search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GST"

    • மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
    • புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும், ஜிஎஸ்டி திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

    இந்த கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மந்திரிகள் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத நிலையில் இனி 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், குதிரை பந்தயம் மற்றும் கேசினோக்களின் மொத்த வருமானம் மீது 28 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்ததாக தெரிவித்தார்.

    'புற்றுநோய்க்கான மருந்துகள், அரிய வகை நோய்க்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்காக உணவு பொருட்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது' என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • ஜி.எஸ்.டி. விதிப்பது தொடா்பாக ஆராய மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
    • கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த விவகாரம் தொடா்பான அறிக்கையை அக்குழு ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் தாக்கல் செய்திருந்தது.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

    சுமாா் ரூ.36 லட்சம் மதிப்பிலான 'டைனடக்சி மேப்' மருந்து மீது தற்போது 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு வருகிறது. புற்று நோய்க்கான அந்த மருந்துக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிப்பது நோயாளிகளுக்குப் பெரும் பலனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பாகவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆராயவுள்ளது.

    இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிப்பதற்கு மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.

    குழுவில் இடம்பெற்றிருந்த கோவா, 28 சதவீதத்துக்குப் பதிலாக 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க வலியுறுத்தியதால், இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் பெரும்பான்மை அடிப்படையில் இந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டது.

    இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. விதிப்பது தொடா்பாக ஆராய மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதமே இந்த விவகாரம் தொடா்பான அறிக்கையை அக்குழு ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் தாக்கல் செய்திருந்தது. எனினும், அதில் இடம் பெற்றிருந்த சில விவகாரங்களுக்கு கோவா எதிா்ப்பு தெரிவித்தது. அதன் காரணமாக அந்த அறிக்கையை மறுஆய்வு செய்யுமாறு ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்தது.

    அதன் அடிப்படையில் மாநில நிதியமைச்சா்கள் குழு மீண்டும் இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது. இது தொடா்பான இறுதி முடிவு எடுப்பதற்கான பொறுப்பை ஜி.எஸ்.டி. கவுன்சிலிடமே மாநில நிதியமைச்சா்கள் குழு ஒப்படைத்துள்ளது.

    • மோசடியாக பெற முயற்சிக்கப்பட்ட ரூ.1,506 கோடி உள்ளீட்டு வரி முடக்கப்பட்டுள்ளது.
    • ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இருமடங்காக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கும், உள்ளீட்டு வரியை திரும்ப பெறுவதற்கும் இந்த எண் பயன்படுகிறது.

    அதே சமயத்தில், சில மோசடியாளர்கள், போலி விலைபட்டியல் அளித்து, உள்ளீட்டு வரியை திரும்ப பெற்று, மத்திய அரசுக்கு இழப்பை ஏற்படுத்துகிறார்கள். இத்தகைய போலி ஜி.எஸ்.டி. பதிவுகளை கண்டறிய நாடு முழுவதும் 2 மாத கால ஆய்வு, கடந்த மே 16-ந் தேதி தொடங்கியது. வருகிற 15-ந் தேதி இப்பணி முடிவடைகிறது.

    இந்நிலையில், ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்கள் குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் ஷஷாங்க் பிரியா, டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. தொடர்பான தேசிய மாநாட்டில் பேசுகையில் தெரிவித்தார். அவர் பேசியதாவது:-

    69 ஆயிரத்து 600 ஜி.எஸ்.டி. அடையாள எண்கள், ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில், இதுவரை 59 ஆயிரத்து 178 அடையாள எண்கள், கள அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த எண்களில், 16 ஆயிரத்து 989 எண்கள் புழக்கத்திலேயே இல்லை. 11 ஆயிரத்து 15 எண்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 4 ஆயிரத்து 972 போலி ஜி.எஸ்.டி. பதிவு எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ரூ.15 ஆயிரத்து 35 கோடி ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடியாக பெற முயற்சிக்கப்பட்ட ரூ.1,506 கோடி உள்ளீட்டு வரி முடக்கப்பட்டுள்ளது. ரூ.87 கோடி, திரும்ப பெறப்பட்டுள்ளது. . இந்த ஆய்வின் மூலம், ஜி.எஸ்.டி. பதிவிலும், கணக்கு தாக்கலிலும் காணப்படும் ஓட்டைகளை அடைப்பது அவசியம் என்று தெரிய வந்துள்ளது.

    வர்த்தகர்கள் மாதந்தோறும் கணக்கு தாக்கல் செய்ய பயன்படுத்தும் ஜி.எஸ்.டி.ஆர்-3பி படிவம், வர்த்தகர்களுக்கு உகந்தவகையில் சீர்திருத்தப்படும். ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இருமடங்காக உயர்ந்துள்ளது. அதாவது, 1 கோடியே 40 லட்சமாக அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 6 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமின்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
    • 2017-ம் ஆண்டு ரூ.1,106 கோடியாக இருந்த வருவாய், 2022-ம் ஆண்டு ரூ.3,003 கோடியாக அதிகரித்துள்ளது.

    கோவை:

    தொழில் நிறுவனங்களே தொடங்காமல் 186 நிறுவனங்கள் பெயரில் ரூ.127 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கோவை மண்டல மத்திய ஜி.எஸ்.டி. முதன்மை ஆணையர் குமார் தெரிவித்தார்.

    ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டு ஆறாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜி.எஸ.டி. அலுவலகத்தில் நேற்று சிறப்பு விழா நடந்தது. இதையொட்டி கோவை மண்டல ஜி.எஸ்.டி. அலுவலகத்தின் முதன்மை ஆணையர் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 6 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமின்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    நாடு முழுவதும் வரி வருவாய் 2017-ம் ஆண்டு 7.19 லட்சம் கோடியாக இருந்தது. 2022-23-ம் ஆண்டில் 18.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

    கோவை மண்டலத்தை பொறுத்தவரை 2017-ம் ஆண்டு ரூ.1,106 கோடியாக இருந்த வருவாய், 2022-ம் ஆண்டு ரூ.3,003 கோடியாக அதிகரித்துள்ளது.

    வரி செலுத்துவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு 67.83 லட்சமாக இருந்தது. இது 2023-ம் ஆண்டு 1.40 கோடியாக உயர்ந்துள்ளது.

    கோவை மண்டலத்தில் 2017-ம் ஆண்டு 53,800-ஆக இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2022-ம் ஆண்டு 77,484-ஆக உயர்ந்துள்ளது.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    60 நாட்களுக்குள் 'ரீபண்ட்' வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில், முறையான ஆவணங்கள் இருப்பின் 30 நாட்களில் திருப்பி அளிக்கப்படுகிறது.

    கோவை மண்டலத்தில் தொழில் நிறுவனங்களே தொடங்காமல் 186 நிறுவனங்கள் பெயரில் 127 கோடி வரி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆறு ஆண்டுகளில் மொத்த ஜிஎஸ்டி வசூல் நான்காவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
    • ஏப்ரலில் வருவாய் ரூ.1.87 லட்சம் கோடியை எட்டியது.

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் அதிகரித்து ரூ.1.61 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்ததில் இருந்து, மொத்த ஜிஎஸ்டி வசூல் நான்காவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

    இந்நிலையில், ஜிஎஸ்டி வரி வசூல் குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் 1,61,497 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 31,013 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 80,292 கோடி (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் ரூ.39,035 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ. 11,900 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்படும் ரூ. 1,028 கோடி உட்பட) ஆகும்.

    ஜூன் 2023க்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 12 சதவீதம் அதிகமாகும். இந்த மாதத்தின் போது, உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து பெற்ற வருவாயை விட 18 சதவீதம் அதிகமாகும்.

    ஏப்ரலில் வருவாய் ரூ.1.87 லட்சம் கோடியை எட்டியது. மே மாதத்தில் இது ரூ.1.57 லட்சம் கோடியாக இருந்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இன்று திருவல்லிக்கேணியில் உள்ள பிரேம் ராஜா வீட்டுக்கு சென்றனர்.
    • பிரேம்ராஜா என்னென்ன தொழில்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் பிரேம்ராஜா. இவர் திருவல்லிக்கேணி பகுதி தி.மு.க. பொருளாளராக உள்ளார்.

    இவர் பல்வேறு தொழில்களையும் நடத்தி வந்தார். பிரேம் ஜி.எஸ்.டி. வரியை சரியாக கட்டுவதில்லை என்று ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இன்று திருவல்லிக்கேணியில் உள்ள பிரேம் ராஜா வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    பிரேம்ராஜா என்னென்ன தொழில்களை நடத்தி வருகிறார். அதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. வரி எவ்வளவு பாக்கி வைத்துள்ளார் என்பது தொடர்பாக சோதனைகளை செய்தனர். வீட்டில் இருந்த ஆவணங்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    • மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 14-வது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது.
    • கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    மே மாத மொத்த ஜிஎஸ்டி வரியாக ரூ.1,57,090 கோடி வசூலாகியுள்ளது.

    கடந்த மே மாத ஜி.எஸ்.டி வசூலில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.28,411 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.35,828 கோடியும் வசூலாகி இருக்கிறது.

    ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.81,363 கோடி ஆகும்.

    கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 14-வது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5-வது முறையாக ரூ.1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது.

    அதேபோல், கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்தாண்டு மே மாதத்தில் பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானமும் 12 சதவீதமும், உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த வருமானமும் 11 சதவீதம் அதிகம் ஆகும்.

    • ஒரு மாநிலத்தை அழிய செய்யும் நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்.
    • பல்வேறு இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டு வரும் கேரளாவுக்கு இது மற்றுமொரு பேரழிவு.

    கண்ணூர்:

    கேரள மாநிலம் ரூ.32,442 கோடி வரை கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. தற்போது இந்த உச்ச வரம்பை ரூ.15,390 கோடியாக குறைத்து இருப்பதாக மாநில அரசு கூறியுள்ளது.

    மாநிலத்தின் கடன் வரம்பு பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டிருப்பதற்கு மத்திய அரசுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இது இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கான பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மாநிலத்தின் பிரச்சினை இது. மாநில வளர்ச்சி தொடர்பான பிரச்சினை. ஒரு மாநிலத்தை அழிய செய்யும் நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்' என தெரிவித்தார்.

    ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றின் மூலம் தனது கருவூலத்தை நிரப்பி வரும் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவும் விவகாரத்தில் எதிர்மறை அணுகுமுறை கொண்டிருப்பதாக குற்றம்சாட்டிய பினராயி விஜயன், பல்வேறு இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்டு வரும் கேரளாவுக்கு இது மற்றுமொரு பேரழிவு என்றும் கூறினார்.

    இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்கும் எதிர்க்கட்சிகளையும் அவர் மறைமுகமாக சாடினார்.

    • உடுமலை தொழில் வா்த்தக சபை சாா்பில் ஜிஎஸ்டி கருத்தரங்கம் நடை பெற்றது.
    • தொழில் வா்த்தக சபை செயலாளா் ஆடிட்டா் கந்தசாமி நன்றி கூறினாா்.

    உடுமலை:

    உடுமலை தொழில் வா்த்தக சபை சாா்பில் ஜிஎஸ்டி கருத்தரங்கம் நடை பெற்றது. துணைத் தலைவா் வெங்கடேஷ் வரவேற்றாா். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினா் ஆடிட்டா் சங்கரநாராயணன் பேசும்போது, ஜிஎஸ்டி தணிக்கையின்போது வணிகா்கள், தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் சரக்குகளை கையாளும்போது எடுத்துச் செல்ல வேண்டிய படிவங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தாா்.

    மேலும், ஜிஎஸ்டி சட்டத்தில் தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பதில் உரைகளும், மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ள இடங்களில் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.தொழில் நிறுவனங்களைச் சாா்ந்தோா், வரிசட்ட ஆலோசா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்தாா். தொழில் வா்த்தக சபை செயலாளா் ஆடிட்டா் கந்தசாமி நன்றி கூறினாா். 

    • இந்தியாவில் 2017-ம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.
    • கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வகையில், கடந்த மாதத்தில் (ஏப்ரல்) ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

    இதற்கு முன்பு, ஏப்ரல் 2022ல் அதிகபட்சமாக ரூ.1,67,540 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியிருந்தது. அதை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வசூல் ரூ.19,495 கோடி அதிகம் ஆகும்.

    இது இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தி என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். குறைந்த வரி விகிதங்கள் இருந்தாலும், வரி வசூல் அதிகரித்து வருவது, ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பின் வெற்றியை காட்டுவதாகவும் பிரதமர் கூறி உள்ளார்.

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது.
    தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் ரூ.86,912 கோடியை மத்திய அரசு விடுவித்தது.

    இதில் தமிழகத்திற்கு ரூ.9062 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.

    மே 31-ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்.. உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்
    மத்திய பிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். 500 போலி நிறுவனங்களை உருவாக்கி, ஆவணங்கள், முகவரிகள், அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளனர்.
    போபால்:

    ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறர்கள். போலி ரசீது மூலம் சிலர் மோசடியில் ஈடுபடுவது குறித்து புகார்கள் வந்ததையடுத்து ஜி.எஸ்.டி. வரி அதிகாரிகள் அடிக்கடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ரூ.700 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். 500 போலி நிறுவனங்களை உருவாக்கி, ஆவணங்கள், முகவரிகள், அடையாள அட்டைகளை போலியாக தயாரித்துள்ளனர்.

    இந்த போலி நிறுவனங்கள் மூலம் போலியான ஆவணங்களை பயன்படுத்தி ரூ.700 கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வரி மோசடியில் ஈடுபட்டனர். பல்வேறு செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் கணக்குகள் மூலம் பரிவர்த்தனைகளை நடத்தியது தெரியவந்தது.

    இந்தூரில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி வரி கமிஷன் மற்றும் மத்திய பிரதேச போலீசின் சைபர் பிரிவு ஆகியவற்றின் கூட்டு விசாரணையில் இந்த மிகப்பெரிய மோசடி அம்பலமானது. மோசடி தொடர்பாக 5 பேர் குஜராத் மாநிலம் சூரத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷித்கான் கூறும்போது, ‘மோசடியில் ஈடுபட்டவர்கள் வழக்கமான வங்கி சேவைகளை தவிர்ப்பதற்காக பல டிஜிட்டல் வாலட் கணக்குகள் மூலம் பரிவர்த்தனைகளை செய்துள்ளனர்.

    சோதனையின்போது சூரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்த கட்டிடத்தில் போலி நிறுவனங்களின் செல்போன்களின் சிம் கார்டுகள், ஆவணங்கள் லெட்டர் பேடு, முத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைதான அனைவரும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்’ என்றார்.
    ×