search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanging"

    • காதல் திருமணம் செய்த மனைவி தாக்கியதால் விபரிதம்.
    • குழந்தைகளை அழைத்துக்கொண்டு சூளை வேலைக்கு சென்று விட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ஏம்பலம் அருகே மணக்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் (வயது45). கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக சக்திவேல் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து வந்தார். இதனால் விஜயலட்சுமி செங்கல் சூளை வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இதற்கிடையே அடிக்கடி மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு சக்திவேல் தொந்தரவு செய்து வந்தார். இந்த நிலையில்  மது குடித்து விட்டு வீட்டு வந்த சக்திவேல் மீண்டும் மது குடிக்க விஜய லட்சுமியிடம் பணம் கேட்டார். ஆனால் விஜய லட்சுமி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    மேலும் மனைவியும், குழந்தைகளையும் தாக்கினார். இதனால் கோபமடைந்த விஜயலட்சுமி அங்கு கிடந்த தென்னை மட்டையை எடுத்து சக்திவேலை தாக்கினார்.

    பின்னர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சூளை வேலைக்கு சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த அஞ்சலி என்பவர் விஜயலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு உனது கணவர் வீட்டில் மின் விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதாக தெரிவித்தார்.

    காதல் மனைவி அடித்ததால் சக்திவேல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

     இந்த  சம்பவங்கள் குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தர பாண்டியம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 40). இவரது மனைவி விஜி (39). இவர்கள் இருவரும் விறகு வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் இவரது மகன் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் கடந்த 4 நாட்களாக மழை காரணமாக முத்துசெல்வம் வேலைக்குச் செல்லவில்லை.

    இதன் காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையத்தில் விஜி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் அக்ரஹாரம் கமலா ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
    • நேற்று பணி முடித்து அறைக்கு சென்ற அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    ராமநாதபுரம் மாவட்டம், தேவியாப்பட்டினம் ஆர்.சி. தெரு பகுதியை சேர்ந்தவர் ஜீவா என்கிற ஜெரால்டு (வயது 28). இவர் கடந்த 2 வருடங்களாக சேலம் அக்ரஹாரம் கமலா ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவில் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று பணி முடித்து அறைக்கு சென்ற அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர், டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். ஜெரால்டு எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுபழக்கம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
    • இதனால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:கருப்பூர் அருகே

    தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

    சேலம் கருப்பூர் அருகே உள்ள மஞ்சுளாம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர் சுகன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் மணிகண்டனுக்கு மதுபழக்கம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் தூக்குப்போட்டு இறந்தார்.
    • அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(28), ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்தார். இவரது மனைவி திலகவதி. இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது உறவினர்கள் அவரை காப்பாற்றி சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் விரக்தியடைந்த விக்னேஷ் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விக்னேசின் தாய் குருவம்மாள் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கே.புதுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் அங்கம்மாள் வீட்டிற்கு சென்றார்.
    • அங்கு யாரும் இல்லாத நிலையில் திடீரென அவர் தூக்குப் போட்டு கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே கருப்பட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 57). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.

    நேற்று வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் அங்கம்மாள் வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நிலையில் திடீரென அவர் தூக்குப் போட்டு கொண்டார்.

    இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • திடீரென்று தூக்குப் போட்டுக் கொண்டார். பேபி வீட்டிற்கு திரும்பியபோது கணவன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மங்களமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி (40). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டு வரும்போ தெல்லாம் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் செல்வராஜ் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதை பார்த்த செல்வராஜின் மூத்த மகள், கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். இதையடுத்து மகளை தேடி பேபியும் சென்றுள்ளார்.

    அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த செல்வராஜ் திடீரென்று தூக்குப் போட்டுக் கொண்டார். பேபி வீட்டிற்கு திரும்பியபோது கணவன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்வராஜை கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவை அருகே வில்லியனூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குருபாதம் லிப்ட் ஆப்ரேட்டர். இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் குருபாதத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குருபாதம் (வயது47). லிப்ட் ஆப்ரேட்டர். இவரது மனைவி குணவதி (வயது38). விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு மீனாட்சி சுந்தரம்(வயது16), ஆதித்யா ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    குருபாதத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். குணவதி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் குணவதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த குருபாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரும்பு கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் குருபாதத்தை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே குருபாதம் இறந்து விட்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி குணவதி வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுவை அருகே அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராதாகண்ணன் காளி. இவர் மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஊழியர்.
    • ராதாகண்ணன் காளிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் காக்கையன்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராதாகண்ணன் காளி. இவர் மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஊழியர். இவரது மனைவி கோமதி (வயது60). இவர்களது சொந்த ஊர் சென்னை சுற்றுக்கேணியாகும். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

    ராதாகண்ணன் காளிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் எதிர்வீட்டில் வசிக்கும் நபர் வெளியூருக்கு செல்லும் போது சாவியை கொடுத்து விட்டு செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று ராதாகண்ணன் காளி எதிர் வீட்டிலேயே தூங்க சென்றார். அப்ேபாது அளவுக்கு அதிகமாக மது குடித்த ராதாகண்ணன் காளி மின்விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி கோமதி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெருந்துறை அருகே முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள ஈங்கூர் வரப்பாளையம், பாச்சாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 80). இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கிளீனராக வேலை செய்து வருகிறார்.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    சம்பவத்தன்று மதியம் சாப்பிட்டுவிட்டு பழைய வீட்டிற்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வெளியே வராததால் அவரது மனைவி ரங்காத்தாள் மற்றும் மகன் சதாசிவம் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறம் தாழ் போட்டு இருந்தது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் விட்டத்தில் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக அவரை கீழே இறக்கி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெரியசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    • இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்துள்ள அவல்பூந்துறை, சோளிபாளையம் புதுக்காலனியை சேர்ந்தவர் மாணிக்கம்.

    இவரது மகன் பரமேஸ்வரன்(23). தொழிலாளியான இவர் சமீபகாலமாக குடிபோதைக்கு அடிமையானார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

    வீட்டில் பெற்றோர் வெளியே சென்றிருந்ததால் தனியாக இருந்த பரமேஸ்வரன் நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்கேகமடைந்த பக்கத்தில் வசிக்கும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • சத்தியமங்கலம் அருகே தலை வலியால் அவதி அடைந்து வந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உதயண்டியூர் பூசாரி–பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி நாகரத்தினம் (40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பழனிசாமி புத்தக கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் நாகரத்தினம் கடந்த சில நாட்களாகவே தலை வலியால் அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று நாகரத்தினம், அவரது கணவர் மகன், மகள் அனைவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது நாகரத்தினம் திடீரென தனக்கு தலை வலிப்பதாக கூறி வீட்டிலுள்ள அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டார்.

    இதனால் அவரது கணவர்,மகன், மகள் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நாகரத்தினம் தூக்குபோட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நாகரத்தினம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×