என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmer suicide"
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் டிரஸ்சரி காலனியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் பாலமுருகன் (வயது 36). இவர்களுக்கு பாச்சலூர் பகுதியில் காபி தோட்டம் உள்ளது. பாலமுருகனுக்கும் திண்டுக்கல் அருகே உள்ள அம்மா பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (25) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுபாஷ் கிருஷ்ணன் என்ற 2½ வயது மகன் உள்ளான்.
கிருஷ்ணவேணிக்கும் அம்மா பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக் காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். கண்ணன் பெங்களூரில் சொந்தமாக கால்டாக்சி வைத்து ஓட்டி வருகிறார்.கிருஷ்ணவேணி கணவனுடன் கோபித்துக் கொண்டு அடிக்கடி கண்ணனை பார்க்க சென்றுள்ளார்.
3 முறை கண்ணனுடன் தான் வாழ்வேன் என்று கூறி அவருடன் சென்றுள்ளார். பெரியவர்கள் கிருஷ்ணவேணியை அழைத்து பேசி அறிவுரை கூறி கணவனுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பாலமுருகன் பாச்சலூர் தோட்டத்துக்கு சென்று விட்டார். கிருஷ்ணவேணி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அங்கு மகனை விட்டு விட்டு கள்ளக்காதலன் கண்ணனுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து அறிந்ததும் பாலமுருகன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
தனது குடும்ப மானம் கெட்டு விட்டதே என்று புலம்பி வந்துள்ளார். மேலும் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்துள்ளார். அதன்படி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் அவரது பெற்றோர் பாலமுருகனின் அறையை தட்டிய போது திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் இறந்த விஷயம் தெரிய வந்தது. இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள பால்பண்ணை தெரு தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜூ. (வயது 31). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து விட்டனர். இதனால் ராஜூ கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் சோகத்தில் இருந்து வந்துள்ளார்.
மேலும் ராஜூவின் மனைவி ராமபிரியா மற்றும் குழந்தைகள் இறந்தது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராஜூவின் பெற்றோர் உள்பட 3 பேர் மீது விசாரணை நடந்து வருகிறது.
இதனால் ராஜூ மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராஜூவின் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அழகப்ப சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பெரியநாயகம் (வயது 38), விவசாயி. இவரது மனைவி அருள்ஜெயா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மாலை பெரியநாயகம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பெரியநாயகம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பெரியநாயகம் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஜா புயலில் டெல்டா மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை பலத்த சேதமானது. புயலில் ஏராளமான மரங்கள், பயிர்கள், மின்கம்பங்கள், குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் அனைத்தும் இடிந்து விழுந்து சேதமானது.
விவசாயிகளுக்கு இந்த புயல் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசமாகின. மேலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் மரங்கள் அழிவை சந்தித்துள்ளன. இந்த அழிவில் இருந்து மீண்டு வருவதற்கு விவசாயிகளுக்கு இன்னும் பல ஆண்டு காலம் பிடிக்கும்.
இந்த நிலையில் தஞ்சையை சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் புயலில் கரும்புகள் சாய்ந்து சேதமானதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையை அடுத்த சோழகிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 52). விவசாயியான இவர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் ஊழியராகவும் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சாமிக்கண்ணு தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். ஆனால் கஜா புயலில் அவருடைய கரும்பு சாய்ந்து சேதமானது. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அவர் தனது குடும்பத்தினரிடம் புலம்பி வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற விவசாயி சாமிக்கண்ணு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் அவர் கரும்பு கொல்லையில் மயங்கி கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது சாமிக்கண்ணு விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பது தெரியவந்தது.
உடனே அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாமிக்கண்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டு தஞ்சையில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது கரும்பு விவசாயி சாமிக்கண்ணும் தற்கொலை செய்த சம்பவம் டெல்டா விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #FarmerSuicide
திருச்சி மாவட்டம் லால்குடி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 33). இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் வாழைகள் பயிரிட்டிருந்தார். இந்தநிலையில் கஜா புயலால் அவர் பயிரிட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் கடந்த 24-ந்தேதி விஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யப்ப பக்தரான ரவி தற்போது சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்