என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இண்டூர் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கட்டிட தொழிலாளி
Byமாலை மலர்14 May 2018 5:39 AM GMT (Updated: 14 May 2018 5:39 AM GMT)
இண்டூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிய கட்டிட தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள சோளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேட்ராயன் (வயது 32).
இவரது மனைவி ஜெயா (25), இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவரும் பெங்களூருவில் கட்டிட வேலை பார்த்து வந்தனர். கடந்த 11-ந் தேதி அவர்கள் இருவரும் சோளப்பாடி கிராமத்திற்கு வந்தனர். நேற்று மதியம் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வேட்ராயன் கதவை சாத்தி விட்டு மனைவியை தலை, கை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். பின்னர் அவர் தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த ஜெயா, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேட்ராயனை தேடி வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள சோளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வேட்ராயன் (வயது 32).
இவரது மனைவி ஜெயா (25), இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவரும் பெங்களூருவில் கட்டிட வேலை பார்த்து வந்தனர். கடந்த 11-ந் தேதி அவர்கள் இருவரும் சோளப்பாடி கிராமத்திற்கு வந்தனர். நேற்று மதியம் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வேட்ராயன் கதவை சாத்தி விட்டு மனைவியை தலை, கை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். பின்னர் அவர் தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த ஜெயா, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேட்ராயனை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X