search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாமல்பட்டி அருகே விவசாயி தற்கொலை
    X

    சாமல்பட்டி அருகே விவசாயி தற்கொலை

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகேயுள்ள தென்னூர் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது65). விவசாயியான இவருக்கு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பல்வேறு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

    வயிற்றுவலி குணமடையாததால் மனமுடைந்த முனிராஜ் நேற்று மதியம் வீட்டில் தென்னை மரத்திற்கு வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டார். இதனால் மயங்கிய நிலையில் கிடைந்த அவரை உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×