search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிட மேஸ்திரி தூக்கு போட்டு தற்கொலை
    X

    கட்டிட மேஸ்திரி தூக்கு போட்டு தற்கொலை

    • நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன் பட்டி உப்பிலியர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் தனக்கு வயிற்று வலி அதிக மாக இருப்பதாகவும் இருப்பி னும் வேலைக்கு சென்று வருவதாகவும் வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • இந்நிலையில் மாலை அந்தப் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோவிந்தனுக்கு போன் செய்து உனது மகன் கார்த்திக் புத்தூர் அருகே ஒரு ஓடையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன் பட்டி உப்பிலியர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (78) கூலித்தொழிலாளி. இவ ரது மகன் கார்த்திக் (24) இவர் கட்டிட மேஸ்திரி. இவரது

    மனைவி சரண்யா( 20). இவர்கள் கார்த்திக்கின் தந்தை கோவிந்தன் வீட்டுக்கு அருகிலேயே குடியிருந்து வந்தனர்.

    இந்நிலையில் கார்த்திக் தனக்கு வயிற்று வலி அதிக மாக இருப்பதாகவும் இருப்பி னும் வேலைக்கு சென்று வருவதாகவும் வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை அந்தப் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் கோவிந்தனுக்கு போன் செய்து உனது மகன் கார்த்திக் புத்தூர் அருகே ஒரு ஓடையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தகவல் அறிந்த கோவிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்து கார்த்திக்கின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோவிந்தன் வேல கவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கைலேஷ்வரன் வழக்கு பதிவு செய்து உடலை

    கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக நாமக்கல் அரசு

    மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனார்.

    Next Story
    ×