search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியை கத்தியால் குத்திய வழக்கு- கணவனுக்கு 3 ஆண்டு ஜெயில்
    X

    மனைவியை கத்தியால் குத்திய வழக்கு- கணவனுக்கு 3 ஆண்டு ஜெயில்

    விருத்தாசலம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கூனங்குறிச்சியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(38). இவரது மனைவி ரேக்கா(30). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சவுந்தரராஜனுக்கும் ரேக்காவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 11.6.2012 அன்று ரேக்கா தன் கணவரிடம் கோபித்துக்கொண்டு விருத்தாசலம் சித்தலூரில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். அங்கு சென்ற சவுந்தரராஜன் கத்தியால் ரேக்காவின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ரேக்கா விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்றார்.

    இந்த வழக்கு விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விருத்தாசலம் 1-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணைக்கு வந்த வழக்கினை மாஜிஸ்திரேட் கோபிநாத் விசாரித்தார். விசாரணையின் முடிவில் கோபிநாத்திற்கு 3 வருட சிறைத்தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
    Next Story
    ×