என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் கிரிக்கெட் - 5,000 ரன்கள் குவித்து சுரேஷ் ரெய்னா முதலிடம் பிடித்து சாதனை
Byமாலை மலர்24 March 2019 1:17 PM GMT (Updated: 24 March 2019 1:17 PM GMT)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #IPL2019 #CSKvRCB #SureshRaina
ஐபிஎல் 12-ஆவது சீசனுக்கான முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 70 ரன்னில் பரிதாபமாக சுருண்டது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 19 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 5, ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சுரேஷ் ரெய்னா படைத்துள்ளார்.
மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரர் பட்டியலிலும் சுரேஷ் ரெய்னா முதலிடம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #CSKvRCB #SureshRaina
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X