search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே மின் கசிவால் கிரைண்டர் வெடித்து தீ விபத்து: ரூ.50 ஆயிரம் பணம் கருகியது
    X

    தீயில் கருகிய ரூபாய் நோட்டுகளை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல் அருகே மின் கசிவால் கிரைண்டர் வெடித்து தீ விபத்து: ரூ.50 ஆயிரம் பணம் கருகியது

    • வீட்டின் சுவிட்ச் பாக்சில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென கிரைண்டர் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது.
    • அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பாப்பாத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் மாலையகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது50). இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். 100-நாள் வேலை மற்றும் தோட்ட கூலி வேலை பார்த்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவிட்ச் பாக்சில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென கிரைண்டர் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. உடனே அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் மளமளவென தீ பற்றி எரிந்தது.

    தீ கரும்புகையுடன் கொளுந்துவிட்டு எரிந்து வீடு முழுவதும் பரவியதால் அலறி அடித்து துடித்த பாப்பாத்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறது போராடி தீயை அணைத்தார். இருந்தபோதும் இந்த தீ விபத்தில் வீட்டின் உடமைகள், பித்தளை, வெள்ளி குத்து விளக்குகள், தங்க ஆபரணங்கள் உட்பட விலையுயந்த பொருட்கள் மற்றும் சேமித்து வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்து சாம்பலாயின.

    கஷ்டப்பட்டு கூலி வேலை பார்த்து சேமித்து வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானதால் பாப்பாத்தி கண்ணீர் விட்டு கதறி அழுதார். தனக்கு அதிகாரிகள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×