search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ipl cricket"

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி திரில் வெற்றியை பெற்றது. #IPL2019 #RCBvMI

    பெங்களூரு:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. கடந்த ஆண்டு ஆலோசகராக இருந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இந்த சீசனில் ஒரு வீரராக மும்பை அணிக்கு திரும்பினார்.

    ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குயின்டான் டி காக்கும், கேப்டன் ரோகித் சர்மாவும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டிற்கு துரத்தியடித்த இவர்கள் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் 52 ரன்கள் திரட்டினர். இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பிரித்தார். அவரது பந்து வீச்சில் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்த டி காக் (23 ரன், 20 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) போல்டு ஆனார். அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்கள் (33 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த திருப்தியுடன் நடையை கட்டினார்.




    அடுத்து வந்த யுவராஜ்சிங், யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் ‘ஹாட்ரிக்’ சிக்சர்கள் விளாசி அட்டகாசப்படுத்தினார். ஆனால் மறுபடியும் அதே ஓவரில் பந்தை தூக்கியடித்த போது எல்லைக்கோடு அருகே முகமது சிராஜூவினால் அருமையாக கேட்ச் செய்யப்பட்டார். யுவராஜ்சிங் 23 ரன்களில் (12 பந்து, 3 சிக்சர்) வெளியேறினார்.

    அதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் (38 ரன், 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), பொல்லார்ட் (5 ரன்) ஆகியோருக்கு ஒரே ஓவரில் சாஹல் ‘செக்’ வைத்தார். தொடர்ந்து குருணல் பாண்ட்யா, மெக்லெனஹான் தலா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து விக்கெட் சரிவால் ரன்வேகம் சற்று தளர்ந்தாலும் கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். இறுதி ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.

    20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களுடன் (14 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். பெங்களூரு தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 188 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 13 ரன்னில் தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து பார்த்தீவ் பட்டேல் 31 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 46 ரன்களிலும் (32 பந்து, 6 பவுண்டரி), ஹெட்மயர் 5 ரன்னிலும் வீழ்ந்தனர். இதில் கோலி ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் (முதலில் சுரேஷ் ரெய்னா) என்ற சாதனையுடன் வெளியேறினார்.

    மறுமுனையில் டிவில்லியர்ஸ் போராடினார். அவர் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஸ்லிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை யுவராஜ்சிங் கோட்டை விட்டார். அதை சாதகமாக பயன்படுத்தி சிக்சர் மழை பொழிந்த டிவில்லியர்ஸ் 31 பந்தில் அரைசதத்தை எட்டினார்.

    கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா, கிரான்ட்ஹோமின் (2 ரன்) விக்கெட்டை கபளகரம் செய்ததுடன் அந்த ஓவரில் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    இதையடுத்து கடைசி ஓவரில் பெங்களூரு அணிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட ஷிவம் துபே சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் அவர் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்து ஒரு ரன் எடுத்தார். எஞ்சிய 4 பந்தில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த மலிங்கா தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

    பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. டிவில்லியர்ஸ் 70 ரன்கள் (41 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். பெங்களூரு தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

    #IPL2019 #RCBvMI
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.#IPL2019 #KKRvKXIP
    கொல்கத்தா:

    8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் மோதியது. பஞ்சாப் அணியில் 4 மாற்றமாக நிகோலஸ் பூரன், சாம் குர்ரன், அங்கித் ராஜ்பூத், முஜீப் ரகுமான் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டேவிட் மில்லர், ஹர்டஸ் வில்ஜோன், வருண் சக்ரவர்த்தி, ஆண்ட்ரூ டை சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார்.

    இதன்படி கொல்கத்தாவின் இன்னிங்சை சுனில் நரினும், கிறிஸ் லின்னும் அதிரடியாக ஆரம்பித்தனர். புதுமுக வீரரான தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் முதல் ஓவரில் சுனில் நரின் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 24 ரன்களை திரட்டினார். அந்த ஓவரில் கிறிஸ் லின்னும் ஒரு ரன் எடுத்தார். இதன் மூலம் ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வருண் சக்ரவர்த்தி, ஐ.பி.எல்.-ல் அறிமுக ஓவரிலேயே அதிக ரன்களை வாரி வழங்கிய (25 ரன்) பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். கிறிஸ் லின் 10 ரன்னிலும், சுனில் நரின் 24 ரன்னிலும் வெளியேறினர்.



    இதன் பின்னர் ராபின் உத்தப்பாவும், நிதிஷ் ராணாவும் இணைந்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். 10-வது ஓவருக்கு பிறகு ராணா அடுத்தடுத்து சில சிக்சர்களை பறக்க விட்டார். இதனால் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக உயர்ந்தது. தொடர்ந்து 2-வது அரைசதத்தை கடந்த நிதிஷ் ராணா 63 ரன்களில் (34 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) கேட்ச் ஆனார்.

    அதைத் தொடர்ந்து வந்த ‘அதிரடி புயல்’ ஆந்த்ரே ரஸ்செல் 3 ரன்னில் முகமது ஷமியின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அந்த சமயத்தில் குறிப்பிட்ட உள்வட்டத்திற்குள் 4 பீல்டர்கள் நிற்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் 3 பீல்டர் மட்டுமே நின்றதால் அந்த பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக மறுவாழ்வு பெற்ற ரஸ்செல், அதன் பிறகு பஞ்சாப் பந்து வீச்சை பஞ்சராக்கினார். குறிப்பாக முகமது ஷமியின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர்களை விரட்டியடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் எகிறியதுடன் 200 ரன்களை தாண்டியது. ஆந்த்ரே ரஸ்செல் 48 ரன்களில் (17 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் நேர்த்தியாக ஆடி 24-வது அரைசதத்தை எட்டிய ராபின் உத்தப்பா 67 ரன்களுடன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார்.
     


    20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. ஈடன்கார்டனில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். கடைசி 4 ஓவர்களில் மட்டும் அந்த அணி 65 ரன்களை சேகரித்தது. பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, வில்ஜோன், ஆண்ட்ரூ டை தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. லோகேஷ் ராகுல் ஒரு ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 20 ரன்னிலும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), சர்ப்ராஸ் கான் 13 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 60 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்திற்கு உள்ளானது.

    அடுத்து வந்த மயங்க் அகர்வால் (58 ரன்), டேவிட் மில்லர் (59 ரன், நாட்-அவுட்), மன்தீப் சிங் (33 ரன், நாட்-அவுட்) உள்ளிட்டோர் கடுமையாக போராடிய போதிலும் அது அந்த அணியின் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

    20 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

    ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து இருந்தது. அதே சமயம் 2-வது லீக்கில் ஆடிய பஞ்சாப் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணியை சாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் 2-வது வெற்றியை பெற்றது. #IPL2019 #CSKvDC

    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டெல்லி அணியில் டிரென்ட் பவுல்டுக்கு பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டார். டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

    இதையடுத்து பிரித்வி ஷாவும், ஷிகர் தவானும் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வேகமாக ரன்கள் எடுக்கும் முனைப்புடன் ஆடிய பிரித்வி ஷா, ஷர்துல் தாகூரின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 24 ரன்களில் (16 பந்து, 5 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார். வேகம் குறைந்த (ஸ்லோ) இந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக எழும்பவேவில்லை.

    சென்னை வீரர்கள் பந்து வீச்சில் கொடுத்த குடைச்சலில் டெல்லி அணியின் ஸ்கோர் மந்தமானது. முதல் 9 ஓவர்களில் அந்த அணி 55 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களில் (20 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து நுழைந்த இளம் புயல் ரிஷாப் பான்ட் ரன்ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஹர்பஜன்சிங்கின் பந்து வீச்சில் ஒரு சிக்சரை பறக்க விட்ட ரிஷாப் பான்ட் 25 ரன்களில் (13 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிராவோவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த காலின் இங்ராமும் (2 ரன்) அதே ஓவரில் காலியானார். மறுமுனையில் தனது 33-வது அரைசதத்தை கடந்த ஷிகர் தவான் 51 ரன்களில் (47 பந்து, 7 பவுண்டரி) பிராவோவின் பந்து வீச்சில் வீழ்ந்தார். இதற்கிடையே கீமோ பால் ரன் ஏதுமின்றி வெளியேற்றப்பட்டார். 7 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்ததால் டெல்லி அணி இறுதி கட்டத்தில் தகிடுதத்தம் போட்டது. 150 ரன்களை எளிதில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி அதற்கு முன்பாகவே அடங்கிப்போனது.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் வெய்ன் பிராவோ 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். முந்தைய ஆட்டத்தின் நாயகன் ஹர்பஜன்சிங் 4 ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.



    பின்னர் 148 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது. அம்பத்தி ராயுடு 5 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் ஷேன் வாட்சனும், சுரேஷ் ரெய்னாவும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். இஷாந்த் ஷர்மாவின் ஓவரில் ரெய்னா தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை ஓடவிட்டு மிரட்டினார். இஷாந்த் ஷர்மா மற்றும் ரபடாவுடன் களத்தில் வாக்குவாதம், உரசலில் ஈடுபட்டு சூடு கிளப்பிய வாட்சன், அமித் மிஸ்ராவின் பந்து வீச்சில் அட்டகாசமாக 2 சிக்சர்களை விரட்டியடித்தார். வாட்சன் 44 ரன்களும் (26 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ரெய்னா 30 ரன்களும் (16 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி நெருக்கடியை தணித்தனர்.



    இதன் பின்னர் டோனியும், கேதர் ஜாதவும் நிதானமாக ஆடியதால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. ஜாதவ் 27 ரன்களில் (34 பந்து) கேட்ச் ஆனார். சென்னை அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி 32 ரன்களுடனும் (35 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), பிராவோ 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    ஆட்டம் முடிந்ததும் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிவந்து டோனியின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ரசிகரை பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து சென்றனர்.

    சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லிக்கு இது முதல் தோல்வியாகும்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது #IPL2019 #MIvDC

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. ரிஷாப் பான்ட் 18 பந்தில் அரைசதம் விளாசினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. ஐ.பி.எல். வரலாற்றில் இது 700-வது ஆட்டமாகும்.

    ‘டாஸ்’ வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் டெல்லியை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. பிரித்வி ஷா (7 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (16 ரன்) அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் காலின் இங்ராமும், ஷிகர் தவானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். இங்ராம் 47 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் எடுத்தனர்.

    இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் ருத்ரதாண்டவம் ஆடினார். சிக்சர் மழை பொழிந்த அவர் 18 பந்துகளில் அரைசதத்தை எட்டி அமர்க்களப்படுத்தினார். உலகத்தரம் வாய்ந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சிலும் 2 சிக்சர்களை ஓடவிட்டார். ரிஷாப் பான்டுவின் வாணவேடிக்கையால் டெல்லி அணி 200 ரன்களை எளிதில் கடந்தது.

    நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. மும்பைக்கு எதிராக டெல்லி அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 21 வயதான ரிஷாப் பான்ட் 78 ரன்களுடன் (27 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது. கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்னிலும், குயின்டான் டி காக் 27 ரன்னிலும், பொல்லார்ட் 21 ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா ரன் ஏதுமின்றியும் பெவிலியன் திரும்பினர். இந்த சறுக்கலில் இருந்து மும்பை அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை. மும்பை அணிக்காக முதல் முறையாக அடியெடுத்து வைத்த யுவராஜ்சிங் அரைசதம் (53 ரன், 35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தது மட்டுமே உள்ளூர் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமைந்தது.

    மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா பேட் செய்ய வரவில்லை. இதன் மூலம் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் இஷாந்த் ஷர்மா, ரபடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #IPL2019 #CSKvRCB #SureshRaina
    ஐபிஎல் 12-ஆவது சீசனுக்கான முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 70 ரன்னில் பரிதாபமாக சுருண்டது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 19 ரன்கள் எடுத்தார்.

    இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 5, ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சுரேஷ் ரெய்னா படைத்துள்ளார்.

    மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரர் பட்டியலிலும் சுரேஷ் ரெய்னா முதலிடம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #CSKvRCB #SureshRaina
    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னையில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
    சென்னை:

    8 அணிகள் இடையிலான 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை, நத்தம், சென்னை ஆகிய 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 3-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.

    பாபா இந்திரஜித் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணி, தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது. கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இந்த சீசனில் இது தான் முதல் ஆட்டமாகும்.

    இவ்விரு அணிகளும் கடந்த இரு ஆண்டுகளில் இரண்டு முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இரண்டு ஆட்டத்திலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியே வென்று இருந்தது.

    இன்றைய ஆட்டம் குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘நாங்கள் நடப்பு சாம்பியன் அணி என்பது குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கவில்லை. இது புதிய சீசன், புதிய போட்டி. அதுமட்டுமல்லாமல் முந்தைய சீசனுடன் ஒப்பிடுகையில் இது வேறுபட்ட அணியாகும். இந்த போட்டியை வெற்றியுடன் தொடங்குவதை எதிர்நோக்கி உள்ளோம். விஜய் சங்கர் இந்திய ‘ஏ’ அணியில் இடம் பெற்று இருப்பதால் அவரால் தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் விளையாட முடியாது என்பதை ஏற்கனவே அறிவோம்’ என்றார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கோபிநாத் கூறுகையில், ‘இந்த ஆடுகளம் சற்று மெதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள், குறிப்பாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். சென்னையில் நாங்கள் மூன்று ஆட்டங்களில் விளையாடுகிறோம். அதனை எங்களுக்கு சாதகமான அம்சமாக எடுத்து கொள்ள முடியாது. குறிப்பிட்ட நாளில் எந்த அணி அசத்துகிறது என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்’ என்றார்.



    திருச்சி வாரியர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹேமந்த் குமார் கூறுகையில் ‘முதல் ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்தை தொடர முயற்சிப்போம்’ என்றார்.

    இன்றைய போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கோபிநாத் (கேப்டன்), அலெக்சாண்டர், கார்த்திக், சசிதேவ், எம்.அஸ்வின், ஹரிஷ்குமார், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சன்னி குமார் சிங், சம்ருத் பாட், அருண்குமார், விஷால், ராகுல், சித்தார்த், அருண், ஆரிப், சிவக்குமார், மானவ் பாரக், சாய் சுதர்சன்.

    திருச்சி வாரியர்ஸ்: பாபா இந்திரஜித் (கேப்டன்), பரத் சங்கர், கே.விக்னேஷ், சஞ்சய், சோனு யாதவ், எம்.விஜய், கணபதி, எஸ்.சுரேஷ்குமார், வசந்த் சரவணன், அரவிந்த், லட்சுமி நாராயணன், எல்.விக்னேஷ், சந்திரசேகர், மணிபாரதி, அஸ்வின் கிறிஸ்ட், சரவணகுமார், கோவிந்தராஜன், திலக், வி.ஆகாஷ்.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #NammaOoruNammaGethu #PattaiyaKelappu #CSG #TNPL2018
    ஐபிஎல் இறுதிப்போட்டியில் வாட்சன் தொடக்கத்தில் அமைதியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆக்ரோ‌ஷத்துடன் அதிரடியாக விளையாடி சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்துள்ளார்.#IPL2018 #CSK #Watson
    சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது தடவையாக கோப்பையை வெல்லுமா? என்று ஓட்டு மொத்த சி.எஸ்.கே. ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

    கேப்டன் டோனியும் ‘டாஸ்’ வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 179 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. இந்த ரன்னை சென்னை அணி ‘சேஸ்’ செய்யுமா? என்ற கலக்கம் இருந்தது.

    ரஷீத்கான், புவனேஷ்வர்குமார் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் ஐதராபாத் அணியில் இருப்பதால் இந்த சந்தேகம் ஏற்பட்டது.

    அதற்கு ஏற்றவாறு வாட்சனின் ஆட்டம் தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்தது. புவனேஷ்வர்குமாரின், முதல் ஓவரே மெய்டனாக இருந்தது. தனது 11-வது பந்தில் தான் அவர் பவுண்டரி மூலம் கணக்கை தொடங்கினார். இதனால் ரசிகர்கள் கடுப்படைந்தனர். அணிக்கு ஏற்பட்ட நெருக்கடியில் டுபெலிசிஸ் அதிரடியாக ஆடும் முயற்சியில் ஆட்டம் இழந்தார்.

    முதல் 5 ஓவரில் சென்னை அணி 1 விக்கெட்டை இழந்தது. 20 ரன் மட்டுமே எடுத்து இருந்தது. இதனால் எங்கு வெற்றி பெற போகிறது என்ற எண்ணம் எழுந்தது.

    அப்போது தான் வாட்சன் தனது பொறுப்பை உணர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். சந்தீப்சர்மா வீசிய ஆட்டத்தின் 6-வது ஓவரில் இருந்து அவரது அதிரடி தொடங்கியது. அந்த ஓவரில் 1 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். அவருக்கு ரெய்னா உதவியாக இருந்தார்.

    புவனேஷ்வர்குமார், ரஷீத்கான் ஓவரை தவிர மற்ற பந்துவீச்சாளர்களை எல்லாம் வாட்சன் அடித்து நொறுக்கி துவசம் செய்துவிட்டார்.

    சந்தீப்சர்மா வீசிய 13-வது ஓவரில் அவர் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 26 ரன் குவித்தார். 33 பந்தில் அரை சதத்தை (3 பவுண்டரி, 4 சிக்சர்) பூர்த்தி செய்த வாட்சன் 51 பந்தில் சதம் (7 பவுண்டரி, 8 சிக்சர்) 100 எடுத்தார். தொடக்கத்தில் அமைதியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் பின்னர் ஆக்ரோ‌ஷத்துடன் அதிரடியாக விளையாடி சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

    ஆரம்பத்தில் அவரது ஆட்டத்தை பார்த்து வெறுத்து போன ரசிகர்கள் பின்னர் அதிரடியாக ஆடியதை பார்த்து உற்சாகம் அடைந்தனர். வாட்சன் சிக்சர்களும், பவுண்டரிகளுமாய் அடித்து மும்பை வான்கடே மைதான ரசிகர்களுக்கு மட்டுமின்றி, போட்டியை டெலிவிசனில் ரசித்த ரசிகர்களுக்கும் விருந்து படைத்தார்.

    117 ரன் குவித்ததன் மூலம் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன்பு விர்த்திமான் சகா 2014-ம் ஆண்டு 115 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.#IPL2018 #CSK #Watson
    கிரிக்கெட்டில் வயது ஒரு பிரச்சினை கிடையாது எனவும் உடல் தகுதியுடன் இருப்பது தான் முக்கியம் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறியுள்ளார்.#IPL2018 #CSK #Dhoni
    மும்பை:

    2 ஆண்டு தடைக்கு பிறகு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 30 வயதை தாண்டிய வீரர்கள் 8 பேர் இடம் பெற்று இருந்தனர்.

    கேப்டன் டோனி (36 வயது), இம்ரான் தாகீர் (39), ஹர்பஜன்சிங் (38), வாட்சன் (36), பிராவோ (34), டுபெலிசிஸ் (33), அம்பதிராயுடு (32), ரெய்னா (31) உள்ளிட்ட வீரர்கள் 30 வயதை தாண்டி இருந்தனர். இதனால் ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்சை “அப்பாக்கள் அணி” என்று விமர்சனம் செய்தனர். இதற்கு அவர்கள் கோப்பையை வென்று கொடுத்து பதிலடி கொடுத்தனர்.

    ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்றபோது டோனி இது தொடர்பாக கூறியதாவது:-

    எங்கள் அணி வீரர்களின் வயது பற்றி அதிகமாக பேசுகிறார்கள். ஆனால் வயது ஒரு பிரச்சினை கிடையாது. உடல் தகுதியுடன் இருப்பது தான் முக்கியம். உதாரணத்திற்கு அம்பதி ராயுடுவை சொல்லலாம். 32 வயதான அவர் நல்ல உடல் தகுதியுடன் இருந்து அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி உள்ளார். எனவே வயதைவிட உடல் தகுதி தான் முக்கியம்.



    இறுதிப்போட்டிக்கு நுழைந்த பிறகு அனைத்து வீரர்களுக்கும் அவர்களது பங்களிப்பு என்ன என்பது தெரியும். எங்கள் அணியின் மிடில் ஆர்டர் மீது நம்பிக்கை வைத்து இருந்தோம். டுபெலிசிசை முதலிலும், அம்பதி ராயுடுவை பின் வரிசையிலும் இறக்கியதில் எந்த திட்டமும் இல்லை.

    இதற்கு முந்தைய கோப்பையை வென்றபோது நடந்ததை நினைவுக்கு கொண்டு வருவது கடினம். புள்ளி விவரங்களை பற்றி பலர் பேசுகிறார்கள். இறுதிப்போட்டி தேதி 27 (நேற்று) எனது ஜெர்சி எண் 7, எங்களுக்கு 7-வது இறுதிப்போட்டி. நாங்கள் கோப்பையை வெல்ல போதுமான காரணம் இருக்கிறது. ஆனாலும் இதெல்லாம் காரணமில்லை. கடைசியில் நாங்கள் சிறப்பாக ஆடி கோப்பையை வென்றுள்ளோம்.

    இவ்வாறு டோனி கூறினார்.#IPL2018 #CSK #Dhoni
    ஐதராபாத் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் போராடி தோல்வி அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.#IPL2018 #KKR #DineshKarthik
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்னில் ஐதராபாத்திடம் தோற்று இறுதி ஆட்டத்துக்கான வாய்ப்பை இழந்தது.

    இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டனும், சென்னையை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    இந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக ஆடினோம். இந்தப் போட்டியில் தோற்றது சிறப்பானதாக இல்லை. ரன் இலக்கை தொடங்கும் போது எங்கள் பக்கமே ஆட்டம் இருந்தது. ஆனால் சில மோசமான ஷாட்களும் ஒரு ரன் அவுட்டும் எங்களிடம் இருந்து போட்டியை மாற்றி விட்டது.

    நான், ராபின் உத்தப்பா ஆகியோர் நன்றாக ஆடி ஆட்டத்தை முடித்து இருக்க வேண்டும். ஆனால் எனது தவறின் மூலம் வெற்றியை நோக்கி செல்ல முடியவில்லை. கிறிஸ் லின் சிறப்பாக ஆடினார்.



    இந்த தொடரில் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர். இது அணிக்கு சிறப்பாக அமையும்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.#IPL2018 #KKR #DineshKarthik
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் நாளை மோதுகின்றனர்.#IPL2018 #CSKvSRH #CSK #SRH
    மும்பை:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கியது.

    இதில் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

    கடந்த 20-ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. இதன் முதலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    ‘பிளேஆப்’ சுற்று கடந்த 22-ந் தேதி தொடங்கியது. ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 25 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. இதனால் ராஜஸ்தான் வெறியேறியது.

    ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் ஐதராபாத் அணி 14 ரன்னில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா அணி வெளியேற்றப்பட்டது.

    இன்று ஓய்வு நாளாகும். இறுதிப் போட்டி நாளை (27-ந்தேதி) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    2 ஆண்டு தடைக்கு பிறகு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டித் தொடரில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. ‘லீக்‘ போட்டியில் 5 ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. 9 போட்டியில் வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் ஐதராபாத்தை 3 தடவை வீழ்த்தி இருந்தது. 2 ‘லீக்‘ ஆட்டத்திலும், ‘குவாலிபையர்1’ ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் சென்னை அணி வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

    ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி கோப்பையை வென்று இருந்தது.

    ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை நோக்கி சென்றே வெற்றி பெற்றது. டுபெலிசிஸ் மற்றும் பின்வரிசை வீரர்களான தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்கள். இதனால் இறுதிப் போட்டியில் கவனமுடன் விளையாட வேண்டும்.

    மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டியில் 4 முறை (2008, 2012, 2013, 2015) தோற்று இருந்தது. இதனால் ஐதராபாத்துக்கு எதிரான நாளைய இறுதிப்போட்டியில் மிகவும் கவனத்துடன் ஆட வேண்டும்.

    பேட்டிங்கில் அம்பதி ராயுடு (585 ரன்), கேப்டன் டோனி (455ரன்), வாட்சன் (438 ரன்), ரெய்னா (413 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல் ஜடேஜா, பிராவோ மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பந்து வீச்சில் வேகப்பந்து வீரர் நிகிடி நன்றாக செயல்படுகிறார்.

    மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையும், கடைசி கட்ட பந்து வீச்சும் சிறப்பாக அமைந்தால் கோப்பையை வெல்லலாம். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

    ஐதராபாத் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமபலத்துடன் இருக்கிறது. அந்த அணி சென்னைக்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு அந்த அணி கோப்பையை வென்று இருந்தது.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன் (688 ரன்), தவான் (471 ரன்), மனீஷ் பாண்டே (286 ரன்), யூசுப்பதான் (215 ரன்), சகிப் அல்-ஹசன் (216 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் ரஹீத்கான் (21 விக்கெட்), சித்தார்த் கவுல் (21 விக்கெட்), புவனேஷ்வர் குமார், சந்திப் சர்மா ஆகி யோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.#IPL2018 #CSKvSRH #CSK #SRH
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 2 ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மோதுகின்றன.#IPL2018 #KKRvSRH #KKR #SRH
    கொல்கத்தா:

    11-வது ஐ.பி.எல். போட்டி தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டமே எஞ்சி இருக்கிறது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது என்பது இன்று தெரியும்.

    கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடை பெறும். ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐதராபாத் அணி 2-வது முறையாகவும், கொல்கத்தா அணி 3-வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன.

    குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் அதை வைத்து தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் சவால் தொடுக்கும் திறமையான அணி ஐதராபாத் ஆகும். உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு கூடுதல் பலமே.

    இந்தப் போட்டித் தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக வில்லியம்சன் உள்ளார். அவர் 8 அரை சதம் உள்பட 685 ரன்கள் குவித்துள்ளார். கொல்கத்தா அணிக்கு அவர் மிகப்பெரிய சவாலாக விளங்குவார்.

    இது தவிர தவான் (437 ரன்), மனீஷ் பாண்டே (284 ரன்), யூசுப் பதான் (212 ரன்), சகீப்-அல்- ஹசன் (183 ரன், 13 விக்கெட்), ரஷீத்கான் (18 விக்கெட்), சித்தார்த் கபூல் (19 விக்கெட்), புவனேஸ்வர் குமார் (9 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கொல்கத்தா அணியில் அதிக ரன் எடுத்த வீரர் கேப்டன் தினேஷ் கார்த்திக். அவர் 2 அரை சதம் உள்பட 490 ரன் எடுத்துள்ளார். இது தவிர கிறிஸ்லன் (443 ரன்), ராபின் உத்தப்பா (349 ரன்), சுனில்நரீன் (331 ரன், 16 விக்கெட்), ஆந்தரே ரஸ்சல் (313 ரன், 13 விக்கெட்), குல்தீப் யாதவ் (15 விக்கெட்), பியூஸ் சாவ்லா (13 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இந்த தொடரில் இரு அணிகளும் மோதிய 2 போட்டியில் தலா 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் இதுவரை ஐ.பி.எல்.லில் 14 போட்டியில் மோதியுள்ளன.

    இதில் கொல்கத்தா-9, ஐதராபாத்-5ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரு அணியிலும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் வருமாறு:-

    ஐதராபாத்: வில்லியம்சன் (கேப்டன்), தவான், கோஸ்சுவாமி, மனீஷ் பாண்டே, சகீப்-அல்-ஹசன், யூசுப்பதான், பிராத் வெயிட், ரஷீத்கான், புவனேஷ் வர்குமார், சித்தார்த்கவூல், சந்தீப் சர்மா.

    கொல்கத்தா: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரீன், உத்தப்பா, நிதிஷ்ரானா, ஆந்தரே ரஸ்சல், சுப்மன் ஹில், சீயர்லெஸ், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, கிருஷ்ணா.#IPL2018 #KKRvSRH #KKR #SRH
    கிரிக்இன்போ ஐபிஎல் கனவு அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி மற்றும் ராயுடு இடம்பிடித்துள்ளனர். #IPL2018
    11-வது ஐ.பி.எல். போட்டியில் ‘லீக்’ ஆட்டம் முடிந்து ‘பிளேஆப்’ சுற்று இன்று தொடங்குகிறது.

    கிரிக்கெட் இணைய தளமான கிரிக்இன்போ ஐ.பி.எல். கனவு அணியை வெளியிட்டு உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, அம்புதி ராயுடு இடம் பெற்றுள்ளனர். ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கனவு அணிக்கு கேப்டனாக இருக்கிறார். ஆல் ரவுண்டர்களான குர்னல் பாண்ட்யா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு இந்த அணியில் இடமில்லை.

    கிரிக்கெட் இன்போவின் ஐ.பி.எல். கனவு அணி வருமாறு:-

    லோகேஷ் ராகுல் (பஞ்சாப்), சுனில் நரேன் (கொல்கத்தா), வில்லியம்சன் (கேப்டன், ஐதராபாத்), அம்புதி ராயுடு (சென்னை), ரி‌ஷப்பண்ட் (டெல்லி), தினேஷ் கார்த்திக் (கொல்கத்தா), டோனி (விக்கெட் கீப்பர், சென்னை), ரஹித்கான் (ஐதராபாத்), ஆண்ட்ரூ டை (பஞ்சாப்), உமேஷ் யாதவ் (பெங்களூர்), பும்ரா (மும்பை).#IPL2018
    ×