search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் மனைவியை தாக்கிய கணவர் கைது
    X

    விருதுநகரில் மனைவியை தாக்கிய கணவர் கைது

    விருதுநகரில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கருப்பன் (வயது 36). சிவகாசியில் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவரது 2-வது மனைவி கவிதா (28). இவரும் ஏற்கனவே திருமணமானவர்.

    இந்த நிலையில் கவிதாவின் தங்கை கலைச்செல்விக்கும், கருப்பனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதில் கலைச்செல்விக்கு குழந்தை பிறந்தது.

    இதுபற்றி கணவரிடம் கவிதா கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கருப்பன் தாக்கியதில் காயம் அடைந்ததாக விருதுநகர் மேற்கு போலீசில் கவிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பனை கைது செய்தனர்.

    Next Story
    ×