search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்டராம்பட்டு அருகே பெண் கொலை - கணவர் பரபரப்பு வாக்குமூலம்
    X

    கொலையான ராணி, கைதான பழனி

    தண்டராம்பட்டு அருகே பெண் கொலை - கணவர் பரபரப்பு வாக்குமூலம்

    • 2 மாதத்துக்கு முன்பு பழனியின் தாய் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
    • இறுதிச் சடங்கில் பங்கேற்க சொந்த கிராமத்துக்கு வந்த ராணி, அங்கேயே தங்கி விட்டார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த புதூர்செக்கடி, ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது48). இவரது மனைவி ராணி (43). இவர்களுக்கு ராஜபாண்டி (24), சிவா (22) என்ற 2 மகன்களும், பரணி (21) என்ற மகளும் உள்ளனர். ராணி வெளிநாட்டில் தங்கி வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்து வந்தார்.

    2 மாதத்துக்கு முன்பு பழனியின் தாய் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க சொந்த கிராமத்துக்கு வந்த ராணி, அங்கேயே தங்கி விட்டார். இதற்கிடையில், இவர்களது மகள் பரணி புதூரை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் தந்தை பழனி மற்றும் உறவினர்கள் ஆதரவுடன் அந்த வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

    ஆனால் மகளின் காதல் திருமணம் தாய் ராணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அதேநேரம் தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டியில் உள்ள ராணியின் சகோதரி வீட்டில் நடந்த விசேஷத்தில் பங்கேற்க தேவையான பொருட்களை தானிப்பாடியில் உள்ள கடைகளில் வாங்கிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ராணி வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஆத்திரமடைந்த பழனி, வீட்டில் வைத்திருந்த கத்தியால் ராணியின் கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ராணி, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த மகன் சிவா, ரத்த வெள்ளத்தில் தாய் பிணமாகக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடன் அக்கம் பக்கத்தினர் வந்து தானிப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் டி.எஸ்.பி.அஸ்வினி, தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, தானிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பழனியை தேடி வந்தனர். பக்கத்து கிராமத்தில். பதுங்கியிருந்த பழனியை போலீசார் கைது செய்தனர்.

    போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவி ராணி கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

    எனது மகள் காதல் திருமண செய்வது குறித்து அவரிடம் கூறினேன். அவர் வர மறுத்தார். எனது மகன்களும் திருமணத்திற்கு வரவில்லை. நான் மட்டும் மகள் திருமணத்திற்கு சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். சம்பவத்தன்று இரவு நான் வீட்டுக்கு வந்த போது ராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடுவது போல இருந்தது. இது பற்றி நான் ராணியிடம் கேட்டேன். அவர் யாரும் வீட்டுக்கு வரவில்லை என கூறினார். ஆனால் அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    சந்தேகம் தீராததால் தொடர்ந்து இதுபற்றி அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் கத்தியால் ராணியை கழுத்தில் வெட்டினேன். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×