search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested elderly"

    பல்லடத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    பல்லடம்:

    பல்லடம் கரைப்புதூர் காலனியை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது உறவினரான இடுவாய் பாரதி நகரை சேர்ந்த தர்மன் (52) கடத்திச்சென்றார்.

    மகள் மாயமானது குறித்து அவரது பெற்றோர் பல்லடம் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் தர்மன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தொடர்பு கேட்டபோது சிறுமி தர்மனிடம் இருப்பது தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டனர்.

    விசாரணையில் சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்வதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தலைமறைவான தர்மனை தேடியபோது அவர் சின்னகாளிபாளையம் குட்டை பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் தர்மனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    ஆலங்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகர் 3-ம் வீதியைசேர்ந்த ராஜா முகமது.  வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தவுலத் நிஷா. இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வது மகள் அனிஷா (7, பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆலங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் பெரியம்மா நூர் நிஷா. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியிலிருந்து தன் தங்கையை பார்க்க ஆலங்குடி வந்துள்ளார். 

    அப்போது அனிஷா, தன் பெரியம்மா நூர்நிஷாவிடம் தாத்தா அஸ்ரப் அலி தன்னை தூங்கும்போது தூக்கிக் கொண்டுபோய் தனி அறையில் வைத்து தன்னை பாலியல் தாக்குதல் மூன்று முறை செய்ததாக கூறியுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து, நூர்நிஷா தனது தங்கை தவுலத் நிஷாவிடம் கேட்டதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளார். காலாண்டு தேர்வு விடுமுறைக்காக அனிஷாவை திருச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு தவுலத் நிஷா அனுப்பி வைத்துள்ளார். 

    அங்கு குழந்தை அனிஷாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதற்கிடையே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு குறித்து நூர்நிஷா ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

    அதன் பேரில் போலீசார் ஆலங்குடி கலிபுல்லா நகர் 3-ம் வீதியை சேர்ந்த அஸ்ரப் அலி (68) என்ற மீன் வெட்டும்  தொழிலாளியை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆலங்குடி மாவட்ட உரி மையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி கலைநிலா முன்  ஆஜர்படுத்தப்பட்ட அஸ்ரப் அலி சிறையில் அடைக்கப்பட்டார்.
    உடுமலை அருகே நிலத்தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (35) தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்கிற பொன்னுசாமி (75) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி அரிவாளால் திருமூர்த்தி தலையில் வெட்டினார். இதில் அவரது காது பகுதியில் பலத்த வெட்டு காயம் விழுந்தது.

    உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து குமரலிங்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்தனர்.

    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் முதியவர் கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்:

    தேவிபட்டிணம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஹபீப்ரகுமான் (வயது 75). இவர் அதே பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவியிடம் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அந்த மாணவியை தனது மகள் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

    இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் கலா ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ஹபீப்ரகுமானை கைது செய்தார்.

    ×