என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ariyalur govt hospital"

    • கழிவறைக்குள் இருந்து குழந்தையின் குரல் கேட்டு அங்கு நின்றவர்கள் திரண்டனர்.
    • மருத்துவமனை போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கண்டிராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் லாரா.

    நிறைமாத கர்ப்பிணியான இவர் இன்று காலை அரியலூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக வந்தார்.

    அரசு மருத்துவமனை வார்டு பகுதிக்கு வந்ததும் லாராவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் அங்கிருந்த கழிவறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. உடனே அவர் குழந்தையை கழிவறைக்குள் வைத்து அமுக்கியுள்ளார்.

    கழிவறைக்குள் இருந்து குழந்தையின் குரல் கேட்டு அங்கு நின்றவர்கள் திரண்டனர்.

    அங்கு கதவை திறந்ததும் உள்ளே கழிவறை குழிக்குள் இறந்த நிலையில் குழந்தை கிடந்தது. உடனே லாரா அங்கிருந்து தப்ப முயன்றார். இதையடுத்து அப்பகுதியினர் அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவமனை போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தை பிறந்ததுமே அந்த குழந்தையை லாரா துடிக்க துடிக்க கொலை செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக லாராவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தவறான உறவில் பிறந்ததால் குழந்தையை லாரா கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புற்று நோய் பாதிப்பால் விரக்தி அடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி மருதாம்பாள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லட்சுமணனுக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கால் பகுதியில் கேன்சர் நோய் வந்தது. இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை. 2 கால்களிலும் வலி அதிகமானது. 

    இதனால் சிகிச்சைக்காக லட்சுமணன் கடந்த 18-ந் தேதி அரியலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார். ஆனால் நோயின் தாக்கம் அதிகமாகி காலில் புண் ஏற்பட்டது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில்  நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் லட்சுமணன் சிறுநீர் கழிப்பதற்காக அங்கு உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர் தனது காலில் கட்டப்பட்டு இருந்த துணியை அவிழ்த்து அதன் மூலம் ஜன்னலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தனக்கு ஏற்பட்டிருந்த புற்று நோயை இனிமேல் சிகிச்சையால் காப்பாற்ற முடியாத என்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

    அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×