search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sirumugai"

    • குடிநீர் தொட்டியில் பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது.
    • பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான்நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(48). விவசாயி.சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டியில் கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது.இதுகுறித்து பழத்தோட்டம் பகுதியை சேர்ந்த பாம்பு பிடி வீரரான காஜாமைதீனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து குடிநீர் தொட்டியில் இருந்த 5 அடி நீளமுள்ள அரிய வகை நாகத்தினை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்தப்பாம்பினை சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின்படி வனப்பகுதியில் விட்டார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் பாம்பு பிடி வீரரால் பிடிபட்ட நாகம், அரியவகை பொறி நாகம். இது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டது என்றனர்.

    • பக்கத்து வீடு என்பதால் சிறுமியிடம், கவுதம் நட்பாக பழகி வந்தார்.
    • 2 பேரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    கோவை 

    கோவை சிறுமுகையை சேர்ந்தவர் 17 வயது மாணவி.இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கவுதம்(வயது19).கூலித்தொழிலாளி. பக்கத்து வீடு என்பதால் சிறுமியிடம், கவுதம் நட்பாக பழகி வந்தார்.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி 2 பேரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    சம்பவத்தன்று மாணவியை கவுதம் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். மாணவியும் அங்கு சென்றார். அப்போது அவரை அழைத்து கொண்டு கவுதம் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு வைத்து மாணவியை திருமணம் செய்தார். பின்னர் தனது பெற்றோரிடம் சிறுமியை மேஜர் என கூறி அங்கு வசித்தார்.

    அப்போது பல முறை மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர் மாணவியை பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மேலும் மாணவி மைனர் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து டாக்டர் சம்பவம் குறித்து சிறுமுகை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கவுதம் சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    போலீசார் கவுதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறுமுகை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நம்பியூர் காளிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது62). விவசாயி. இவர் நேற்று சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிள் இரும்பறை ரோட்டில் உள்ள பழைய பஞ்சாயத்து அலுவலகம் வந்தபோது அந்த வழியே வந்த வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமசாமி படுகாயம் அடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டுமேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமுகை அருகே பவானி ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    சிறுமுகை அருகே கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(39) விவசாயி. இவர் தனது தோட்டத்திற்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தார்.

    இதற்காக ஆற்றில் மோட்டார் பம்ப் வைத்து குழாய் அமைத்திருந்தார். இந்த நிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக மோட்டார் மற்றும் குழாய்கள் தண்ணீரில் மூழ்கியது.

    தண்ணீரில் மூழ்கிய மோட்டார் மற்றும் குழாய்களை எடுக்க மூடுதுறையைச் சேர்ந்த நாகராஜ்(45), பெரிய குமாரபாளையத்தைச் சேர்ந்த செல்வம்(38), கணேச புரத்தைச் சேர்ந்த முருகசாமி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். மதியம் 1 மணியளவில் நாகராஜ், சந்தோஷ் ஆகிய 2 பேரும் ஆற்றில் இறங்கி குழாய்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென எதிர் பாராதவிதமாக நாகராஜின் கால்கள் ஆற்றுக்குள் இருந்த வாழை மர மட்டைகளில் சிக்கி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    சிறுமுகை அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள எஸ்.புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன். சவரத்தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 45 ). மில் தொழிலாளி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 20 -ந் தேதி இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் சுப்புலட்சுமியின் தலை முடியை வேகமாக பிடித்து இழுத்து கீழே தள்ளினார். பின்னர் வேல்முருகன் தூங்க சென்றனர்.

    மறுநாள் வேல்முருகன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் சுப்புலட்சுமி எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அவரது மகன்கள் தனது தாயை எழுப்பிய போது அவர் படுக்கையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

    பின்னர் இது குறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் சக்திவேல் , சப்-இன்ஸ்பெக்டர்கள் திலக், நெல்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்புலட்சுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பிரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரேத பரிசோதனை செய்த போது சுப்புலட்சுமி கழுத்து எலும்பு உடைந்து இறந்து இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தாக்கி கொலை செய்து விட்டு தலைமறைவான வேல்முருகனைத் தேடிவந்தனர்.

    இந்த நிலையில் வேல்முருகன் இலுப்பநத்தம் கிராம நிர்வாக அதிகாரி நாகராஜ் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை கிராம நிர்வாக அதிகாரி சிறுமுகை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வேல்முருகனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே உள்ளது செட்டிபாளையம். இந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று சிறுமி அந்த பகுதியில் விளையாட முயன்றாள்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்ந்த வேலுச்சாமி (வயது 22) என்பவர் சிறுமியை அவரது வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் சிறுமி அலறி சத்தம்போட்டாள். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.

    அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சிறுமியை மீட்டனர். பாலியல் தொல்லை கொடுத்த வேலுச்சாமியை துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர்.

    ×