search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளின் தாய் தற்கொலை- கணவர் கைது
    X

    தற்கொலை செய்து கொண்ட நந்தினியையும், கைது செய்யப்பட்ட தனபாலையும் படத்தில் காணலாம்.

    2 குழந்தைகளின் தாய் தற்கொலை- கணவர் கைது

    • தனியார் மில்லில் வேலை செய்யும் தனபால் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நந்தினி வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை தாழ் போட்டுக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பாட்டப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). இவரது மகள் நந்தினி (32).

    இவரை சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் தனபால்( 36) என்பவருக்கு கடந்த 2017 -ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த தம்பதி தாதகாப்பட்டி திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு நித்திகா ஸ்ரீ (3), ஸ்ரீ சுதர்சன் ( 2) ஆகிய குழந்தைகள் உள்ளன.ஒரு தனியார் மில்லில் வேலை செய்யும் தனபால் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி குழந்தைகளுக்கு குலதெய்வம் கோயிலில் மொட்டை அடிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்று காலை தனபால் மது குடித்துவிட்டு நந்தினியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் .

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நந்தினி வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை தாழ் போட்டுக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறியாத தனபால் , மனைவி கோபத்தில் அறைக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டார்.

    மிக நேரம் ஆகியும் நந்தினி கதவை திறக்காததால் தனபால் அருகில் உள்ள உறவினர்களை அழைத்ததன் பேரில் அவர்கள் வந்து கதவை உடைத்து திறந்து பார்த்தபோது நந்தினி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.உடனடியாக நந்தினியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நந்தினி யின் தந்தை சண்முகம் கொடுத்த புகார் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தினி உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் சேலம் சப் கலெக்டர் விஷ்ணுவர்தினி மற்றும் அன்னதானப்பட்டி உதவி கமிஷனர் அசோகன் ஆகியோர் விசாரணை நடத்தியதில் நந்தினி யின் தற்கொலைக்கு கணவர் தனபால் தான் காரணம் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சந்தேக மரணமாக(174) பதியப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டியதாக (306) மாற்றப்பட்டு நேற்று நந்தினியின் கணவர் தனபாலை அதிரடியாக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×