search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire accident"

    • ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகு (வயது 33). இவர் ஈரோடு-சக்தி மெயின் ரோடு வெள்ளாளபாளையம் பிரிவு அருகே சொந்தமாக ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் ரகு ஒர்க் ஷாப்பில் பழுதாகி நின்ற ஒரு காரை சரி செய்து ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

    ஒர்க் ஷாப்பில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை ஒர்க் ஷாப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்களில் ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    அந்த கார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காரும் தீ பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக கோபி செட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஒரு கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மற்றொரு கார் பாதி எரிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

    மேலும் விபத்து நடந்த ஒர்க் ஷாப் அருகே பெட்ரோல் பங்க் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கோபி செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
    • மாணவர்கள், விடுதி ஊழியர்கள் வெளியே ஓடினர். ஆனால் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி கொண்டனர்.

    ஈராக்கின் வடக்கு பகுதியான எர்பில் உள்ள சோரன் பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழக விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஒரு அறையில் தீப்பிடித்து மற்ற அறைகளுகுகு வேகமாக பரவியது.

    கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் மாணவர்கள், விடுதி ஊழியர்கள் வெளியே ஓடினர். ஆனால் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி கொண்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து, பிம்ப்ரி- சின்ச்வாட் நகராட்சி ஆணையர் சேகர் சிங் கூறுகையில், "2.45 மணியளவில் தலவாடேயில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்பு படைக்கு அழைப்பு வந்தது.

    பொதுவாக பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்னும் மெழுகுவர்த்திகளை தொழிற்சாலை தயாரித்து வந்துள்ளது.

    பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை" என்றார்.

    மேலும், "காயமடைந்தவர்கள் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக" ஆணையர் தெரிவித்தார்.

    • ஓ.எம்.ஆர். சாலையில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து.
    • பெட்ரோல் பங்க் அருகில் இருந்தவர்கள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.

    சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கந்தன்சாவடி பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக பெட்ரோல் பங்க் அருகில் இருந்தவர்கள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.

    மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவுவதை தடுத்து நிறுத்தினர். தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓ.எம்.ஆர். சாலையில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

    • தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது.
    • பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரிகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் பி.என். ரோட்டில் தனியாருக்கு சொந்தமான அட்டை கம்பெனி உள்ளது. இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    மதியம் சுமார் 1 மணி அளவில் கம்பெனியின் 3-வது மாடியில் இருந்து கரும்புகை குபு குபு என வந்தது. உடனே அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் மாடியில் இருந்து அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கினர். மேலும் அங்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    உடனே இதுகுறித்து திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே மேலும் 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் வானுயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவதியடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 

    • தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட கலெக்டர் குடியிருப்புக்கு பின்புறம், ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்றிரவு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கி உள்ளது.

    இதனை அருகே இருந்தவர்கள் பார்த்து தருமபுரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தீ கட்டுக் கடங்காமல் மளமளவென எரிந்தது. பின்னர், அரூர், பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கபட்டு கொளுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் போராடி அணைத்தனர்.

    மேலும், தீ விபத்து நிகழ்ந்த பிளாஸ்டிக் கம்பெனி அருகில் தனியார் பேட்டரி கம்பெனி, லாரி பார்க்கிங் உள்ளிட்டவைகள் இருப்பதால் அங்கு தீ பரவாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த தீ விபத்தில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • (வயது 43). இவர் கடந்த 20 வருடங்களாக சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் வீரபாண்டியார் நகரில் ஸ்ரீ சிவசக்தி கம்யூனிகேஷன் என்ற பெயரில் பழைய செல்போன் கடை நடத்தி வருகிறார்.
    • காலை 9 மணி அளவில் கடை பூட்டப்பட்டிருந்த நிலையில் கடையின் உள்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை அந்த பகுதியினர் பார்த்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு (வயது 43). இவர் கடந்த 20 வருடங்களாக சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் வீரபாண்டியார் நகரில் ஸ்ரீ சிவசக்தி கம்யூனிகேஷன் என்ற பெயரில் பழைய செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் செல்போன்கள் பழுது சரி பார்த்து கொடுப்பதுடன் பழைய செல்போன்களையும் வாங்கி சரி செய்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    தீ விபத்து

    இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் கடை பூட்டப்பட்டிருந்த நிலையில் கடையின் உள்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியதை அந்த பகுதியினர் பார்த்தனர். உடனடியாக சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அங்கு எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அக்கம் பக்கம் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    ஆனாலும் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் செல்போன்கள் என சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மின் கசிவு

    மின் கசிவு காரண மாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்திற்கு சேலம் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன் மற்றும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர்.

    • வீட்டின் சுவிட்ச் பாக்சில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென கிரைண்டர் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது.
    • அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பாப்பாத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் மாலையகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது50). இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். 100-நாள் வேலை மற்றும் தோட்ட கூலி வேலை பார்த்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவிட்ச் பாக்சில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென கிரைண்டர் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. உடனே அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் மளமளவென தீ பற்றி எரிந்தது.

    தீ கரும்புகையுடன் கொளுந்துவிட்டு எரிந்து வீடு முழுவதும் பரவியதால் அலறி அடித்து துடித்த பாப்பாத்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறது போராடி தீயை அணைத்தார். இருந்தபோதும் இந்த தீ விபத்தில் வீட்டின் உடமைகள், பித்தளை, வெள்ளி குத்து விளக்குகள், தங்க ஆபரணங்கள் உட்பட விலையுயந்த பொருட்கள் மற்றும் சேமித்து வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்து சாம்பலாயின.

    கஷ்டப்பட்டு கூலி வேலை பார்த்து சேமித்து வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானதால் பாப்பாத்தி கண்ணீர் விட்டு கதறி அழுதார். தனக்கு அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • படகில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா எனவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், 50க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளது. மேலும், படகில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா எனவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு பணி துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • தீயணைப்புத்துறையினருக்கு தகவல்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள லட்சுமி நகர் பகுதி யில் ஆரணி டவுன், ஆரணிப்பா ளையத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் பானிபூரி தயாரித்து மொத்த விற்ப னை செய்து வருகிறார்.

    நேற்று மாலை பானிபூரி செய்து கொண்டிருந்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டு அங்கிருக்கும் பொருட்கள் எரிந்தது. இதனால் உடனடியாக தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பூபாலன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இதனால் அங்கு பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து ஆரணி நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45).
    • காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    முத்தூர் : 

    காங்கயம் அருகே சிவன்மலை, செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45). அப்பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தகர குடிசை வீட்டில் சிவகுமாரின் தாயார் நாச்சம்மாள் நேற்று இரவு சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சமையல் கியாஸ் அடுப்பின் அருகே இருந்த ஓலையில் திடீரென தீ பிடித்தது. தீயானது மளமளவென பரவி குடிசை வீடு முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. வீட்டிலிருந்த பாத்திரங்கள் மூலம் தண்ணீரை எடுத்து ஊற்றியும் தீயை அணைக்க முடியாததால் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு நிலைய வாகனத்தின் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை முற்றிலும் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அனைவரும் எவ்வித தீக்காயங்களும் இன்றி உயிர் தப்பினர். குடிசை வீட்டில் நகை, பணம் உள்ளிட்ட எந்த ஒரு பொருளும் இல்லாததால் பொருட் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் வீட்டில் இருந்த பாத்திரங்கள் முற்றிலும் இருந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×