search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "put"

    • மேட்டூர் அணைப் பூங்காவில் பொழுதுபோக்கவும், காவிரி ஆற்றில் குளிப்பதற்காகவும ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
    • மேட்டூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணைப் பூங்காவில் பொழுதுபோக்கவும், காவிரி ஆற்றில் குளிப்பதற்காகவும ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேட்டூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த மாதம் ஈரோட்டைச் சேர்ந்த ராஜா (வயது 48) என்பவர் பண்ணவாடி பரிசல் துறை அருகே அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார். அதேபோல, கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் (20) என்ற இளைஞர் மாசிலாபாளையம் மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் குளித்தபோது, ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

    கோடை வெயிலின் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள நீர்நிலைக்குச் சென்று குளிக்கும் போது, நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்குச் சென்று உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியான விராலிக்காடு அருகே, 'ஆழமான பகுதி; குளிப்பதற்கு தடை' என எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை.

    இதனால் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அணை நீர்த்தேக்கப் பகுதியில் குளிக்கின்றனர். இதனால் ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாந்தி தியேட்டர் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடிமகன்கள் தினசரி குடிப்பது வழக்கம்.
    • டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு பாரில் அனுமதியின்றி மது விற்பனை படுஜோ ராக நடைபெற்று வந்த தாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் சாந்தி தியேட்டர் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடிமகன்கள் தினசரி குடிப்பது வழக்கம். இந்த டாஸ்மாக் கடையையொட்டி பார் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு பாரில் அனுமதியின்றி மது விற்பனை படுஜோ ராக நடைபெற்று வந்த தாக தெரிகிறது. வழக்கம்போல் இன்று காலையிலும் மது விற்பனை செய்யப்படு வதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பார் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடிமகன்களுடன் சேர்ந்து அந்த பாருக்கு பூட்டு போட்டு கோஷங்கள் எழுப்பினர். அருகாமை யிலேயே காவல் நிலையம் இருந்தும் மது விற்பனை நடைபெறுவதை போலீசார் தடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு டாஸ்மாக் பார் திறக்கப்பட்டது. இதையடுத்து, கடைக்குள் இருந்த குடிமகன்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ×