search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband arrested"

    • கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • மனைவியை கொலை செய்த மதிமன்னன் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலஆவாரம்பட்டியை சேர்ந்தவர் மதிமன்னன் (வயது28). விவசாய கூலி தொழிலாளியான இவர் முதல் மனைவியை பிரிந்து 2-வதாக பாண்டிச்செல்வி (22) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இன்று காலை சமையல் செய்வது தொடர்பாக மதிமன்னவனுக்கும், பாண்டிச்செல்விக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

    2 பேருக்கும் கடும் வாக்குவாதம் முற்றவே பாண்டிச்செல்வி அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டார். அங்கு வந்த மதிமன்னன் மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மதிமன்னன் வீட்டின் பின்புற காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்த மனைவி பாண்டிச்செல்வியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    இதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மதிமன்னன் அங்கிருந்து தப்பினார்.

    கொலை குறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டிச் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மனைவியை கொலை செய்த மதிமன்னன் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
    • போலீசார் புதுப்பெண் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

    வடவள்ளி:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20).

    இவர் கோவை பேரூரில் உள்ள தமிழ்க்கல்லூரியில் பி.காம் சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அப்போது இவருக்கும், அதே கல்லூரியில் படித்த மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு காதல் ஏற்பட்டது.

    2 பேரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6-ந்தேதி வேளாங்கண்ணியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவருடன் அவரது வீட்டில் ரமணி வசித்து வந்தார்.

    இந்த நிலையில் 29-ந்தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காருண்யா நகர் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இதற்கிடையே பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பதால், அவரது சாவுக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பெண்ணின் உடலை பெற்றுக்கொண்டனர்.

    பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் பேரூர் டி.எஸ்.பி. ராஜ பாண்டியன் பெண்ணின் கணவர் சஞ்சய், அவரது தந்தை, தாய், ரமணியின் தந்தையிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

    சஞ்சயிடம் நடத்திய விசாரணையின் போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் அதிகரிக்கவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதையும், தனக்கு தாய், தந்தை உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

    போலீசாரிடம் சஞ்சய் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், ரமணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கல்லூரியில் படிக்கும் போதே, என்னுடன் படித்த மற்றொரு மாணவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    ரமணியை காதலித்த போதே, அந்த பெண்ணுடனும் பேசி வந்தேன். இந்த பழக்கம் திருமணத்திற்கும் பிறகும் நீடித்தது. அடிக்கடி அவருடன் நான் செல்போனில் பேசி வந்தேன்.

    இது முதலில் ரமணிக்கு தெரியாமல் இருந்தது. திருமணம் முடிந்த பின்னர் நான் செல்போனில் அடிக்கடி பேசுவதால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் நான் அந்த பெண்ணுடன் பேசுவதும் அவருக்கு தெரிந்து விட்டது. இதனை அவர் கண்டித்தார்.

    ஆனாலும் நான் தொடர்ந்து பேசி கொண்டிருந்தேன். இதனால் எங்களுக்கு திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நான், அந்த பெண்ணிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இதனை எனது மனைவி ரமணி பார்த்து விட்டார்.

    இதனால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், ரமணியை அடித்து உதைத்து, கழுத்தை பிடித்து நெரித்து கீழே தள்ளினேன்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத நான், வீட்டில் இருந்த அவரது துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை கட்டி இறுக்கினேன்.

    இதில் சிறிது நேரத்தில் ரமணி துடிதுடித்து இறந்து விட்டார். இதுகுறித்து எனது தாய், தந்தைக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினேன்.

    அவர்கள் வந்த பின்னர் இதில் இருந்து தப்பிப்பதற்காக 3 பேரும் சேர்ந்து ரமணி தற்கொலை செய்து கொண்டது போல காண்பிக்க திட்டமிட்டோம்.

    உடனே அவரை தூக்கி வைத்து துணிகளை கழற்றி விட்டு, வீட்டில் சமைப்பதற்கு வைத்திருந்த மஞ்சள் பொடியை எடுத்து ரமணியின் உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்தோம். பின்னர் மாற்று துணியை கட்டி விட்டு, ஏற்கனவே வீட்டில் இருந்த சாணிப்பவுடரை எடுத்து வாயில் ஊற்றினோம். இதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டார் என அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தோம்.

    அவர்களும் ஓடி வந்து, புளியை வாயில் கரைத்து ஊற்றினர். பின்னர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ரமணியை கொண்டு சென்றோம். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூறினர்.

    இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து சென்ற போது, ரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் இறந்து விட்டது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்தாலும் எதுவும் தெரியாதது போல காட்டி கொண்டோம்.

    போலீசார் விசாரித்த போதும், சாணிப்பவுடர் குடித்து விட்டார் என்றே தெரிவித்தோம். காயம் குறித்து கேட்டபோது மழுப்பலான பதிலேயே தெரிவித்து வந்தோம்.

    இருந்த போதிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதால் நான் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் புதுப்பெண் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் புதுப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்ததாக நாடகம் ஆடிய அவரது கணவர் சஞ்சய் மற்றும், அவருக்கு உடந்தையாக இருந்த சஞ்சயின் தந்தை லட்சுமணன், தாய் அம்முகுட்டி என்ற பக்ரு நிஷா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • குப்தாவின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையினர் ரூ.10 லட்சம் கேட்டனர்.
    • குப்தாவின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையினர் ரூ.10 லட்சம் கேட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லி, ரஜோரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குப்தா (வயது 71). இவரது மகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குப்தா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் முடிந்த பின்பு அந்த பெண் குப்தாவின் மகனை கவனிக்க மறுத்தார். மேலும் குடும்பத்திலும் பிரச்சினையை ஏற்படுத்தினார். இதனால் குப்தா மனம் உடைந்தார். அவர் 2-வது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

    இதற்காக 2-வது மனைவியிடம் பேச்சு நடத்திய போது அவர் குப்தாவுக்கு விவாகரத்து கொடுக்க தனக்கு ரூ.1 கோடி பணம் தரவேண்டும் என்றார். இதனை கேட்ட குப்தா ஆத்திரம் அடைந்தார்.

    இதையடுத்து குப்தா மனைவியை கொலை செய்து விட முடிவு செய்தார். இதற்காக கூலிப்படையை அமர்த்த ஏற்பாடு செய்தார். அதன்படி டெல்லியை சேர்ந்த விபின், ஹிமாண்டி ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்கள் குப்தாவின் மனைவியை கொலை செய்ய ரூ.10 லட்சம் கேட்டனர். அவர்களுக்கு முன்பணமாக ரூ. 2.40 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட கூலிப்படையினர், குப்தாவின் 2- வது மனைவியை கொலை செய்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குப்தாவை கைது செய்தனர். அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினர் விபின், ஹிமாண்டி ஆகியோரும் பிடிப்பட்டனர். அவரகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புக்கான சடாய் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பானுமதி (32). இவர்களுக்கு மதன்ராஜ், கார்த்திகேயன் என 2 மகன்கள் உள்ளனர்.

    பானுமதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை மகன்கள் இருவரும் டியூசன் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சேட்டு பானுமதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். மனைவி பிணத்தை வீட்டுக்குள் போட்டு விட்டு அவர் எதுவும் தெரியாதது போல் வெளியே சென்றுவிட்டார்.

    அவரது மகன்கள் டியூசன் விட்டு வீட்டிற்கு இரவு 7 மணி அளவில் வந்தனர். அப்போது பானுமதியை எழுப்ப முயன்றனர்.

    பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி பானுமதியின் கணவர் சேட்டுவிடம் விசாரணை நடத்தினார். அப்போது சேட்டு மனைவி உடல்நிலை சரியில்லாததால் தான் இறந்தார் என கூறினார்.

    மேலும் போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் சேட்டு மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகனுக்கும் ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • குடும்ப பிரச்சனையால் ஜெயந்தி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி சாவடி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). போளூர் அரசு ஆண்கள் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயந்தி (50), இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர்.

    முருகனுக்கும் ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் குடும்ப பிரச்சனையால் ஜெயந்தி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.

    அதிகாலையில் முருகன் கண்விழித்தார். அவர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி ஜெயந்தியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கினார். இதில் ஜெயந்தி துடிதுடித்து இறந்தார்.

    இதனையடுத்து முருகன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தார்.

    இது சம்பந்தமாக தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சரணடைந்துள்ள முருகனிடம் கடலாடி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

    • ஆலங்குளம் அருகே சாலைபுதூர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.
    • சுமதி கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்ததோடு அடிக்கடி சண்டை போடுவார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு சுமதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆலங்குளம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சுமதி நேற்று மாலை சாமி கும்பிட வந்துள்ளார். சிறிது நேரத்தில் கணவர் கண்ணனும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் வளாகத்தினுள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த ஊஞ்சல் கம்பியை எடுத்து சுமதியின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்ணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வாக்குமூலமாக கூறியதாவது:-

    நானும், எனது மனைவியும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் எனக்கு ஆலங்குளம் அருகே சாலைபுதூர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சுமதி, என்னிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்ததோடு, அடிக்கடி என்னிடம் சண்டை போடுவார்.

    ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை என்னுடன் வீட்டில் வைத்து சண்டை போட்டுவிட்டு சுமதி கோவிலுக்கு சென்றாள். அங்கு நானும் சென்று வாக்குவாதம் செய்தேன். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் நான் அவரை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கீழக்கரையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மது உசேன். இவரது மகள் லுத்துபியா பேகம் (வயது40). இவருக்கும் கீழக்கரை சொக்கநாதர் தெருைவ சேர்ந்த முகமது அப்துல் காதர் என்பவருக்கும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்தின்போது 41 பவுன் நகையும், ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் சீர் பொருட்களும் கொடுத்துள்ளனர். லுத்துபியா பேகம்-முகமது அப்துல் காதர் தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முகமது அப்துல் காதர் மனைவியிடம் அடிக்கடி பணம் வாங்கி வர சொல்லி துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் திருமணத்தின்போது போட்ட நகையையும் வாங்கி விற்றுள்ளார்.

    இருந்தபோதிலும் லுத்துபியா பேகத்தின் தந்தை மருமகனுக்கு ஒரு கடை வைத்து கொடுத்து, அதனை நடத்த ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். முகமது அப்துல் காதர் மனைவியிடம் இருந்து பறித்துக்கொண்டு மேலும் பணம் வாங்கி வர சொல்லி அடித்து துன்புறுத்தி உள்ளார்.

    கணவரின் சகோதரி களான ஜெசிமா என்ற தங்கராணி, மர்சூக்கா, கதிஜா பீவி ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாக சேர்ந்து வந்து லுத்துபியா பேகத்தை அடித்து மிரட்டி அவரது தந்தை கொடுத்த வீட்டை கணவருக்கு எழுதி வைக்கும்படி வற்புறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் லுத்துபியா பேகம் குடும்ப நலம் கருதி பொறுமையாக இருந்துள்ளார். அவருக்கு தந்தை கொடுத்த 11 சென்ட் நிலத்தை வற்புறுத்தி இனாம் செட்டில்மெண்ட் எழுதி வாங்கியுள்ளார். பின்பு அந்த இடத்தை மனைவிக்கு தெரியாமல் தனது சகோதரி ரகுமா பீவி என்பவருக்கு விற்றுள்ளார். இதுபற்றி அறிந்த லுத்துபியா பேகம் தட்டிக்கேட்டதால்அவரை உயிரோடு எரித்து விடுவதாக மிரட்டியுள்ளார்கள்.

    இது குறித்து கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லுத்துபியா பேகம் புகார் செய்தார். அதன்பேரில் கணவர் முகமது அப்துல் காதர், அவரது சகோதரிகள் ஜெஸிமா என்ற தங்கராணி, மர்சூக்கா, கதிஜா பீவி, ரகுமா பீவி மற்றும் சபீனா ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் காதரை கைது செய்தனர்.

    • ஜெய்சங்கர் தினமும் மது அருந்தி விட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • புனிதா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கி, சின்ன வரிக்கம் கிராமத்திலுள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அழிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 43), கட்டிட மேஸ்திரி மற்றும் அதே கிராமத்தில் கடப்பா கல் விற்கும் கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இவருடன் வாழாமல் பிரிந்து சென்றுவிட்டார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த புனிதா (32) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிவேதா (9) என்ற மகளும், நிதிஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

    ஜெய்சங்கர் தினமும் மது அருந்தி விட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் புனிதா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கி, சின்ன வரிக்கம் கிராமத்திலுள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஜெய்சங்கருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் புனிதா, ஜெய்சங்கரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார். பின்னர் குழந்தைகள் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

    இருப்பினும் ஜெய்சங்கருக்கு புனிதா நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் ஷூ கம்பெனிக்கு செல்ல பஸ்சிலிருந்து இறங்கி அழிஞ்சிக்குப்பம் மெயின் ரோட்டில் புனிதா நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மதுபோதையில் வந்த ஜெய்சங்கர் புனிதாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் தன்னிடம் இருந்த கத்தியால் புனிதாவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் புனிதா மயங்கி விழுந்தார்.

    இதில் உயிருக்கு போராடிய புனிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புனிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர். மேலும் போலீசார் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெய்சங்கர் அவரது மனைவியை கத்தியால் குத்தும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கைலாசம். இவரது மகன் ரமேஷ் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி (28) என்ற மனைவி உள்ளார்.
    • நேற்று இரவு சேலத்திற்கு வந்த ரமேஷ், விஜயலட்சுமியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தொட்டம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் கைலாசம். இவரது மகன் ரமேஷ் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகி விஜயலட்சுமி (28) என்ற மனைவி உள்ளார்.

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, விஜயலட்சுமி சேலம் சூரமங்கலம் அருகே ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு சேலத்திற்கு வந்த ரமேஷ், விஜயலட்சுமியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயலட்சுமியை வெட்டியுள்ளார்.

    இதில் லேசான காயத்துடன் தப்பிய விஜயலட்சுமி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பெயரில் சூரமங்கலம் போலீசார், வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பண்ருட்டி அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவன் கைது செய்யப்பட்டார்.
    • இதுபற்றி ஆர்.டி.ஓ. நேரடியாக விசாரணை நடத்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பலா ப்பட்டு இடையர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ். (வயது 29). இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு புதுவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது காயத்ரி என்ற பெண்ணை காதலி த்து திருமணம் செய்தார். அதன்பின்னர் தனது சொந்த ஊருக்கு வந்து டீக்கடை நடத்தி வருகிறார்.அப்போது முருகதாஸ்சுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

    இந்த விவகாரம் காயத்ரிக்கு தெரியவந்தது. இதனால் அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு வெடித்தது. இதில் மனமுடைந்த காயத்ரி தற்கொலை செய்தார். இது தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்தனர். இதுபற்றி ஆர்.டி.ஓ. நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையில் முருக தாஸ் தற்கொலைக்கு தூண்டியதால்தான் காயத்ரி இறந்து இருப்பது தெரியவந்தது. எனவே அதன்பேரில் வழக்குபதிந்து முருகதாசை போலீசார் கைது செய்தனர்.

    • நேற்று இரவு மது போதையில் வந்த வேலாயுதம் மனைவி ரேவதியுடன் மோதலில் ஈடுபட்டார்.
    • ஆத்திரம் அடைந்த வேலாயுதம் மனைவியை தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதினார்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு, அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (48). இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். வேலாயுதத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினந்தோறும் மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் வேலாயுதத்தை அம்பத்தூர் அருகில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரேவதி சேர்த்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து வேலாயுதம் வீட்டிற்கு வந்தார். அப்போது முதல் வேலாயுதம் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து பழி வாங்குவதாக கூறிவந்தார்.

    நேற்று இரவும் மது போதையில் வந்த வேலாயுதம் இதுதொடர்பாக மனைவி ரேவதியுடன் மோதலில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த வேலாயுதம் மனைவியை தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த ரேவதி அங்கேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரேவதியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக மதுபோதையில் இருந்த வேலாயுதத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனியார் மில்லில் வேலை செய்யும் தனபால் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நந்தினி வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை தாழ் போட்டுக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பாட்டப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). இவரது மகள் நந்தினி (32).

    இவரை சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் தனபால்( 36) என்பவருக்கு கடந்த 2017 -ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த தம்பதி தாதகாப்பட்டி திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு நித்திகா ஸ்ரீ (3), ஸ்ரீ சுதர்சன் ( 2) ஆகிய குழந்தைகள் உள்ளன.ஒரு தனியார் மில்லில் வேலை செய்யும் தனபால் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி குழந்தைகளுக்கு குலதெய்வம் கோயிலில் மொட்டை அடிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்று காலை தனபால் மது குடித்துவிட்டு நந்தினியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் .

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நந்தினி வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை தாழ் போட்டுக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறியாத தனபால் , மனைவி கோபத்தில் அறைக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டார்.

    மிக நேரம் ஆகியும் நந்தினி கதவை திறக்காததால் தனபால் அருகில் உள்ள உறவினர்களை அழைத்ததன் பேரில் அவர்கள் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது நந்தினி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.உடனடியாக நந்தினியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நந்தினி யின் தந்தை சண்முகம் கொடுத்த புகார் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினி உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் சேலம் சப் கலெக்டர் விஷ்ணுவர்தினி மற்றும் அன்னதானப்பட்டி உதவி கமிஷனர் அசோகன் ஆகியோர் விசாரணை நடத்தியதில் நந்தினி யின் தற்கொலைக்கு கணவர் தனபால் தான் காரணம் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சந்தேக மரணமாக(174) பதியப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டியதாக (306) மாற்றப்பட்டு நேற்று நந்தினியின் கணவர் தனபாலை அதிரடியாக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×