search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt job"

    • ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற பெயரில் நேற்று சமூக வலைதளங்களில் போலியான அறிவிப்பு வெளியானது.
    • கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் தெளிவுபடுத்தினார்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4136 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற பெயரில் நேற்று சமூக வலைதளங்களில் போலியான அறிவிப்பு வெளியானது.

    மொத்தம் 47 பக்கங்கள் கொண்ட இந்த அறிவிப்பில் ஆன்லைன் விண்ணப்பபதிவு ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கும் என்றும், மே 14-ந்தேதி வரை பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. தேர்வுக்கான விதிகள், இடஒதுக்கீட்டு அடிப்படையில் துறை வாரியாக காலியாக உள்ள இடங்கள் உள்ளிட்ட அனைத்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனாலும் சமூக வலைதளங்களில் இது வெளியானது.

    இது குறித்து விசாரித்தபோது அரசு சார்பில் இது வெளியிடப்படவில்லை என தெரியவந்தது. உயர்கல்வித்துறை செயலாளர் டி.கார்த்திகேயனிடம் கேட்டபோது, அதுபோன்று எந்த அறிவிப்பும் துறையால் வெளியிடப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

    கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் தெளிவுபடுத்தினார்.

    இருந்தாலும் போலியான அறிவிப்பு வெளியானதால் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்களை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பணி நியமன தேர்வுக்கான அறிவிப்பு தேர்வு வாரியத்தால் தயார் செய்யப்பட்டு அது முன்கூட்டியே 'லீக்' ஆகிவிட்டதா? அல்லது போலியான அட்டவணையா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
    • தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி 3-ம் இடத்தில் இருந்த பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த்ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்திற்கு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினர்.

    பின்னர் அவரது தாயார் தெய்வானை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக என் மகன் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வாங்கி குவித்து உள்ளான். இந்த ஆண்டு நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளை களை அடக்கி பரிசுகளை பெற்று வீட்டில் கொண்டு வந்து சேர்த்து முதல் பரிசாக அந்த காரையும் பெற்றுதான் வீட்டிற்கு வருவேன் என சொல்லிவிட்டு சென்றான். ஆனால் அவன் வாங்கிய பரிசுகள் மட்டுமே வீட்டில் உள்ளது. அதை அனுபவிக்க என் மகன் உயிரோடு இல்லை. என் மகனை நம்பித்தான் என் குடும்பமே உள்ளது. அவனது இழப்பை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. எனது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு, அரசு வேலை வழங்கி உதவ வேண்டும்

    இவ்வாறு அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.

    • 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி ரூ.40 லட்சம் செலவில் தேவநேய பாவாணருக்கு மணிமண்டபம் அமைத்தார்.
    • பரிபூரணத்தின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

    சங்கரன்கோவில்:

    தேவநேய பாவாணர் சங்கரன்கோவில் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தில் பிறந்தார். அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று 2007-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மதுரை அண்ணா நகரில் ரூ.40 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைத்தார்.

    அதை பராமரிக்கும் பொறுப்பை பாவாணரின் பேத்தி பரிபூரணத்திடம் ஒப்படைத்தார். அதற்காக பரிபூரணத்திற்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் அரசு உதவியாளர் பணி ஆணை வழங்கியிருந்தார்.


    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைபாட்டால் பரிபூரணம் உயிரிழந்தார். இந்நிலையில் பரிபூரணம் அரசு வேலையில் இருந்தபோது மறைந்ததால் அவரது மகளான மனோசாந்திக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் தேவநேயப் பாவாணர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட ராஜா எம்.எல்.ஏ. இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேவநேய பாவாணர் குடும்பத்திற்கு வாரிசு வேலை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    • நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரை சேர்ந்தவர் நம்பிராஜன்(வயது 27). இவர் பேட்டை தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர்கள் சதீஸ்குமார், ராஜேஸ்வரன், டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நடுக்கல்லூரை சேர்ந்தவர் நம்பிராஜன்(வயது 27). இவர் பேட்டை தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு பணிக்காக சென்றபோது அவரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முக்கிய கொலையாளியான சுந்தரபாண்டி கோவில்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த நங்கையார் சந்திப்பு போலீசிலும், துரை முருகன் என்ற ராஜா பேட்டை போலீசிலும் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பேச்சுவார்த்தை

    இதற்கிடையே கொலையாளிகள் அனைவரை யும் கைது செய்ய வேண்டும், நம்பிராஜன் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தலைமையில் நம்பிராஜனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் அரசு பணிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    பணி ஆணை

    அதன்படி இன்று காலை நம்பிராஜனின் மனைவி பேச்சியம்மாள் என்ற பேச்சிக்கு ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரவு பதிவேற்ற கணிணி ஆபரேட்டர் பணிக்கான ஆணையை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கினார். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கினார்.

    ஆதரவற்ற விதவை சான்றிதழ் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது. அப்போது நெல்லை தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் மானூர் யூனியன் முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    உடலை பெற்றுக்கொண்டனர்

    இதையடுத்து நம்பிராஜனின் உறவினர்கள் அவரது உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். பின்னர், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து வைக்கப்பட்டிருந்த நம்பிராஜனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நம்பிராஜன் உடலை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    இதனையொட்டி நடுக்கல்லூரில் தொடங்கி நெல்லை அரசு ஆஸ்பத்திரி வரையிலும் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர்கள் சதீஸ்குமார், ராஜேஸ்வரன், டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • கொலை செய்யப்பட்ட மாயாண்டி குடும்பத்தினருக்கு நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுக்க போவதாக தகவல் வந்ததையடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    பாளை சீவலப்பேரியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 39). இவர் நேற்று முன்தினம் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    உறவினர்கள் போராட்டம்

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மாயாண்டி குடும்பத்தினருக்கு நிவாரண உதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை அரசு மருத்துவமனையில் மாயாண்டியின் குடும்பத்தி னர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    தாசில்தார் பேச்சுவார்த்தை

    இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் பாளை தாசில்தார் ஆனந்த பிரசாத் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

    அப்போது அவர்கள் கூறும்போது, கடந்த ஆண்டு சீவலப்பேரி சுடலை கோவில் பூசாரி துரை என்ற சிதம்பரம் கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு இதுவரை அரசு வேலை வழங்கப்பட வில்லை. எனவே அவரது குடும்பத்தின ருக்கும், மாயாண்டியின் குடும்பத்தில் ஒருவருக்கும் அரசு வேலை உடனடியாக வழங்க வேண்டும்.

    அப்பொழுது தான் மாயாண்டியின் உடலை பெற்று செல்வோம் என தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுடன் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ் பாதுகாப்பு

    இந்நிலையில் இவர்கள் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுக்க போவதாக தகவல் வந்ததையடுத்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • விருத்தாசலம் அருகே அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவரை மீட்ட பொதுமக்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே குப்பநத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமர். அவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர் பி.பி.ஏ. முடித்துவிட்டு அரசு வேலைக்கு தயாராகி கொண்டிருந்தார். நீண்ட நாட்கள் படித்தும் அரசு வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த அவர் அவரது ஊரில் இருந்த தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை மீட்ட பொதுமக்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்தாண்டு இறுதியில் வீசிய ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 188 பேருக்கு அரசுப்பணி அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    கடந்தாண்டு இறுதியில் தமிழக கடலோர பகுதிகளில் ஒக்கி புயல் தாக்கியது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பல மீனவர்கள் இந்த புயலில் சிக்கி பலியாகினர். பலர் மாயமான நிலையில், அவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

    இதனால், புயலில் பலியான மீனவர்களின் எண்ணிக்கையும் துல்லியமாக இல்லை. பலியான மற்றும் காணமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு அப்போது நிவாரணம் அளிக்கப்பட்டது. மேலும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது.

    இதற்கேற்ப அவர்களின் குடும்ப சூழல்களை கருத்தில் கொண்டு 188 பேருக்கு அரசு வேலை வழங்க கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு பணி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    சமூக நலத்துறை மற்றும் வருவாய் துறையில் அவர்களுக்கு பணி ஒதுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த உ.பி.யைச் சேர்ந்த 2 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியும், அரசு வேலையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #compensationformartyrs #YogiAdityanath
    லக்னோ:

    சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வெடிக்கச்செய்தனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்தார்.

    மேலும், இந்த தாக்குதலில் பலியான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அர்ஜுன் ராஜ்பர், ரவிநாத் சிங் படேல் ஆகிய 2 பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #compensationformartyrs #YogiAdityanath
    ×