search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அரசு மீன் பண்ணையில் 2 ஆண்டுகளில் 35.97 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி
    X

    மேட்டூர் அரசு மீன் பண்ணையில் 2 ஆண்டுகளில் 35.97 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி

    • மேட்டூர், அரசு மீன் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளில் 35 கோடியே 97 லட்சம் நுண் மீன்குஞ்சு கள், 2 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரம் மீன் விரலிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
    • 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரம் மீன் விரலிகள் மேட்டூர் அணையில் மீன் உற்பத்தியை பெருக்க இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நுண்மீன் குஞ்சுகளை விரலிகளாக வளர்த்தெடுக்கும் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட மீன்வளர்ப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

    சேலம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் 2 எக்டேர் பரப்பளவில் புதிய பண்ணைகுட்டை அமைக்க 6 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மானியம் உள்ளிட்ட, மீன் வளர்க்கும் பலருக்கு மானியம் வழங்கப்பட்டு உள்ளன.

    பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன்வளர்ப்பை மேம்படுத்த ஏதுவாக, மீன்குஞ்சு, மீன் தீவனம், உரங்கள், பண்ணை பொருட்கள், மீன்கள் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பொருட்கள் 50 சதவீதம் மானியத்தில் ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வீதம் 6 பயனாளி களுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

    மேட்டூர், அரசு மீன் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளில் 35 கோடியே 97 லட்சம் நுண் மீன்குஞ்சு கள், 2 கோடியே 42 லட்சத்து 85 ஆயிரம் மீன் விரலிகள் உற்பத்தி செய்யப்

    பட்டுள்ளன. மேலும், 1 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரம் மீன் விரலிகள் மேட்டூர் அணையில் மீன் உற்பத்தியை பெருக்க இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

    Next Story
    ×