என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காதல் மனைவியை தாக்கிய 2-வது கணவர் கைது
- மனைவி மீதும் வழக்குப்பதிவு
- செலவு செய்த ரூ.98 ஆயிரத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்
கோவை,
கோவை அன்னூர் ஏ.எம்.காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 32). இவரது மனைவி முத்துலட்சுமி (30). இவர் அங்குள்ள மருந்து கடையில் வேலை செய்து வருகிறார்.
முத்துலட்சுமியின் முதல் கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் தனது கல்லூரி நண்பரான கிருஷ்ணமூர்த்தியை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கிருஷ்ணமூர்த்தி, முத்துலட்சுமியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.
அதனால் தான் முத்துலட்சுமிக்கு செலவு செய்த ரூ.98 ஆயிரத்தை திருப்பி தருமாறு கடந்த ஒரு வாரமாக கேட்டுள்ளார். சம்பவத்தன்று மீண்டும் பணத்தை கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை தாக்கினார். இதனை பார்த்த முத்து லட்சுமியின் தாயார் அங்கு வந்து கிருஷ்ண மூர்த்தியை தடுத்தார். அப்போது அவரையும் தாக்கினார்.
பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். இதனால் பயந்துபோன முத்துலட்சுமி அன்னூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிருஷ்ண மூர்த்தியை கைது செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத் தனர். இதே போன்று கிருஷ்ண மூர்த்தியும் தனது மனைவி தகாத வார்த்தை களால் திட்டி தாக்கியதாக புகார் தெரிவித்தார்.
இதைய டுத்து போலீசார் முத்து லட்சுமி மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்