என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கெட்டுப்போன 100 கிலோ மீன்கள் பறிமுதல்
- வாரச்சந்தையில் கெட்டுப்போன 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி சாலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த வாரச்சந்தையை தேவகோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள 100-க் கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, தேனி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் இச்சந்தையில் வியாபாரம் செய்து வருகிறார்கள். சமீப காலமாக தரம் குறைந்த மீன்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பிரபாவதி ஆேலாசனையின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன் தலைமையில் மாணிக்கம், நகராட்சி பணியாளர்கள் வாரச்சந்தையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது 100 கிலோ கெட்டுப்போன மீன்கள், 50 கிலோ தரம் குறைந்த கருவாடு, 50 கிலோ அழுகிய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மீன், கருவாடு, மாம்பழங் களை நகராட்சி பணி யாளர்கள் அழித்தனர்.
மேலும் வியாபாரிகளிடம் உள்ள தராசு, எடைக்கற்கள் ஆகியவற்றையும் அதிகாரி கள் அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்