என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Watson"
- 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ராயல் செலஞ்சர் பெங்களூரு அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார்.
- 2016 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தற்காக பெங்களூரு ரசிகர்களிடம் முன்னாள் ராயல் செலஞ்சர் பெங்களூரு அணியின் வீரர் ஷேன் வாட்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.
2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார்.
2016 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை பெங்களூரு எதிர் கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 208 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
அப்போட்டியில் 4 ஓவர் பந்துவீசிய வாட்சன் விக்கெட் எதுவும் எடுக்காமல் 61 ரன்கள் விட்டு கொடுத்தார். பேட்டிங்கிலும் 9 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே அடித்தார்.
இந்த தோல்வி குறித்து பேசிய வாட்சன், "2016 ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்றதற்காக பெங்களூரு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முடிந்தளவிற்கு நன்றாக தயாராகியிருந்தேன். அது எனது சிறப்பான ஆட்டமாக இருக்கவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், அதுவே எனது மிக மோசமான ஆட்டமாக அமைந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய வாட்சன் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Shane Watson apologising to fans for the 2016 IPL Final loss.
— Tanuj Singh (@ImTanujSingh) May 21, 2024
Shane Watson - What a guy, He is gem of a person. ?❤️ pic.twitter.com/DkkudzQq3L
![](https://img.maalaimalar.com/InlineImage/201905161804412570_1_dsgjhds._L_styvpf.jpg)
இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட அணியின் வெற்றிக்காக விளையாடிய வாட்சனுக்கு சில தினங்களாக ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக வாட்சன் வீடியோ ஒன்றை வெளியீட்டுள்ளார்.
அந்த வீடியோவில் வாட்சன் கூறியதாவது:-
கடந்த 2 நாட்களாக ஆதரவு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி வரை முயன்று 1 ரன்னில்தான் தோல்வியடைந்தோம். ஆனாலும் மிகவும் சிறப்பான ஆட்டமாகும்.
அடுத்த வருடம் இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். உங்கள் ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் விசில் போடு.
இவ்வாறு வீடியோவில் கூறியிருந்தார்.
கேப்டன் டோனியும் ‘டாஸ்’ வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 179 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. இந்த ரன்னை சென்னை அணி ‘சேஸ்’ செய்யுமா? என்ற கலக்கம் இருந்தது.
ரஷீத்கான், புவனேஷ்வர்குமார் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் ஐதராபாத் அணியில் இருப்பதால் இந்த சந்தேகம் ஏற்பட்டது.
அதற்கு ஏற்றவாறு வாட்சனின் ஆட்டம் தொடக்கத்தில் மிகவும் மந்தமாக இருந்தது. புவனேஷ்வர்குமாரின், முதல் ஓவரே மெய்டனாக இருந்தது. தனது 11-வது பந்தில் தான் அவர் பவுண்டரி மூலம் கணக்கை தொடங்கினார். இதனால் ரசிகர்கள் கடுப்படைந்தனர். அணிக்கு ஏற்பட்ட நெருக்கடியில் டுபெலிசிஸ் அதிரடியாக ஆடும் முயற்சியில் ஆட்டம் இழந்தார்.
முதல் 5 ஓவரில் சென்னை அணி 1 விக்கெட்டை இழந்தது. 20 ரன் மட்டுமே எடுத்து இருந்தது. இதனால் எங்கு வெற்றி பெற போகிறது என்ற எண்ணம் எழுந்தது.
அப்போது தான் வாட்சன் தனது பொறுப்பை உணர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். சந்தீப்சர்மா வீசிய ஆட்டத்தின் 6-வது ஓவரில் இருந்து அவரது அதிரடி தொடங்கியது. அந்த ஓவரில் 1 சிக்சர், 1 பவுண்டரி அடித்தார். அவருக்கு ரெய்னா உதவியாக இருந்தார்.
புவனேஷ்வர்குமார், ரஷீத்கான் ஓவரை தவிர மற்ற பந்துவீச்சாளர்களை எல்லாம் வாட்சன் அடித்து நொறுக்கி துவசம் செய்துவிட்டார்.
சந்தீப்சர்மா வீசிய 13-வது ஓவரில் அவர் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 26 ரன் குவித்தார். 33 பந்தில் அரை சதத்தை (3 பவுண்டரி, 4 சிக்சர்) பூர்த்தி செய்த வாட்சன் 51 பந்தில் சதம் (7 பவுண்டரி, 8 சிக்சர்) 100 எடுத்தார். தொடக்கத்தில் அமைதியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் பின்னர் ஆக்ரோஷத்துடன் அதிரடியாக விளையாடி சென்னை அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.
ஆரம்பத்தில் அவரது ஆட்டத்தை பார்த்து வெறுத்து போன ரசிகர்கள் பின்னர் அதிரடியாக ஆடியதை பார்த்து உற்சாகம் அடைந்தனர். வாட்சன் சிக்சர்களும், பவுண்டரிகளுமாய் அடித்து மும்பை வான்கடே மைதான ரசிகர்களுக்கு மட்டுமின்றி, போட்டியை டெலிவிசனில் ரசித்த ரசிகர்களுக்கும் விருந்து படைத்தார்.
117 ரன் குவித்ததன் மூலம் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன்பு விர்த்திமான் சகா 2014-ம் ஆண்டு 115 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.#IPL2018 #CSK #Watson
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)