என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fish"
- கடலில் 60 கிலோ எடை வரை வளரும்.
- கடந்த ஆண்டு 35 கிலோ எடையுள்ள மீன் சிக்கியதாகவும் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் பைரவபாலம் ஆற்றில் தினமும் மீன் பிடித்து வருகின்றனர்.
நேற்று மீனவர்கள் வலையில் 24½ கிலோ எடையுள்ள மீன் ஒன்று சிக்கியது.
இந்த மீன் ஏனாம் கொண்டு வரப்பட்டது. அங்கு இந்த ராட்சத மீன் ரூ.17,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மீனிற்கு முதுகுத்தண்டு தவிர அதிக முட்கள் கிடையாது.
அதனால் பெரும்பாலானோர் விரும்புவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். கோதாவரி ஆற்றில் 20 கிலோ எடை வரை வளரும் மீன்கள். கடலில் 60 கிலோ எடை வரை வளரும்.
கடந்த ஆண்டு 35 கிலோ எடையுள்ள மீன் சிக்கியதாகவும் தெரிவித்தனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்த பகுதியில் அதிக அளவு எடையுள்ள மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கி வருகிறது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- இறால் மற்றும் கெண்டை மீன்கள் கடந்த 27-ந் தேதி மர்மநபர்களால் திருடப்பட்டது.
- 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி உப்பனாற்று கரையில் தமிழக அரசு மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள நவீன மீன் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது.
இந்த விற்பனை நிலையத்திற்கு அருகே உள்ள மீன் தொட்டியில் விற்பனை போக மீதம் இருந்த ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள இறால் மட்டும் கெண்டை மீன்கள் கடந்த 27 தேதி மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கடை உரிமையாளர் சிவகுமார் (வயது 47) என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் சீர்காழி போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சீர்காழிஅருகே சட்டநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 31) ஈசானிய தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 56) ஆகிய இருவரும் மீன்களை திருடியது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து சீர்காழி போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
- மீன் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது
- பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.
கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜூன் 15-ந் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து மீன்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை )கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் மீன் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படும் பாறை மீன் இன்று 500 முதல் 550 ரூபாய் வரை விற்கப்பட்டது.
பன்னி சாத்தான் மீன் வழக்கமாக 300 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் இன்று 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 600 முதல் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ஆயிரம் முதல் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதலை மீன் ஒரு கிலோ 500 க்கு விற்கப்பட்டது. இதே போல நெத்திலி மீன் 250 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 200 ரூபாய்க்கும், கானாங்கத்தை மீன் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் மீன்கள் வாங்க கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.
- வாரச்சந்தையில் கெட்டுப்போன 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி சாலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வாரச்சந்தையை தேவகோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள 100-க் கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, தேனி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் இச்சந்தையில் வியாபாரம் செய்து வருகிறார்கள். சமீப காலமாக தரம் குறைந்த மீன்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிரபாவதி ஆேலாசனையின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் மாணிக்கம், நகராட்சி பணியாளர்கள் வாரச்சந்தையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது 100 கிலோ கெட்டுப்போன மீன்கள், 50 கிலோ தரம் குறைந்த கருவாடு, 50 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன், கருவாடு, மாம்பழங் களை நகராட்சி பணி யாளர்கள் அழித்தனர்.
மேலும் வியாபாரிகளிடம் உள்ள தராசு, எடைக்கற்கள் ஆகியவற்றையும் அதிகாரி கள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேட்டூர், அரசு மீன் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளில் 35 கோடியே 97 லட்சம் நுண் மீன்குஞ்சு கள், 2 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரம் மீன் விரலிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
- 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரம் மீன் விரலிகள் மேட்டூர் அணையில் மீன் உற்பத்தியை பெருக்க இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நுண்மீன் குஞ்சுகளை விரலிகளாக வளர்த்தெடுக்கும் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட மீன்வளர்ப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் 2 எக்டேர் பரப்பளவில் புதிய பண்ணைகுட்டை அமைக்க 6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மானியம் உள்ளிட்ட, மீன் வளர்க்கும் பலருக்கு மானியம் வழங்கப்பட்டு உள்ளன.
பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பை மேம்படுத்த ஏதுவாக, மீன்குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், பண்ணை பொருட்கள், மீன்கள் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்கள் 50 சதவீதம் மானியத்தில் ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வீதம் 6 பயனாளி களுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மேட்டூர், அரசு மீன் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளில் 35 கோடியே 97 லட்சம் நுண் மீன்குஞ்சு கள், 2 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரம் மீன் விரலிகள் உற்பத்தி செய்யப்
பட்டுள்ளன. மேலும், 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரம் மீன் விரலிகள் மேட்டூர் அணையில் மீன் உற்பத்தியை பெருக்க இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.
- உக்கடம் மீன் மார்க்கெட் சந்தையில் 24 மணிநேரமும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
- வஞ்சிரம் கிலோ ரூ.900-க்கு விற்பனை
கோவை,
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான அசைவபிரியர்கள் மீன் உணவுகளை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
இதற்காக உக்கடம் பகுதியில் மீன் மார்க்கெட் சந்தை உள்ளது. இங்கு மத்தி, உளி, கிழங்கா, விலா, மடவை, அயிரை, வஞ்சிரம், ஏட்டை, சங்கரா, சீலா, ஜிலேபி, கட்லா, ரோகு ஆகிய மீன் வகைகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
எனவே உக்கடம் மீன் மார்க்கெட் சந்தையில் 24 மணிநேரமும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மீன்பிடிதடைக்காலம் அமலுக்கு வந்தது.
எனவே தூத்துக்குடி, ராமேஸ்வரம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. எனவே உக்கடம் மார்க்கெட் சந்தைக்கு மீன்கள் வரத்து வெகுவாக குறைந்தது.
எனவே வியாபாரிகள் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கடல் மீன்களை வரவழைத்து விற்பனை செய்தனர். இதனால் அங்கு மீன்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1500 என்ற விலைக்கு விற்பனை ஆகி வந்தது.
இதனால் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நடுத்தரமக்கள் வேறுவழியின்றி குளத்து மீன்களை வாங்கி சென்று வந்தனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்தது. எனவே மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்களை அள்ளிக்கொண்டு வருகின்றனர்.
அவை உடனுக்குடன் வாகனங்கள் மூலம் கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு, சுடச்சுட விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே உக்கடம் மார்க்கெட் சந்தையில் மீன்கள் வரத்து படிப்டியாக அதிகரித்து வருகிறது.
எனவே இங்கு கடல் மீன்கள் வழக்கம் போல குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. உக்கடம் சந்தையில் மீன்கள் வரத்து அதிகரிப்பு, பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்கள் மீண்டும் கூட்டம் கூட்டமாக உக்கடம் மார்க்கெட் சந்தைக்கு வந்திருந்து, அங்கு விற்பனையாகும் கடல் மீன்களை குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
உக்கடம் மார்க்கெட் சந்தையில் மீன்கள் விலை விவரம் (ரூபாயில்):
மத்தி-200, உளி-250, கிழங்கா-200, விலா-500, மடவை-350, அயிரை-200, வஞ்சிரம்-900, ஏட்டை-400, சங்கரா-300, ஜிலேபி-100, கட்லா-130, ரோகு-130.
- கோவிலுக்கு வரும் பக்தா்கள் மீன்களுக்கு பொரி உள்ளிட்ட உணவு பொருள்களை அளிப்பது வழக்கம்.
- கோவில் நிா்வாகத்தின் அலட்சியத்தாலே மீன்கள் உயிரிழந்து மிதந்தாக பக்தா்கள் தெரிவித்தனா்.
அவினாசி :
அவிநாசியில் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உள்ளது. இக்கோவிலில் பழமையான தெப்பக்குளம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தா்கள், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி உள்ளிட்ட உணவுப்பொருள்களை அளிப்பது வழக்கம்.
இந்தநிலையில், புதன்கிழமை காலை, கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் உயிரிழந்து மிதந்தன. இதையடுத்து, கோவில் நிா்வாகத்தினா் உயிரிழந்த மீன்களை அப்புறப்படுத்தினா். கோவில் நிா்வாகத்தின் அலட்சியத்தாலே தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள் உயிரிழந்து மிதந்தாக பக்தா்கள் தெரிவித்தனா்.
- கோட்டியால் நல்ல தண்ணீர் ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன
- இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோட்டியால் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நல்ல தண்ணி ஏரி, கிராமத்தின் பெரும்பகுதி தண்ணீர் தேவையை தீர்த்து வருகிறது. ஊராட்சி சார்பில் மேல்நிலைத் நிறுத்திய தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. மேலும் கால்நடைகளுக்கான தண்ணீர் தேவைகள், மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு குளிப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு கோட்டியால் கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த ஏரியில் கடந்த சில மாதங்களாக மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதக்க துவங்கின. இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தினருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி ஏரியை முழுவதும் தூர் வாரி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி நிறுத்தப்பட்டது.தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீன்கள் குவியல் குவியலாக செத்து கரை ஒதுங்கி மிதக்கிறது.
இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஏரியிலிருந்து செத்து மிதக்கும் மீன்களை பறவைகள் ஏரியிலிருந்து கொத்தி சென்று அருகில் உள்ள வீடுகளின் கூரைகள் மொட்டை மாடி தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் போடுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி கிராமத்தின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மண்ணின் தன்மை மாறியதால், தண்ணீரில் விஷத்தன்மை ஏற்பட்டதா? அல்லது ஏதாவது விஷமிகளின் செயலா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.
- மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள்.
சென்னை:
சென்னையில் மீன்கள் விலை அதிகரித்தாலும் மீன்கள் வாங்க இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 -ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.
சென்னை திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க செல்ல வில்லை. சென்னை காசி மேடு துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியிலும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் தமிழகத்து மார்க்கெட்டுகளுக்கு வருகின்றன. இதனால் மீன்விலை அதிகரித்து உள்ளது.
சென்னை சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்பட்ட மீன் விலை வருமாறு:-
சங்கரா கிலோ-ரூ.300, நெத்திலி- ரூ.250, வஞ்சிரம்-ரூ.1000,இறால்-ரூ.350,நண்டு -ரூ.400,சீலா-ரூ.400, வவ்வால் -ரூ.700, கட்லா-ரூ.300, சுறா -ரூ.450, மத்தி-ரூ.200 மீன்பிடி தடையால் அனைத்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது.
பொதுமக்கள் சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன்கள் வாங்க ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதேபோல நொச்சிக் குப்பம், பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் இன்று திரண்டனர். இதனால் அங்கு மீன் விற்பனை களைகட்டியது.
தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்து உள்ளார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் ஒன்று, அந்த மனிதரின் தொண்டைக்குள் விழுந்துள்ளது.
5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்து முன்னேறி உள்ளது. ஆனால், குறுகலான பகுதியில் அதனால் வெளியே வர முடியவில்லை. தொண்டைக்கும், சுவாச குழிக்கும் இடையில் அந்த மீன் சிக்கி கொண்டது. இதனால், பிராணவாயு செல்லும் வழி அடைப்பட்டது. இதில் திணறி போன அந்த நபர் தொண்டையை இறுக பிடித்து கொண்டார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. மீன் சிக்கி இருந்த சரியான இடம் கண்டறியப்பட்டு, அவசரகால அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதுபற்றி மருத்துவமனையின் அதிகாரி செர்ம்ஸ்ரீ பாத்தோம்பனிகிராட் கூறும்போது, நீரில் இருந்து துள்ளி குதித்து ஒருவரின் தொண்டையில் மீன் சிக்கிய சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.
இதற்கு முன் இதுபோன்ற விசயங்களை நான் கேள்விபட்டதே இல்லை. எங்களது நோயாளியின் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாத வகையில் மருத்துவர்கள் செயல்பட்டனர். அவரை காப்பாற்றி விட்டனர் என கூறியுள்ளார். இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், தாய்லாந்தின் ஆவோ டான் கூ பீச்சில், நீச்சலில் ஈடுபட்டிருந்த சுற்றுலாவாசியான நொப்படோல் ஸ்ரீங்கம் என்பவரின் தொண்டையில் ஊசி மீன் ஒன்று குத்தியது. இதில், அவரது நிலைமை மோசமடைந்தது.
நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தை குத்தகைக்கு எடுத்திருந்தவர் நேற்று மீன் பிடிப்பதற்காக அங்கு சென்றார்.
இதற்காக இரவில் டீசல் மோட்டார் மூலம் குளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று கொண்டிருந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இன்று காலை குளத்தின் அருகே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மீண்டும் பொதுமக்கள் உடையார்பட்டி குளத்தில் திரண்டனர்.
அப்போது அந்த பகுதி மக்கள் கூறுகையில், குளத்தில் இருந்து தண்ணீரை வீணாக வெளியேற்றக்கூடாது. அவ்வாறு வெளியேற்றுவதால் குளத்தை சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிடும்.
இந்த குளத்தை நம்பி சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஏராளமான கிணறு, ஆழ்துளை கிணறுகள் அமைந்துள்ளது. தற்போது குளத்தில் இருந்து நீரை வெளியேற்றாமல் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை மனுவாக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் சமர்ப்பித்து அவர்களின் வழிகாட்டுதல்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்