என் மலர்

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியை ஓடஓட வெட்டிய கணவர் கைது
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியை ஓடஓட வெட்டிய கணவர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்ரீபெரும்புதூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை ஓடஓட வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பள்ளமொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (35). மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி ஆதிலட்சுமி (30).

    கண்ணன்-ஆதிலட்சுமி தம்பதிக்கு சாருமதி (10) என்ற மகளும், வெற்றிவேல் (5) என்ற மகனும் உள்ளனர். கண்ணனுக்கு குடிப்பழக்கம் உண்டு. சாருமதி ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவி நடத்தையில் கண்ணன் சந்தேகப்பட்டார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இன்று காலை கண்ணனும், ஆதிலட்சுமியும் வேலைக்கு புறப்பட்டனர். அப்போது மனைவியை கண்ணன் திட்டினார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், அவரது மனைவி ஆதிலட்சுமியை தன்னிடம் இருந்த மரம் வெட்டும் கத்தியால் வெட்டினார். ரத்தம் சொட்டச் சொட்ட அலறிய படி ஆதிலட்சுமி அங்கிருந்து ஓடினார். அவரை ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டினார்.

    ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆதிலட்சுமி ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சுங்குவார்சத்திரம் போலீசார் கண்ணனை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது.
    Next Story
    ×