என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "girl harassment"
திருவாரூர்:
திருவாரூர் அருகே உள்ள பிலவாடிமூலை பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 7 வயது மகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று மாலை நேரத்தில் வீட்டின் வாசலில் விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது இவர்களது வீட்டின் பக்கத்து வீட்டை சேர்ந்த தென்கோவன் (வயது 26). என்பவர் சிறுமியை நைசாக பேசி அவரது வீட்டின் மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டின் வாசலில் விளையாடி கொண்டிருந்த மகளை காணாததால் சிறுமியின் தந்தை அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். பின்னர் தென்கோவன் வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார்.
அப்போது அவர் தனது மகளை பலாத்காரம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சிறுமியின் தந்தை வந்ததை பார்த்ததும் தென்கோவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
உடனே சிறுமியின் தந்தை இது குறித்து திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குபதிவு செய்தார்.
பின்னர் தப்பி ஓடிய தென்கோவனை ‘‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.
வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை அழைத்து சென்று பலாத்காரத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகேயுள்ள ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் பாஞ்சாலி (வயது 14). 8-ம் வகுப்பு படித்துள்ள இவர் டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அதே தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (20) என்ற கல்லூரி மாணவர் கடந்த 2 வருடமாக பாஞ்சாலியிடம் நெருங்கி பழகினார்.
அப்போது, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பாஞ்சாலியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பாஞ்சாலியை திருமணம் செய்ய பாலமுருகன் மறுத்து விட்டார். மேலும் சம்பவம் பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் பாஞ்சாலி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மைவாடி கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் முருகசாமி(48).தொழிலாளி. இவர் சம்பவத்தன்று குடிபோதையில் பள்ளி சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரிடமிருந்து தப்பித்து வந்து நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளி முருகசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை உடுமலை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகிநகரை சேர்ந்தவர் லாரன்ஸ், தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரன்சை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், 7-வது தெருவில் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள சுமார் 29 சிறுவர், சிறுமிகள் பல இடங்களில் இருந்து இங்குவந்து தங்கியிருந்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படித்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மாலை திருமுல்லைவாயல் எட்டியம்மன் நகரில் உள்ள அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் கலந்துகொண்ட அம்பத்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுகளிடம் காப்பகத்தில் தங்கியிருந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தங்களுக்கு காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறினர்.
இதையடுத்து மாஜிஸ்திரேட்டுகள் இதுகுறித்து விசாரிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் திருமுல்லைவாயல் போலீசாருக்கு உத்தரவிட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு அந்த காப்பகத்துக்கு சென்று அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் காப்பக ஊழியர்கள் பாஸ்கர், முத்து, உரிமையாளர் விமலா ஜேக்கப் உள்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் காப்பகத்தில் இருந்த சிறுவர், சிறுமிகள் அனைவரையும் ஆவடியை அடுத்த பொத்தூர் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்துக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலகம் அருகே இ-சேவை மையம் உள்ளது. சம்பவத்தன்று இங்கு அப்பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சான்றிதழ் வாங்குவதற்காக வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த வாலிபர் அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அலறிய மாணவி அங்கிருந்து வீட்டிற்கு சென்று தனது உறவினர்களிடம் இதுபற்றி கூறினார். உடனே மாணவியின் உறவினர்கள் இ-சேவை மையத்திற்கு திரண்டு வந்தனர். இதை பார்த்த அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து மாணவி தரப்பில் அவரது உறவினர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் விபரத்தை கூறினார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அந்த மாணவி சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். இதனால் இந்த சம்பவம் குறித்து மாணவி தரப்பில் போலீசில் புகார் செய்யவில்லை. இதன் காரணமாக போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் அந்த வாலிபரை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவர், மரவனேரியில் உள்ள அரசு மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஜெயராமன் நேற்று மாலையில் மளிகை கடைக்கு மிட்டாய் வாங்குவதற்காக சென்ற 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ஜெயராமனை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ஜெயராமன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இன்று காலையில் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சேலம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பாக ஜெயராமனை வேனில் அழைத்துச்சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கீழநாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தாள்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவர் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்றான். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுறது.
இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறி உள்ளாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மூலச்சத்திரத்தை சேர்ந்த ராணி (வயது 14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனது பாட்டிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சென்றார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவர் சிறுமியை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் ஆசை வார்த்தை கூறி அவரை கற்பழிக்க முயன்றார்.
உடனே அந்த சிறுமி அவரை தள்ளி விட்டு ஓடி விட்டார். இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சென்னை பாடி புதுநகர் பகுதியை சேர்ந்த 4½ வயது சிறுமியை அந்த சிறுமியின் தாயார் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு விட்டிருந்தார்.
27-1-2012 அன்று கடைக்கு பென்சில் வாங்குவதற்கு சென்ற அந்த சிறுமியை சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மணி என்கிற மணிகண்டன் (35) முகப்பேர் கிழக்கு நக்கீரன் சாலையில் உள்ள பாழடைந்த குழந்தைகள் மைய கட்டிடத்திற்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.
குடிபோதையில் அந்த சிறுமியின் உடலில் பல இடங்களில் நகங்களால் கீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இரவு முழுவதும் அந்த சிறுமியை சித்ரவதை செய்துள்ளார்.
28-1-2012 அன்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுமியுடன் இருந்த மணிகண்டனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது அவர் பொதுமக்கள் மீது கற்களை வீசி அவர்களை விரட்டியுள்ளார்.
பின்னர் அவர்கள் சென்னை முகப்பேர் ஜெ.ஜெ. நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டனை கைது செய்து அந்த சிறுமியை மீட்டனர். இது குறித்து அந்த சிறுமியின் தாயார் ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சட்டத்திற்கு புறம்பாக சிறுமியை கடத்தி அடைத்து வைத்து கொடுங்காயம் ஏற்படுத்தியதற்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிறுமியை அடித்து மிரட்டி துன்புறுத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என மணி கண்டனுக்கு மொத்தம் 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
கவுண்டம்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே உள்ளது செட்டிபாளையம். இந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று சிறுமி அந்த பகுதியில் விளையாட முயன்றாள்.
அப்போது அதே பகுதியை சேர்ந்ந்த வேலுச்சாமி (வயது 22) என்பவர் சிறுமியை அவரது வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் சிறுமி அலறி சத்தம்போட்டாள். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சிறுமியை மீட்டனர். பாலியல் தொல்லை கொடுத்த வேலுச்சாமியை துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்