என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
![தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2023/06/05/1892788-thokku02.webp)
கோப்பு படம்.
தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காதல் திருமணம் செய்த மனைவி தாக்கியதால் விபரிதம்.
- குழந்தைகளை அழைத்துக்கொண்டு சூளை வேலைக்கு சென்று விட்டார்.
புதுச்சேரி:
புதுவை ஏம்பலம் அருகே மணக்குப்பம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சக்திவேல் (வயது45). கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக சக்திவேல் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடித்து வந்தார். இதனால் விஜயலட்சுமி செங்கல் சூளை வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
இதற்கிடையே அடிக்கடி மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு சக்திவேல் தொந்தரவு செய்து வந்தார். இந்த நிலையில் மது குடித்து விட்டு வீட்டு வந்த சக்திவேல் மீண்டும் மது குடிக்க விஜய லட்சுமியிடம் பணம் கேட்டார். ஆனால் விஜய லட்சுமி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
மேலும் மனைவியும், குழந்தைகளையும் தாக்கினார். இதனால் கோபமடைந்த விஜயலட்சுமி அங்கு கிடந்த தென்னை மட்டையை எடுத்து சக்திவேலை தாக்கினார்.
பின்னர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சூளை வேலைக்கு சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த அஞ்சலி என்பவர் விஜயலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு உனது கணவர் வீட்டில் மின் விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதாக தெரிவித்தார்.
காதல் மனைவி அடித்ததால் சக்திவேல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்த சம்பவங்கள் குறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)