search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் கொலை"

    • கணவர் தன்னை துன்புறுத்தி வருவதாக சிரஞ்சீவியிடம் உமா தெரிவித்தார்
    • கணவர் காணாமல் போனதாக எலமஞ்சி போலீசில் உமா புகார் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், எஸ் ராயவரத்தை சேர்ந்தவர் கொண்டல ராவ் (வயது 49). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் காக்கிநாடாவில் பெண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ், பேக் உள்ளிட்டவை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிரஞ்சீவி கடைக்கு சென்ற உமாவுக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. கணவரிடம் சிரஞ்சீவி தனது தூரத்து உறவினர் என அறிமுகம் செய்து வைத்தார்.

    சிரஞ்சீவியும் உமாவும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கொண்டல ராவுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கொண்டல ராவ் மனைவியை துன்புறுத்தி வந்தார்.

    கணவர் தன்னை துன்புறுத்தி வருவதாக சிரஞ்சீவியிடம் உமா தெரிவித்தார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று கொண்டலராவை காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி காரில் அழைத்துச் சென்றார்.

    சிகிச்சை முடிந்து மறுநாள் இரவு காரில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர். ராகில கொத்தூர் என்ற இடத்தில் வந்தபோது தயாராக இருந்த சிரஞ்சீவி மற்றும் அவரது நண்பர் சைதுர்கா ஆகியோர் காரை நிறுத்தினர். அவர்களுடன் உமாவும் சேர்ந்து கொண்டலராவை கழுத்து இறுக்கி கொலை செய்தனர்.

    பின்னர் ராவுல பாலம் அருகே உள்ள கோதாவரி ஆற்றில் கொண்டலராவின் பிணத்தை வீசினர். கணவர் காணாமல் போனதாக எலமஞ்சி போலீசில் உமா புகார் செய்தார்.

    கொண்டலராவின் உறவினர்கள் உமா, சிரஞ்சீவி என்பருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும் அவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தனர். போலீசார் சிரஞ்சீவியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிரஞ்சீவி கொண்டலராவை அவரது மனைவியுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து உமா, அவரது கள்ளக்காதலன் சிரஞ்சீவி, அவரது நண்பர் சைதுர்கா ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது.
    • கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வாணியன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ் (வயது 30). குடிப்பழக்கத்துக்கு ஆளான இவர் கடந்த 11-ந்தேதி மர்மமான முறையில் வீட்டில் உள்ள படுக்கை அறையில் இறந்து கிடந்தார்.

    இது தொடர்பாக வெங்கல் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ரமேஷ் மூச்சு திணறி உயிரிழந்ததற்கான தடயங்கள் இருந்தது. இதனால் ரமேஷ் மனைவி தங்கலட்சுமி (27) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவரை பிடித்து போலீசார் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது கணவன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தகராறு செய்தார். ஆத்திரம் அடைந்து தனது கணவரை முகத்தில் தலையணையால் அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    போலீசார் தங்கலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் தங்கலட்சுமியை போலீசார் புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    • சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்ற பிரபாகரனை, அவரது மனைவி தடுத்தார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து சாந்தகுமாரியை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு ஸ்ரீகிருஷ்ணபுரம் கடம்பழி புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன். இவரது மனைவி சாந்தகுமாரி. வயதான தம்பதிகளான இவர்கள் தனியாக வசித்து வந்துள்ளனர். பிரபாகரன் நோய் பாதித்து வீட்டில் இருந்து வந்தார். அவரை வீட்டை விட்டு வெளியே செல்லாமல் மனைவி கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்ற பிரபாகரனை, அவரது மனைவி தடுத்தார். அவரிடம் தகராறு செய்தது மட்டுமின்றி முரட்டுதனமாக நடந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மூதாட்டி சாந்தகுமாரி, துணியால் பிரபாகரனின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சாந்தகுமாரியை கைது செய்தனர்.

    • இருந்தபோதிலும் பிள்ளைகளின் நலன் கருதி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
    • சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சிந்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகராஜா (வயது 27). அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (25). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே மனைவியின் நடத்தை மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கற்பகராஜா, விஜயலட்சுமி ஆகிய இருவரும் சிந்தப்பள்ளி கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர்.

    இருந்தபோதிலும் பிள்ளைகளின் நலன் கருதி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று அவர்களது உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதேபோல் இருவரும் சேர்ந்து வாழ்வோம் எனக்கூறி கற்பகராஜா விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்று தினமும் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவும் கற்பகராஜா மதுபோதையில், விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று காலை கற்பகராஜா, மனைவி விஜயலட்சுமியின் வீட்டில் மர்மமான முறையில் கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தூர் டவுன் போலீசார் கற்பகராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு சாத்தூர் டி.எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தூர் டவுன் போலீசார் கற்பக ராஜாவின் மனைவி விஜயலட்சுமி மற்றும் மாமியார் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் துருவி துருவி விசாரித்தனர்.

    அப்போது விஜயலட்சுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து அடித்து துன்புறுத்தியதால் கணவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். பின்னர் மதுவாங்கி வைத்துக் கொண்டு அவரை சமாதானம் பேச அழைத்து அவருக்கு மதுவை அதிகமாக ஊற்றிக்கொடுத்தோம். கற்பகராஜூக்கு போதை தலைக்கேறியதும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தோம். அதற்கு உதவியாக அவருக்கு சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை, அவரது கணவர் இருந்தனர்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கணவனை கொன்ற விஜயலட்சுமி (25), அவரது தாயார் பழனியம்மாள் (48), திருநங்கை ஸ்வீட்டி (25), இவரது கணவர் வேலாயுதம் (25) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தகாத உறவு கணவருக்கு தெரிந்து விட்டதால், அவரை தீர்த்துக் கட்ட கள்ளக்காதலன் தினேஷ், வித்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன்.
    • கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தோழி வித்யா, கள்ளக்காதலன் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள மலையாம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர ராஜ் ( 32). நெசவு தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (27). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான்.

    கடந்த 17-ந்தேதி சுந்தர ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக அவரது தந்தை அர்த்த நாரீஸ்வரர் என்பவர் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சுந்தரராஜ் கழுத்தில் காயம் இருந்தது. இதனால் அவருடைய மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரை தனி அறையில் வைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த கள்ளக்காதலன் தினேஷ் (24) என்பவருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்து நாடகமாடியது அம்பலமானது. உடனே போலீசார் நிவேதாவை கைது செய்தனர்.

    மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தோழி வித்யா (27), கள்ளக்காதலன் தினேஷ் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 3 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

    இதில் நிவேதா போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் சுந்தர ராஜ் பெங்களூருவில் வேலை பார்த்தபோது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சொந்த ஊரிலேயே தறித்தொழில் செய்து வந்தார்.

    அவர், பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்ததும் நான் ஜலகண்டாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை பணியில் சேர்ந்தேன். அப்போது பள்ளி தோழி வித்யா அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவர் மூலம் எனக்கு தறி தொழிலாளி தினேஷ் அறிமுகமானார்.

    பின்னர் நானும், தினேசும் செல்போனில் பேசி நெருக்கமானோம். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து அவருடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தேன்.

    ஒரு கட்டத்தில் எங்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது. இதை அறிந்த எனது கணவர் சுந்தரராஜ், என்னை கண்டித்து செல்போனை பறித்துக் கொண்டார்.

    எங்களது இந்த தகாத உறவு கணவருக்கு தெரிந்து விட்டதால், அவரை தீர்த்துக் கட்ட கள்ளக்காதலன் தினேஷ், வித்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன்.

    இந்த நிலையில் ஆடி 1-ந் தேதி மாமனார், மாமியார் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இது எங்களுக்கு சாதகமாக இருந்தது. சம்பவத்தன்று இரவு சுந்தரராஜிக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து தூங்க வைத்தேன். பின்னர் கள்ளக்காதலன் தினேசை வீட்டிற்கு வரவழைத்தேன். அவர் வந்ததும், சுந்தரராஜ் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்து விட்டு, தற்கொலை செய்தது போல் தூக்கில் கட்டி தொங்கவிட்டோம்.

    இதையடுத்து நான் அதிகாலை 4 மணிக்கு மாமனாருக்கு போன் செய்து சுந்தரராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதாக கூறினேன். மேலும் யாருக்கும் சந்தேகம் வராதபடி இதை நம்ப வைத்து நாடகம் ஆடினேன்.

    மேலும் தகவல் அறிந்து பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ஊருக்கு வந்த மாமனார்-மாமியாரும் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் மகன் சாவில் சந்தேகம் இல்லை என புகார் கொடுத்தனர்.

    ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை எங்களை காட்டிக் கொடுத்து விட்டது. சுந்தரராஜ் மூச்சு திணறி இறந்துள்ளதும், அவர் கழுத்து இறுகாமல் தூக்கில் தொங்கியதும், இது கொலை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக எங்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் நானும், கள்ளக்காதலனும், பள்ளி தோழியும் போலீசில் மாட்டிக்கொண்டோம்.

    இவ்வாறு நிவேதா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கைதான ஆசிரியை நிவேதா, கள்ளக்காதலன் தினேஷ், தோழி ஆசிரியை வித்யா ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    • கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த இளம்பெண் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • மனைவியை கொலை செய்த மதிமன்னன் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலஆவாரம்பட்டியை சேர்ந்தவர் மதிமன்னன் (வயது28). விவசாய கூலி தொழிலாளியான இவர் முதல் மனைவியை பிரிந்து 2-வதாக பாண்டிச்செல்வி (22) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இன்று காலை சமையல் செய்வது தொடர்பாக மதிமன்னவனுக்கும், பாண்டிச்செல்விக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

    2 பேருக்கும் கடும் வாக்குவாதம் முற்றவே பாண்டிச்செல்வி அருகில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டார். அங்கு வந்த மதிமன்னன் மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த மதிமன்னன் வீட்டின் பின்புற காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றார். பின்னர் அங்கிருந்த மனைவி பாண்டிச்செல்வியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    இதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மதிமன்னன் அங்கிருந்து தப்பினார்.

    கொலை குறித்து தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டிச் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மனைவியை கொலை செய்த மதிமன்னன் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • கொலையை மறைக்க உத்தராவே உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் புருலியாவை சேர்ந்தவர் ஜூடான் மகாதோ. இவரது மனைவி உத்தரா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    ஜூடான் மகாதோ கடந்த சில வாரங்களாக வீட்டிற்கு வரவில்லை. இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களிலும் தேடினர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது மகனும் தந்தையை பல இடங்களில் தேடினார்.

    அப்போது வீட்டுக்கு வெளியே தந்தையின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டார். அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஜூடான் மகாதோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில் ஜூடான் மகாதோவின் மனைவி உத்தரா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த சேத்திரபால் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. எனவே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

    இதில் கணவர் ஜூடான் மகாதோவை அவரது மனைவி உத்தராவே கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் கொலையை மறைக்க அவர் உப்பை தூவி தடயங்களை அழித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது, உத்தராவுக்கும் சேத்திரபாலுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது. இதனை அறிந்த ஜூடான் மகாதோ மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த உத்தரா, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க இடைஞ்சலாக இருந்த கணவரை கொல்ல முடிவு செய்துள்ளார்.

    இதையடுத்து கள்ளக்காதலன் துணையுடன் கணவர் ஜூடான் மகாதோவை கொலை செய்து பிணத்தை வெளியே வீசியுள்ளார். அதன்பின்பு ஜார்கண்ட் மாநிலம் சென்று அங்கு கள்ளக்காதலனுடன் வாழ்க்கை தொடர முடிவு செய்துள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் சிக்கி கொண்டார்.

    இதையடுத்து போலீசார் உத்தராவை கைது செய்தனர். மேலும் ஜார்கண்டில் பதுங்கி இருந்த அவரது கள்ளக்காதலன் சேத்திரபாலுவும் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்காளத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி, மாமியார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). இவரது மனைவி டயானா மேரி (வயது 22). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

    ஆட்டோ டிரைவரான செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை.

    இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம், கோபித்துக் கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு திரும்ப செல்லவில்லை. உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் அதனை டயானா மேரி ஏற்கவில்லை.

    இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் மனைவியைத் தேடி மாமியார் வீட்டுக்குச் சென்றார். அப்போது டயானா மேரியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு மூண்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், மனைவி டயானா மேரியை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர் வீட்டில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரை எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் கணவர் மீது ஊற்றிவிட்டார்.

    இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் அலறி துடித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் செல்வராஜ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மனைவி ஊற்றிய சுடுநீர் அவரது அடிவயிற்றில் பட்டு ஆழமான காயம் ஏற்பட்டதால் கிட்னி பாதித்து இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி டயானா மேரி, மாமியார் இன்னாசியம்மாள் (43) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து கணவருக்கு வினோதினி சிகிச்சை அளித்துள்ளார்.
    • ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை அழைத்து சென்றார்.

    சென்னை:

    சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தர் வேல்முருகன். கட்டிட தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்தக்கு அடிமையானார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வந்து மனைவி வினோதினியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வேல்முருகனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    வயிற்றில் இடது புறத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனின் வயிற்றில் இருந்து ரத்தம் வெளியேறியது.

    ஆத்திரத்தில் கணவரை கத்தியால் குத்திய நிலையில் அதன் பின்னர் போலீசுக்கு பயந்து சிகிச்சைக்காக வெளியில் எங்கும் அழைத்துச் செல்லவில்லை.

    இதனால் 2 நாட்களாக வீட்டிலேயே வைத்து கணவருக்கு வினோதினி சிகிச்சை அளித்துள்ளார். இதில் ரத்தம் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கணவரை அழைத்து சென்றார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி ஆஸ்பத்திரியில் இருந்து விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வினோதினியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கணவர் குடித்து விட்டு வந்து தனக்கு தானே கத்தியால் குத்திக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் போலீசார் நடத்திய விசாரணைக்கு பிறகு கணவரை கத்தியால் குத்தி கொலை செய்ததை வினோதினி ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பரபரப்பான வாக்குமூலம் வருமாறு:-

    கணவர் வேல்முருகன், குடித்து விட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறு செய்வார். தற்போதும் அது போன்று குடித்து விட்டு வந்தவர் என்னைப் பற்றி தவறாக பேசி அடித்து உதைத்தார். அப்போது அவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு கடுமையான வார்த்தைகளால் திட்டி தாக்கினார். ஏன் இப்படி குடித்து விட்டு வந்து பேசுகிறீர்கள் என்று நான் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. என்னை தாக்குவதையும் நிறுத்தவில்லை.

    இதனால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன். இதில் அவரது உடலில் இருந்து ரத்தம் அதிக அளவில் வெளியேறியது.

    இதனால் கணவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு என்னிடம் கூறினார். ஆனால் நான் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் மருந்து கடையில் மருந்து வாங்கி வந்து சிகிச்சை அளித்தேன். ஆனால் கணவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் மயக்க நிலைக்கு சென்றார். இதனால் பயந்து போய் அவரே கத்தியால் குத்திக்கொண்டதாக நாடகம் ஆடினேன்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது போலீசில் சிக்கி கொண் டேன். ஆஸ்பத்திரியில் எனது கணவரை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதேன். இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு வினோதினி வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பலத்த காயம் அடைந்து இருந்த வேல்முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம், மதியழகன் நகர் கே.கே சாலையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது40) கட்டிட கூலி தொழிலாளி. இவரது மனைவி வினோதினி, வீட்டு வேலை பார்த்து வருகிறார்.

    வேல்முருகன் தினசரி பணி முடிந்து இரவு மது குடித்துவிட்டு வந்து வினோதினியிடம் ரகளையில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி மதுபோதையில் வீடு திரும்பிய வேல்முருகனை வினோதினி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோதினி அருகில் கிடந்த காய்கறி வெட்டும் கத்தியால் வேல்முருகனை சரமாரியாக குத்தினார்.

    இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த வேல்முருகனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் வைத்து வினோதினி சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் பலத்த காயம் அடைந்து இருந்த வேல்முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரை வினோதினி ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றார். மேலும் அங்கிருந்த டாக்டர்களிடம் வேல்முருகன் மதுபோதையில் தானாகவே கத்தியால் குத்தி கொண்டார் என்றும் வினோதினி கூறினார். ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த டாக்டர்கள் உடனடியாக இதுபற்றி விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் வினோதினியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். அப்போது வேல்முருகனை கத்தியால் குத்தி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து வினோதினி போலீசாரிடம் கூறியதாவது:- கணவர் வேல்முருகன் தினசரி மது குடித்துவிட்டு வீட்டை அசுத்தம் செய்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்தார்.

    இதனால் விரக்தி அடைந்த நான் கணவரை கத்தியால் குத்தினேன். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் அவரது அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.

    மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கணவரை சிகிச்சைக்கு அழைத்து சென்றால் விஷயம் வெளியே தெரிந்து சிக்கிவிடுவோம் என்பதால் வீட்டிலேயே வைத்து நானே சிகிச்சை அளித்தேன். ஆனால் அதிக ரத்தம் வெளியேறி வந்ததால் கணவர் வேல்முருகன் உயிரிழந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் ரங்கன் தினசரி மது குடித்து விட்டு வந்தார்.
    • கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த கோகுல ஈஸ்வரி அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

    குனியமுத்தூர்:

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ரங்கன் (வயது 34). எலக்ட்ரீசியன்.

    இவரது மனைவி கோகுல ஈஸ்வரி (31). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கோகுல ஈஸ்வரி அந்த பகுதியில் உள்ள மரக்கடையில் வேலை செய்து வருகிறார்.

    ரங்கனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பும் ரங்கன் தினசரி மது குடித்து விட்டு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் வெளியே சென்ற ரங்கன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் போதையில் மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் கணவர் மீது கோகுல ஈஸ்வரிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    பின்னர் ரங்கன் குடிபோதையில் வீட்டில் படுத்து தூங்கினார். கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த கோகுல ஈஸ்வரி அவரை கொலை செய்ய முடிவு செய்தார். நள்ளிரவு 11.30 மணிக்கு வீட்டுக்கு வெளியே கிடந்த பெரிய கல்லை எடுத்து வந்து அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த ரங்கனின் தலையில் போட்டார்.

    இதனால் ரங்கன் சத்தம் போட்டு அலறினார். அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து பார்த்தனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ரங்கனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரங்கன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கோகுல ஈஸ்வரியை கைது செய்தனர்.

    தினமும் குடித்து விட்டு வந்து என்னிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரத்தில் ரங்கனை கொலை செய்ததாக கோகுலஈஸ்வரி தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விசாரணைக்கு பின் கோகுலஈஸ்வரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.

    • திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார்.
    • கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூர் கடற்கரையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனைவி வினோதினியுடன் கடற்கரைக்கு சென்றிருந்த என்ஜினீயர் கதிரவன் கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நானும், கணவர் கதிரவனும் கண்ணை கட்டிக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம்.

    கணவரின் கண்ணை கட்டி விளையாடியபோது வழிப்பறி கொள்ளையர்கள் அவரை தாக்கியதுடன் எனது தாலி செயினையும் பறித்துச்சென்றுவிட்டனர் என்று தெரிவித்தார்.

    வினோதினியின் செயல்பாடுகள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கதிரவனை, வினோதினிக்கு தெரிந்த நபரே வந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    அந்த நபர் வினோதினியின் காதலனான அந்தோனி ஜெகன் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு வினோதினி வழிப்பறி நாடகம் ஆடியது அம்பலமானது.

    இதுதொடர்பாக போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் வினோதினியின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்பது தெரியவந்தது. வினோதினியும், அந்தோனி ஜெகனும் காதலித்து வந்த நிலையில் கதிரவன், வினோதினியை திருமணம் செய்துள்ளார். இவரது ஊர் தூத்துக்குடி ஆகும். காதலன் அந்தோனி ஜெகன் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர்.

    திருமணத்துக்கு பிறகு வினோதினி கணவர் கதிரவனுடன் சென்னையில் குடியேறிய பிறகும் அந்தோனி ஜெகனின் காதலை தொடர்ந்துள்ளார். அப்போதுதான் கணவரை கொலை செய்துவிட்டு காதலனுடன் சேர்ந்துவிடலாம் என வினோதினி திட்டம் போட்டார். இதற்காகவே திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளனர்.

    இந்த வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வினோதினி, அந்தோனி ஜெகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கொலை வழக்கில் திருவான்மியூர் போலீசார் கேமரா காட்சி ஆவணங்களை முறையாக தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையிலேயே இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×