளையாடுவது மட்டுமே அந்த அணிக்கு சாதகம். அந்த அணியில் கேப்டன் ரகானே, சஞ்சு சாம்சன், ஆர்சிஷார்ட் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். பெங்களூரை ராஜஸ்தான் 19 ரன்னில் தோற்கடித்து இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

    பெங்களூர் அணி ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வெற்றியை பெற்று ‘பிளே- ஆப்’ சுற்றில் நீடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. விராட் கோலி, டிவில்லியர்ஸ், மொய்ன்அலி போன்ற அதிரடி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி தங்களது அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல போராடுவார்கள். பந்து வீச்சில் சாஹல், உமேஷ்யாதவ் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஐதராபாத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும். 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத் அணியை பொறுத்தவரை சம்பிரதாயமான ஆட்டமே. ஏற்கனவே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அந்த அணி 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடைசியாக ஆடிய 2 போட்டியில் தோற்றதால் அந்த அணி வெற்றிக்காக போராடும். கேப்டன் வில்லியம்ஸ், தவான், மனிஷ் பாண்டே, யூசுப்பதான் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், புவனேஸ்குமார், ரஷித்கான், சித்தார்த்கவுல் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    கொல்கத்தா அணி, ஐதராபாத்தை வீழ்த்தி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 14 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி வெற்றி பெற்றால் தகுதி பெறும்.

    தோல்வி அடைந்தால் நாளை நடைபெறும் ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மோசமாக தோற்றால் வெளியேறும் நிலையும் ஏற்படலாம். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக போராடுவார்கள். கிறிஸ் லின், உத்தப்பா, கேப்டன் தினேஷ் கார்த்திக், நரேன், ரஸ்சல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    கொல்கத்தா அணி ஏற்கனவே ஐதராபாத்திடம் 5 விக்கெட்டில் தோற்றது. இதனால் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடும்.

    பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆட்டங்கள் என்பதால் இன்றைய 2 போட்டிகளும் பரபரப்பாக இருக்கும். #IPL2018
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சுற்றான பிளே-ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.#IPL2018
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அடுத்த சுற்றான பிளே-ஆப்புக்கு இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் ஆகிய 2 அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன.

    மற்ற இரண்டு அணிகள் யார் என்பது முடிவாகவில்லை. இதற்கு கொல்கத்தா, மும்பை, பெங்களூர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஏற்கனவே டெல்லி அணி வெளியேறி விட்டது. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் உள்ள 5 அணிகளுக்கும் தலா ஒரு போட்டி மட்டுமே எஞ்சி இருக்கிறது.

    தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 13 ஆட்டத்தில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

    அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை ஐதராபாத்துடன் மோதுகிறது. இதில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏனென்றால் கொல்கத்தாவின் ரன்-ரேட் (-0.09) மோசமாக உள்ளது.

    நாளை போட்டியில் வென்றால் பிளே-ஆப்புக்கு 16புள்ளிகளுடன் சிக்கலின்றி தகுதி பெறும். தோற்றால் ரன்ரேட் இன்னும் குறைந்துவிடும். அதன்பின் மற்ற அணிகள் ஆட்டங்களின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

    ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 13 ஆட்டத்தில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் உள்ளது. மும்பை கடைசி லீக் ஆட்டத்தில் 20-ந்தேதி டெல்லியுடன் மோதுகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அந்த அணிக்கு ரன்-ரேன் (+0.38) நன்றாக இருப்பதால் டெல்லிக்கு எதிராக வெற்றி பெற்றால் அடுத்து சுற்று வாய்ப்பை பிரகாசமாகும்.

    வீராட்கோலியின் பெங் களூர் அணியும் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி நாளை ராஜஸ்தானுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். பெங்களூர் அணிக்கு ரன்ரேட் (+0.26) நல்ல நிலையில் இருப்பது சாதகமான வி‌ஷயம்.

    ரகானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் 12 புள்ளிகளுடன் உள்ளது. நாளைய கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரை கண்டிப்பாக வெல்ல வேண்டும். மேலும் ரன்ரேட் (-0.40) மோசமாக இருப்பதால் மிகப்பெரிய வெற்றி பெறுவது அவசியம்.

    அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 13 ஆட்டத்தில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் உள்ளது. 20-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். மேலும் ரன்ரேட்டை (-0.49) நல்ல நிலைக்கு கொண்டுவர மிகப்பெரிய வெற்றி அந்த அணிக்கு அவசியமாகிறது.#IPL2018
    ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் போது அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.#IPL2018 #RCBvSRH #ABD #AbdeVilliers #viratkohli
    பெங்களூர்:

    11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் 6-வது பெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது.

    டிவில்லியர்ஸ் 39 பந்தில் 69 ரன்னும், மொய்ன் அலி 34 பந்தில் 65 ரன்னும், கிராண்ட் ஹோம் 17 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 204 ரன்னே எடுத்தது. இதனால் பெங்களூர் 13 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் பிளேஆப் சுற்று வாய்ப்பில் பெங்களூர் நீடிக்கிறது.

    ஐதராபாத் அணி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை எல்லை கோர்ட்டில் நின்ற டிவில்லியர்ஸ் பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்து பிரமிக்க வைத்தார்.



    வெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    வெற்றி உணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. பனியின் தாக்கம் இருந்தது. ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டிவில்லியர்ஸ், மொய்ன் அலி, கிராண்ட் ஹோம் பேட்டிங் அபாரமாக இருந்தது.

    எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்தது. இதை நீங்கள் சாதாரண மனிதனாக இருந்தால் செய்ய முடியாது. அவரது பீல்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது.



    அவரது ஷாட்டுகள் இன்னமும் எனது பிரமிப்பில் இருந்து செல்லவில்லை. இந்த வெற்றி உத்வேகத்தை கடைசி போட்டியில் (ராஜஸ்தானுக்கு எதிராக) கொண்டு செல்வோம்.

    தற்போது 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அமைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மொயின் அலி தனது பணியை நன்றாக செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இரு கைகளிலும் நன்றாக பிடித்து கொண்டுள்ளார்.

    எங்களது சொந்த மைதானமான பெங்களூரில் இது கடைசி ஆட்டம். ரசிகர்களின் ஆதரவு அற்புதமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.#IPL2018 #viratkohli #AbDeVilliers
    பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா பந்து வீச்சு அருமையாக இருந்ததாக மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பாரட்டு தெரிவித்துள்ளார்.#IPL2018 #MIvKXIP #MI #KXIP #RohitSharma
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்து மயிரிழையில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 94 ரன்கள் எடுத்தார்.

    கடைசிகட்டத்தில் வியப்புக்குரிய வகையில் பந்து வீசிய மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

    2-வது பேட்டிங் (சேசிங்) செய்கையில் பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் இந்த சீசனில் இதுவரை 482 ரன்கள் குவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் 2-வது பேட்டிங் செய்த பேட்ஸ்மேன் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் இந்த வகையில் டேவிட் வார்னர் 468 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘முக்கியமான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியின் தேவைக்கு தகுந்தபடி வீரர்கள் செயல்பட்டார்கள். இந்த ஆடுகளத்தின் தன்மையை வைத்து, இது அதிக ரன் குவிக்கும் ஆட்டமாக இருக்கும் என்பதை அறிந்து இருந்தோம். மிடில் ஓவர்களில் எங்களது ஆட்டம் சரியாக அமையவில்லை. நாங்கள் 15 முதல் 20 ரன்கள் அதிகமாக எடுத்து இருக்க வேண்டும். எதிரணியின் வலுவான பேட்டிங் வரிசையை இந்த ஸ்கோரை வைத்து சமாளிப்பது கடினமானது என்பது எங்களுக்கு தெரியும். எங்களது பந்து வீச்சு பாராட்டும் வகையில் இருந்தது. பும்ரா கடந்த 2 வருடங்களாக கடினமாக உழைத்து வருகிறார். அவர் தனது அருமையான பந்து வீச்சின் மூலம் எதிரணியினருக்கு சவாலாக விளங்கியதுடன், ஆட்டம் எங்களுக்கு சாதகமாக முடியவும் வழிவகுத்தார்’ என்றார். #IPL2018 #MIvKXIP #MI #KXIP #RohitSharma
    ×