search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டு"

    • சில நாட்களாக ஏதோ மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உள்ள பல்லன்விளை பறையன்விளையை சேர்ந்தவர் சோபனம் (வயது 61). கொத்தனாரான இவர் கடந்த சில நாட்களாக ஏதோ மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். பின்பு வெகு நேரமாகியும் அறைக்கதவு திறக்காமல் இருந்துள்ளது.

    இதனால் அவரது மனைவி ராஜலட்சுமி, அவரது அறையில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன் பட்டி உப்பிலியர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் தனக்கு வயிற்று வலி அதிக மாக இருப்பதாகவும் இருப்பி னும் வேலைக்கு சென்று வருவதாகவும் வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • இந்நிலையில் மாலை அந்தப் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோவிந்தனுக்கு போன் செய்து உனது மகன் கார்த்திக் புத்தூர் அருகே ஒரு ஓடையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன் பட்டி உப்பிலியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (78) கூலித்தொழிலாளி. இவ ரது மகன் கார்த்திக் (24) இவர் கட்டிட மேஸ்திரி. இவரது

    மனைவி சரண்யா( 20). இவர்கள் கார்த்திக்கின் தந்தை கோவிந்தன் வீட்டுக்கு அருகிலேயே குடியிருந்து வந்தனர்.

    இந்நிலையில் கார்த்திக் தனக்கு வயிற்று வலி அதிக மாக இருப்பதாகவும் இருப்பி னும் வேலைக்கு சென்று வருவதாகவும் வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை அந்தப் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோவிந்தனுக்கு போன் செய்து உனது மகன் கார்த்திக் புத்தூர் அருகே ஒரு ஓடையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தகவல் அறிந்த கோவிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்து கார்த்திக்கின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோவிந்தன் வேல கவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கைலேஷ்வரன் வழக்கு பதிவு செய்து உடலை

    கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக நாமக்கல் அரசு

    மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனார்.

    • எடப்பாடி மேட்டு தெருவை சேர்ந்த பிரபாகரன் - சரஸ்வதி தம்பதியின் மகள் சந்தியா (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • மாமியா ருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படு கிறது. சம்ப வத்தன்றும் சந்தியா திடீரென வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சின்னசோரகை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் பழனி (30) கோவையில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை செய்து வருகிறார்.

    3 மாத கர்ப்பிணி

    இவருக்கும், எடப்பாடி மேட்டு தெருவை சேர்ந்த பிரபாகரன் - சரஸ்வதி தம்பதியின் மகள் சந்தியா (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் சந்தியா 3 மாத கர்ப்பமாக இருந்தார்.

    இந்நிலையில் சந்தியா விற்கும் அவரது மாமியா ருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படு கிறது. சம்ப வத்தன்றும் சந்தியா திடீரென வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வந்த நங்கவள்ளி போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சந்தியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மேட்டூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு சந்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பேச்சுவார்த்தை

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    பின்னர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ தணிகாச்சலம், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஜலகண்டா புரம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் சந்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், கணவர் பழனியிடம் இருந்து சந்தியாவின் பெண் குழந்தைக்கு உரிய நிவாரணம் பெற்று தருவதாகவும் தெரிவித்தனர்.

    • சாந்தி தியேட்டர் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடிமகன்கள் தினசரி குடிப்பது வழக்கம்.
    • டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு பாரில் அனுமதியின்றி மது விற்பனை படுஜோ ராக நடைபெற்று வந்த தாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் சாந்தி தியேட்டர் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடிமகன்கள் தினசரி குடிப்பது வழக்கம். இந்த டாஸ்மாக் கடையையொட்டி பார் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு பாரில் அனுமதியின்றி மது விற்பனை படுஜோ ராக நடைபெற்று வந்த தாக தெரிகிறது. வழக்கம்போல் இன்று காலையிலும் மது விற்பனை செய்யப்படு வதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பார் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடிமகன்களுடன் சேர்ந்து அந்த பாருக்கு பூட்டு போட்டு கோஷங்கள் எழுப்பினர். அருகாமை யிலேயே காவல் நிலையம் இருந்தும் மது விற்பனை நடைபெறுவதை போலீசார் தடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு டாஸ்மாக் பார் திறக்கப்பட்டது. இதையடுத்து, கடைக்குள் இருந்த குடிமகன்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • சேலம் அக்ரஹாரம் கமலா ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
    • நேற்று பணி முடித்து அறைக்கு சென்ற அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    ராமநாதபுரம் மாவட்டம், தேவியாப்பட்டினம் ஆர்.சி. தெரு பகுதியை சேர்ந்தவர் ஜீவா என்கிற ஜெரால்டு (வயது 28). இவர் கடந்த 2 வருடங்களாக சேலம் அக்ரஹாரம் கமலா ஆஸ்பத்திரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் அங்குள்ள காசி விஸ்வநாதர் கோவில் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று பணி முடித்து அறைக்கு சென்ற அவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர், டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். ஜெரால்டு எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுபழக்கம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
    • இதனால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:கருப்பூர் அருகே

    தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

    சேலம் கருப்பூர் அருகே உள்ள மஞ்சுளாம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர் சுகன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் மணிகண்டனுக்கு மதுபழக்கம் ஏற்பட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • திடீரென்று தூக்குப் போட்டுக் கொண்டார். பேபி வீட்டிற்கு திரும்பியபோது கணவன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மங்களமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி (40). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டு வரும்போ தெல்லாம் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் செல்வராஜ் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதை பார்த்த செல்வராஜின் மூத்த மகள், கோபித்துக் கொண்டு வெளியே சென்று விட்டார். இதையடுத்து மகளை தேடி பேபியும் சென்றுள்ளார்.

    அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த செல்வராஜ் திடீரென்று தூக்குப் போட்டுக் கொண்டார். பேபி வீட்டிற்கு திரும்பியபோது கணவன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்வராஜை கொண்டு சென்றார்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கவுண்டம்பாளையம் அருகே பொம்மக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேலையால் தூக்குப் போட்டுக் கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கவுண்டம்பாளையம் அருகே பொம்மக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). இவரது மனைவி ராஜேஸ்வரி (34). இவர்கள் புட்டு வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு தருணிதரன் (16) என்ற மகனும், ரூபவர்ஷினி என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன் சதீஷ் சாலை விபத்தில் சிக்கினார். இதனால் கடந்த சில தினங்களாக அவருக்கு கடுமையான தலைவலி இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இரவு, சதீஷ் வீட்டுக்கு வெளியே கட்டி லில் படுத்து தூங்கினார். ராஜேஸ்வரியும், குழந்தை களும் வீட்டுக்குள் படுத்துக்கொண்டனர். அதிகாலை ராஜேஸ்வரி எழுந்து பார்த்தபோது, சதீஷ் சேலையால் தூக்குப் போட்டுக் கொண்ட நிலை யில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த ராஜேஸ்வரி கதறி துடித்தார். பின்னர் இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஷ் தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி சீனிவாசா நகர் பகுதியில் நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • உடல் கூறு ஆய்வுக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா( வயது 34). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்தில் விருந்து சென்று உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன கீர்த்தனாவிற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலை கிடைக்காததால் வேதனை சேலம் லாட்ஜில் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏ.செட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் காரியப்பா. இவரது மகன் முனுசாமி (வயது 29). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் பகுதயில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று அறை எடுத்து தங்கி உள்ளார். காலையில் இவருடைய அறை கதவு வெகு நேரம் ஆகியும் திறக்காததால் லாட்ஜ் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது முனுசாமி தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து லாட்ஜ் ஊழியர்கள் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில், முனுசாமி பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். நீண்ட நாட்களாக தேடியும் வேலை கிடைக்காததால் தனது பெற்றோரிடம், நான் படித்த படிப்புக்கு இங்கு வேலை கிடைக்கவில்லை. அதனால் வெளிநாடு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் வெளிநாடு செல்ல பெற்றோர் மறுத்துவிட்டதால், மன வேதனையில் இருந்து முனுசாமி, தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×