search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband arrested"

    • 3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
    • மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேம்பத்தூர் ஆந்தகுடி இரவிய மங்கலம் புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் தனபாலன் (வயது45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகவள்ளி (38), இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

    தனபாலன் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனிடம் இருந்து பிரிந்து மனைவி சினேகவள்ளி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    3 மாதங்களுக்கு முன்பு தனபாலன், மனைவியிடம் நான் திருந்தி விட்டேன் என்று கூறி சினேகவள்ளியை வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் கணவன்-மனைவி வாழ்ந்து வந்த நிலையில் தனபாலன் குடிபோதையில் நேற்று குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற சமயத்தில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர், மண்வெட்டியால் மனைவியை தாக்கி கொன்றார்.

    தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் குமார், திருவேகம்பத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சினேக வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சில மணி நேரங்களில் தனபாலனும் கைது செய்யப்பட்டார். மனைவியை அடித்து கொல்ல பயன்படுத்திய மண்வெட்டியை போலீசார் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

    • ஆனந்தன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • பலத்த காயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

      பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 31).இவரது மனைவி நந்தினி (26). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஆனந்தன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரின் குடிப்பழக்கம் காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19.9.2022 அன்று ஆனந்தன் வீட்டிற்கு குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கணவன்- மனைவி இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

    இதில் மன வேதனை அடைந்த நந்தினி வீட்டில் இருந்த திரவத்தை எடுத்து தன் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து நந்தினியின் தாயார் விஜயா, தனது மகள் சாவிற்கு மருமகன் ஆனந்தன் கொடுமைப்படுத்தியது தான் காரணம் என்று புகார் அளித்துள்ளார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆனந்தனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மனைவியை கொலை செய்து விட்டு கணவர் நாடகம் ஆடிய சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (வயது 29).

    இவரது மனைவி ரெஜினா பானு (26). இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்திற்கு வேலைக்காக வந்தார். கடந்த 6 மாதங்களாக புன்னை நகர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி நாகர்கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ரெஜினா பானு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரெஜினா பானு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேசமணி நகர் போலீசார் முகமது உசேனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது ரெஜினா பானு இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்கியதாகவும் மறுநாள் காலையில் அவர் நீண்ட நேரமாக எழும்பாததால் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

    இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    விசாரணையில் மனைவி ரெஜினா பானுவை கணவர் முகமது உசேன் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் முகமது உசேனை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட முகமது உசேன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் ரெஜினா பானுவுக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் குமரி மாவட்டத்தில் வேலைக்கு வந்தோம். தற்பொழுது நான் புன்னைநகர் பகுதியில் தங்கி ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று நான் வேலைக்கு சென்று விட்டு வந்த போது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது எனது மனைவி ரெஜினா பானு தற்கொலை செய்வதாக கூறி கழுத்தில் துணியை வைத்துக்கொண்டு என்னை மிரட்டினார். அப்போது நான் அவரை சமாதானம் செய்தேன்.

    தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினையில் எனது மனைவியின் கழுத்தை நெரித்தேன். அப்போது அவர் இறந்துவிட்டார். உடனே அவரை தூங்குவதுபோல் போட்டுவிட்டு நானும் தூங்கினேன். மறுநாள் காலையில் குழந்தைகளும் கண் விழித்தனர். அப்போது தாயார் எழும்பாததால் என்னிடம் கேட்டனர்.

    அப்போது குழந்தைகளிடம் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினேன். பின்னர் ரெஜினாபானுவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு எனது மனைவி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் என்னிடம் துருவி துருவி விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட முகமது உசேனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
    • கடந்த 16-ந்தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மனைவியை திலீப் கொடூரமாக தாக்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த மலையின்கீழ் பகுதியை சேர்ந்தவர் திலீப்.

    இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 16-ந்தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மனைவியை திலீப் கொடூரமாக தாக்கினார்.

    அதனை அவரே செல்போனில் படம் எடுத்தார். அந்த வீடியோவில் மனைவியை நான்தான் தாக்கினேன், அவரது முகத்தில் வழியும் ரத்தத்திற்கு நான் தான் காரணம். அவள் இனி வேலைக்கு செல்லமாட்டாள் என்று கூறி மீண்டும் அவரை சரமாரியாக அடித்து உதைக்கிறார்.

    இந்த காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் பரவியது. இதனை பார்த்த பலரும் திலீப்பை கண்டித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் திலீப்பின் மனைவி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதில் குடிபோதையில் தனது கணவர் அடித்து உதைத்ததாகவும், குடும்ப செலவுக்கு பணம் தராமல் சித்ரவதை செய்வதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திலீப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கடுக்காக்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் குழந்தை பர்னாந்து ( வயது 38).
    • கடந்த ஜூன் 25-ந்தேதி ஆரோக்கியமேரி வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கடுக்காக்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் குழந்தை பர்னாந்து ( வயது 38). இவரது மனைவி ஆரோக்கியமேரி (31). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    வெளிநாட்டில் வேலை செய்து வந்த குழந்தை பர்னாந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 25-ந்தேதி ஆரோக்கியமேரி வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து வடகாடு போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் மற்றும் ஆலங்குடி காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆகியோர் அப்போது விசாரித்து வந்தனர். அவர்கள் அளித்த அறிக்கையின்படி, ஆரோக்கிய மேரியின் கழுத்தை நெரித்து குழந்தை பர்னாந்து கொலை செய்ததும், அதை மறைப்பதற்காக தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து, மனைவியை கொலை செய்ததாக குழந்தை பர்னாந்தை வடகாடு போலீசார் நேற்று கைது செய்தனர்.மேலும் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப் பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமக்கு வளைகாப்பு செய்யும் அற்புதராஜிடம் வற்புறுத்தியுள்ளார்.
    • கடன் பிரச்சினை இருப்பதால் வளைகாப்பு நடத்த முடியாது கணவர் கூறி வந்துள்ளார்

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் அற்புதராஜ் (வயது 20). இவர் மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவரும் விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த லதாவின் மகள் சக்தி(18) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் நெருங்கி பழகியதால் சக்தி கர்ப்பம் அடைந்தார்.

    இதனையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர், கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கி இருந்தார். கர்ப்பம் அடைந்த சக்தி 7 மாதங்கள் ஆகியதால் தமக்கு வளைகாப்பு செய்யும் அற்புதராஜிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் கடன் பிரச்சினை இருப்பதால் வளைகாப்பு நடத்த முடியாது கணவர் கூறி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

    நேற்று மாலை தாய் வீட்டில் தனியாக சக்தி இருந்துள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவரது தாய் லதா அங்கு சக்தி உயிரிழந்த நிலையில் முகம், கழுத்து ஆக இடங்களில் ரத்தக்காயங்களுடன் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தகவல்அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததால் அவரது கணவர் அற்புதராஜை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் தனது காதல் மனைவியை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விருத்தாசலம் போலீசார் காதல் மனைவியை கொலை செய்த அற்புதராஜை கைது செய்தனர்.

    • 2 மாதத்துக்கு முன்பு பழனியின் தாய் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
    • இறுதிச் சடங்கில் பங்கேற்க சொந்த கிராமத்துக்கு வந்த ராணி, அங்கேயே தங்கி விட்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த புதூர்செக்கடி, ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது48). இவரது மனைவி ராணி (43). இவர்களுக்கு ராஜபாண்டி (24), சிவா (22) என்ற 2 மகன்களும், பரணி (21) என்ற மகளும் உள்ளனர். ராணி வெளிநாட்டில் தங்கி வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்து வந்தார்.

    2 மாதத்துக்கு முன்பு பழனியின் தாய் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க சொந்த கிராமத்துக்கு வந்த ராணி, அங்கேயே தங்கி விட்டார். இதற்கிடையில், இவர்களது மகள் பரணி புதூரை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் தந்தை பழனி மற்றும் உறவினர்கள் ஆதரவுடன் அந்த வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

    ஆனால் மகளின் காதல் திருமணம் தாய் ராணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியில் உள்ள ராணியின் சகோதரி வீட்டில் நடந்த விசேஷத்தில் பங்கேற்க தேவையான பொருட்களை தானிப்பாடியில் உள்ள கடைகளில் வாங்கிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ராணி வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஆத்திரமடைந்த பழனி, வீட்டில் வைத்திருந்த கத்தியால் ராணியின் கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ராணி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த மகன் சிவா, ரத்த வெள்ளத்தில் தாய் பிணமாகக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடன் அக்கம் பக்கத்தினர் வந்து தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் டி.எஸ்.பி.அஸ்வினி, தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தானிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பழனியை தேடி வந்தனர். பக்கத்து கிராமத்தில். பதுங்கியிருந்த பழனியை போலீசார் கைது செய்தனர்.

    போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவி ராணி கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

    எனது மகள் காதல் திருமண செய்வது குறித்து அவரிடம் கூறினேன். அவர் வர மறுத்தார். எனது மகன்களும் திருமணத்திற்கு வரவில்லை. நான் மட்டும் மகள் திருமணத்திற்கு சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். சம்பவத்தன்று இரவு நான் வீட்டுக்கு வந்த போது ராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடுவது போல இருந்தது. இது பற்றி நான் ராணியிடம் கேட்டேன். அவர் யாரும் வீட்டுக்கு வரவில்லை என கூறினார். ஆனால் அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    சந்தேகம் தீராததால் தொடர்ந்து இதுபற்றி அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் கத்தியால் ராணியை கழுத்தில் வெட்டினேன். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தேவயானி அவருடைய வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவர் பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அடுத்துள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(32) கட்டிட கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவயானி (25).

    இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரணிகா என்ற 3 வயது மகள் உள்ளார்.

    இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அதே போல் நேற்று முன்தினம் இரவும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அதன் பின்பு தூங்க சென்று விட்டனர். அதிகாலை 4 மணிக்கு பாலசுப்பிரமணியம் எழுந்து வேலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் காலை வெகு நேரமாகியும் தேவயானி வீட்டில் இருந்து வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்து உள்ளனர்.

    அப்போது தேவயானி அவருடைய வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    அதன் பின்பு தேவயானியின் தாய் ரமணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து ரமணி அம்மாபேட்டை போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது கணவர் அடித்து கொலை செய்திருக்கலாம் எனவும் புகார் தெரிவித்திருந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உடலைக் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் பாலசுப்ரமணியம் கைது செய்யப்பட்டு பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    • பழனி, பாரதி இருவரும் சிறு வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • கார் டிரைவராக வேலை செய்து வந்த பழனி கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    பாரதி அதே பகுதியில் டீ கடையில் வேலை செய்து வந்தார். இவரது நடத்தையில் பழனிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நாளுக்கு நாள் பாரதி மீதான சந்தேகம் பழனிக்கு அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பழனி நேற்று பாரதி வேலை செய்யும் டீ கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். கடையின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று மனைவியிடம் பழனி பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியுள்ளது. இதில் ஆவேசமடைந்த பழனி, மனைவி பாரதியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாரதி உயிரிழந்தார்.

    இருவரும் சிறு வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கார் டிரைவராக வேலை செய்து வந்த பழனி கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பாரதி வேலை செய்த கடையின் 3-வது மாடியில் வைத்து மனைவியை அவர் அடித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.

    • கணவர் எனது நடத்தையில் சந்தேகம் அடைந்து என்னிடம் தகராறு செய்து வந்தார்.
    • மனைவியை தாக்கிய கவுதமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜ புரத்தை சேர்ந்தவர் முத்து லட்சுமி (வயது 19). இவர் சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் கட்டிட வேலை செய்து வரும் கவுதம் (26) என்பவருக்கு திருமணம் நடந்தது. எங்களுக்கு 11 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் எனது கணவர் நடத்தையில் சந்தேகம் அடைந்து என்னிடம் தகராறு செய்து வந்தார்.

    சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த கவுதம் எங்களது 11 மாத குழந்தையை பார்த்து இது எனக்கு பிறந்தது தானா என கூறி தகராறு செய்தார். இதனால் எங்கள் 2 பேரும் இடைேய வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த எனது கணவர் மரக்கட்டையால் என்னை தாக்கினார். தாக்குதலில் படுகாயம் அடைந்த என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் மனைவியை தாக்கிய கவுதம் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    புலியகுளம் அருகே உள்ள பாலசுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் மனோகரன்(வயது 38). இவரது மனைவி மீனா (28). மாநகராட்சி ஒப்பந்ததாரர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மது பழக்கத்துக்கு அடிமையான மனோகரன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தது.

    இது குறித்து 2 முறை கணவர் மீது மீனா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவன்-மனைவி ஆகியோரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று மது போதையில் வீட்டுக்கு வந்த அவர் மீண்டும் தனது மனைவியை தாக்கினார். இது குறித்து மீனா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மனோகரனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • மனைவி மீதும் வழக்குப்பதிவு
    • செலவு செய்த ரூ.98 ஆயிரத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்

    கோவை,

    கோவை அன்னூர் ஏ.எம்.காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 32). இவரது மனைவி முத்துலட்சுமி (30). இவர் அங்குள்ள மருந்து கடையில் வேலை செய்து வருகிறார்.

    முத்துலட்சுமியின் முதல் கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் தனது கல்லூரி நண்பரான கிருஷ்ணமூர்த்தியை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கிருஷ்ணமூர்த்தி, முத்துலட்சுமியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

    அதனால் தான் முத்துலட்சுமிக்கு செலவு செய்த ரூ.98 ஆயிரத்தை திருப்பி தருமாறு கடந்த ஒரு வாரமாக கேட்டுள்ளார். சம்பவத்தன்று மீண்டும் பணத்தை கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை தாக்கினார். இதனை பார்த்த முத்து லட்சுமியின் தாயார் அங்கு வந்து கிருஷ்ண மூர்த்தியை தடுத்தார். அப்போது அவரையும் தாக்கினார்.

    பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். இதனால் பயந்துபோன முத்துலட்சுமி அன்னூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிருஷ்ண மூர்த்தியை கைது செய்தனர்.

    அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத் தனர். இதே போன்று கிருஷ்ண மூர்த்தியும் தனது மனைவி தகாத வார்த்தை களால் திட்டி தாக்கியதாக புகார் தெரிவித்தார்.

    இதைய டுத்து போலீசார் முத்து லட்சுமி மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாமல்பட்டி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டிய அவரை கைது செய்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரு கிறார். இவரது மகள் பிரியங்கா (வயது22). இவருக்கும் ஊத்தங்கரை அடுத்துள்ள சாமல்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் கார்த்திக் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நித்தீஷ் குமார் என்ற மகன் உள்ளார்.

    கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் பிரியங்காவிடம் கூடுதலாக உங்கள் வீட்டில் இருந்து நகை வாங்கி கொண்டு வரவேண்டும் என்று கார்த்திக் கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு நடந்தது. 

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரியங்கா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8-ந்தேதி அன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டியதின் பேரில் கார்த்திக் மீது வழக்குபதிவு செய்து போலீசார் கடந்த 5-ந்தேதி அன்று கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர். 
    ×