என் மலர்

    நீங்கள் தேடியது "Wife attack"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.
    • கடந்த 16-ந்தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மனைவியை திலீப் கொடூரமாக தாக்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த மலையின்கீழ் பகுதியை சேர்ந்தவர் திலீப்.

    இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 16-ந்தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மனைவியை திலீப் கொடூரமாக தாக்கினார்.

    அதனை அவரே செல்போனில் படம் எடுத்தார். அந்த வீடியோவில் மனைவியை நான்தான் தாக்கினேன், அவரது முகத்தில் வழியும் ரத்தத்திற்கு நான் தான் காரணம். அவள் இனி வேலைக்கு செல்லமாட்டாள் என்று கூறி மீண்டும் அவரை சரமாரியாக அடித்து உதைக்கிறார்.

    இந்த காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் பரவியது. இதனை பார்த்த பலரும் திலீப்பை கண்டித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் திலீப்பின் மனைவி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதில் குடிபோதையில் தனது கணவர் அடித்து உதைத்ததாகவும், குடும்ப செலவுக்கு பணம் தராமல் சித்ரவதை செய்வதாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திலீப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    செல்போனில் பேசுவது குறித்து ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    ராமாபுரம் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர். வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஓட்டலில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா (23) தனியார் மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    சவுந்தர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சவுந்தர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியாவை பிரிந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி இரவு சந்தியா வேலைக்கு சென்று விட்டு செல்போனில் பேசியபடியே வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தியாவை வழிமறித்த சவுந்தர் “யாருடன் போனில் பேசுகிறாய்” என்று கேட்டு சந்தியாவின் செல்போனை பறிக்க முயன்றார்.

    அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சவுந்தர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் சத்தியாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    வயிறு, கழுத்து, மார்பு உள்ளிட்ட 5 இடங்களில் கத்திக்குத்து பட்டு படுகாயமடைந்த சந்தியா ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரை கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அ.தி.மு.க. பிரமுகரை மனைவியே சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர்:

    அ.தி.மு.க. பிரமுகரை மனைவியே சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூரில் இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    திருவாரூர் அகரநல்லூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 35). இவர் அப்பகுதி அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி சித்ரா (30). இவர்களுக்கு பிரவீன்குமார்(9), மதன் குமார் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ரவி தினமும் மதுகுடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

    இதேபோல் நேற்று இரவும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இரவு நீண்டநேரமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை முற்றியது. பின்னர் ரவி தூங்கி விட்டார்.

    இந்த நிலையில் கணவர் மீது சித்ரா கடும் ஆத்திரத்தில் இருந்தார். இதனால் தன்னிடம் தொடர்ந்து தகராறு செய்து வரும் கணவரை கொலை செய்து விட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

    இன்று அதிகாலையில் வீட்டில் ரவி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து ரவியின் தலையில் சித்ரா, சுத்தியால் ஓங்கி அடித்தார். கடும் ஆத்திரத்தில் இருந்த அவர் பலமுறை சுத்தியால் தாக்கியதால் ரவி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் ரவியை கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியலுடன் திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சித்ரா சரண் அடைந்தார். அப்போது போலீசாரிடம், தனது கணவரை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார்.

    இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கொலை நடந்த இடத்துக்கு போலீசார் சென்று ரவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சித்ராவை கைது செய்தனர்.

    அ.தி.மு.க. பிரமுகரை மனைவியே சுத்தியால் அடித்து கொன்ற சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெட்டப்பாக்கம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குழவி கல்லால் தாக்கிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அருகே சூரமங்கலம் காலனி புதுநகரை சேர்ந்தவர் ராஜ்கிரண் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். கஸ்தூரி திருவாண்டார் கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையே கஸ்தூரியின் நடத்தையில் ராஜ்கிரண் சந்தேகம் அடைந்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

    அதுபோல் நேற்றும் இது தொடர்பாக அவர்களுக் கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்கிரண் வீட்டில் இஞ்சி, பூண்டு இடிக்க பயன்படுத்தும் குழவி கல்லை எடுத்து கஸ்தூரியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்தம் பீறிட்டு கஸ்தூரி மயங்கி விழுந்தார். உடனடியாக கஸ்தூரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமல்குமார் வழக்குபதிவு செய்து ராஜ்கிரனை கைது செய்தார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்ரீபெரும்புதூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை ஓடஓட வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பள்ளமொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (35). மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி ஆதிலட்சுமி (30).

    கண்ணன்-ஆதிலட்சுமி தம்பதிக்கு சாருமதி (10) என்ற மகளும், வெற்றிவேல் (5) என்ற மகனும் உள்ளனர். கண்ணனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சாருமதி ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவி நடத்தையில் கண்ணன் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இன்று காலை கண்ணனும், ஆதிலட்சுமியும் வேலைக்கு புறப்பட்டனர். அப்போது மனைவியை கண்ணன் திட்டினார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், அவரது மனைவி ஆதிலட்சுமியை தன்னிடம் இருந்த மரம் வெட்டும் கத்தியால் வெட்டினார். ரத்தம் சொட்டச் சொட்ட அலறிய படி ஆதிலட்சுமி அங்கிருந்து ஓடினார். அவரை ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டினார்.

    ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆதிலட்சுமி ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சுங்குவார்சத்திரம் போலீசார் கண்ணனை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கும்மிடிப்பூண்டி அருகே மனைவியை வீட்டில் சிறைவைத்து தாக்கிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப் பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் உமர் அலி பருக். துணி வியாபாரி. இவரது மனைவி ஷாகிரா பானு. இவர் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கணவர் உமர் அலி பருக் மீது புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கணவர் தினமும் குடித்து விட்டு வந்து என்னை கடந்த 4-ந் தேதி இரவு அசிங்கமாக பேசி கையால் எனது வாயின் மீது குத்தினார். இதனால் எனது வாயில் இருந்து 5 பற்களும் உடைந்து விட்டன. வலி தாங்க முடியாமல் துடிதுடித்தேன்.

    சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டி சட்ட விரோதமாக வீட்டில் அடைத்து வைத்து அவர் கொடுமைப் படுத்தினார்.

    அவரது பிடியில் இருந்து தப்பிய நான், சென்னை ராயபுரத்தில் உள்ள எனது அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டேன். என்னை காயப்படுத்தி மிரட்டி கொடுமைப்படுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உமர் அலி பருக்கை கைது செய்தார். காயம் அடைந்த ஷாகிரா பானு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்ரீமுஷ்ணம் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவனை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38) தொழிலாளி. இவரது மனைவி சரளா(32). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. ஆறுமுகம் தனது மனைவியுடன் வடக்கு பாளையங்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.

    குழந்தை இல்லாத விரக்தியில் ஆறுமுகம் தனது மனைவி சரளாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு அவர்களுக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஆறுமுகம் ஆத்திரம் அடைந்து சரளாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் சரளா பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சோழத்தரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விருதுநகரில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கருப்பன் (வயது 36). சிவகாசியில் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரது 2-வது மனைவி கவிதா (28). இவரும் ஏற்கனவே திருமணமானவர்.

    இந்த நிலையில் கவிதாவின் தங்கை கலைச்செல்விக்கும், கருப்பனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதில் கலைச்செல்விக்கு குழந்தை பிறந்தது.

    இதுபற்றி கணவரிடம் கவிதா கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கருப்பன் தாக்கியதில் காயம் அடைந்ததாக விருதுநகர் மேற்கு போலீசில் கவிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பனை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எடப்பாடி அருகே மனைவியிடம் அடி தாங்க முடியாமல் கதறி அழுத ஐஸ் வியாபாரி அரசு ஆஸ்பத்திரி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    எடப்பாடி:

    எடப்பாடி அருகே உள்ள அரசிராமணி ஊராட்சிக்கு உட்பட்ட மோளக்கவுண்டன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (44).

    ஐஸ் வியாபாரியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 4-வதாக தமிழரசி (38) என்ற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது அவருடன் மோளக்கவுண்டன் கொட்டாய் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் அண்ணாமலை சரியாக வியாபாரத்திற்கு செல்லாமல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழரசி மற்றும் அவரது உறவினர்கள் அண்ணாமலையை கண்டித்தனர். நேற்று முன்தினம் அதிகாலை அண்ணாமலைக்கும் அவரது மனைவி தமிழரசிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அண்ணாமலையை அவரது மனைவியும், உறவினர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அண்ணாமலை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அப்போது அண்ணாமலை தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை போலீசாரிடம் புகாராக தெரிவிக்க வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களிடம் கூறினார். அவரை பார்க்க வந்த மனைவி தமிழரசி மற்றும் அவரது தாயார், அண்ணாமலையை சமாதானம் செய்தனர். இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ளலாம் போலீசில் புகார் வேண்டாம் எனவும் கேட்டு கொண்டனர்.


    அதில் சமாதானம் அடையாத அண்ணாமலை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் திடீரென ஆஸ்பத்திரி கட்டிடத்தின் மீது ஏறினார்.

    அப்போது மனைவி மற்றும் அவரது உறவினர்களின் அடியை என்னால் தாங்க முடியவில்லை, இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கதறினார். இதை பார்த்த அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அண்ணாமலையிடம் நைசாக பேசியபடி, மருத்துவமனை கட்டிடத்தின் மீது ஏறி அவரை மீட்க முயற்சித்தனர்.


    அப்போது அவர் தீயணைப்பு வீரர்களிடம் சார் என்னால் அடி தாங்க முடியவில்லை என்னை விட்டுவிடுங்கள், நான் செத்து விடுகிறேன் என கண்ணீர் மல்க கெஞ்சிய காட்சி காண்போரை கலங்க வைத்தது.

    அண்ணாமலையை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவரை சமாதானம் செய்து மருத்துவமனையின் பாதுகாப்பான இடத்தில் தொடர் சிகிச்சைக்காக விட்டுச்சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விருத்தாசலம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கூனங்குறிச்சியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(38). இவரது மனைவி ரேக்கா(30). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சவுந்தரராஜனுக்கும் ரேக்காவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 11.6.2012 அன்று ரேக்கா தன் கணவரிடம் கோபித்துக்கொண்டு விருத்தாசலம் சித்தலூரில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். அங்கு சென்ற சவுந்தரராஜன் கத்தியால் ரேக்காவின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ரேக்கா விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்றார்.

    இந்த வழக்கு விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விருத்தாசலம் 1-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணைக்கு வந்த வழக்கினை மாஜிஸ்திரேட் கோபிநாத் விசாரித்தார். விசாரணையின் முடிவில் கோபிநாத்திற்கு 3 வருட சிறைத்தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo